Wednesday, December 12, 2018

ஜனாதிபதிக்கெதிரான கருத்து வெளியிட்டவர் மீது பொலிஸ் விசாரணைகளை ஆரம்பிக்கின்றது.

´புரவசி பலய´ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

உதய கம்பன்பில தலைமையிலான பிவித்துறு ஹெல உறுமய என்ற கட்சியின் செயலாளர் உப்புல் நிஸாந்த என்பவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் நிமித்தம் மேற்படி விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. இதன் பிரகாரம் நேற்று அவரிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

ரத்தனபிரிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பிரகாரம் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் குறித்த கருத்துக்கள் தொடர்பில் கிடைக்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் ஜனாதிபதி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com