Monday, December 10, 2018

ஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார். அழகலிங்கம் ஜேர்மனி

சிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது. வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல் நெருக்கடி தேசிய மற்றும் வெளிநாட்டு தத்துவங்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகவே வந்தது.

வெளிநாட்டு சக்திகளுக்கு விட்டுக் கொடுக்காமல் அவர்களின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்குப் பயப்படாமல் தேசியவாத கொள்கையில் இறுக்கமாக நின்று செயற்பட்டபோது பழைய ஏகாதிபத்தியத்தின் நிழல்கள் நம் வழியில் குறுக்கே வந்தன.

தற்போதைய நெருக்கடி நமது நாட்டின் விவகாரங்கள் மீது உலக சக்திகள் கவலைக்குரிய விதமாக நடந்ததால் ஏற்பட்டது. இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் அல்லது உலக வரைபடத்தில் அது இருக்கும் இடம் காரணமாகவே அது ஏற்பட்டது. நாம் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து கொள்ளாமல் சுயாதீனமாக முன்னேறுவதற்கான தத்துவத்தைப் பின்பற்றுவோமானால் வெளிநாட்டு சக்திகள் இயல்பாகவே ஒரு சவாலாக வந்துவிடும்.

ஜனாதிபதி சிறிசேனாவுக்குப் புலப்படாதது என்ன. முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரம், அதன் சந்தை, அதன் நெருக்கடி, அதன் போர்கள் அனைத்தும் ஒரு சர்வதேச குணாம்சம் கொண்டது என்பது இப்பொழுதுபோல் ஒருகாலமும் மிகவும் தெளிவாகத் தெரிந்ததில்லை.

நாம்வாழும் இந்தச் சகாப்தம் ஓர் ஏகாதிபத்திய சகாப்தம். அதாவது நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உலகப் பொருளாதாரமும் மற்றும் உலகக் கொள்கைகளும் வந்த சகாப்தம். ஒரு நாடு தனது சொந்த நாட்டில் அபிவிருத்தியான நிலைமைகள் மற்றும் அரசியற் போக்குகளிலிருந்து தனது அரசியல் வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. தத்துவத்தையும் நடைமுறையையும் ஐக்கியப் படுத்துவதன் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் என்பதே மார்க்சியத்தின் கருத்தாகும்.

நடைமுறை இல்லாமல் கோட்பாடு வெறும் வெற்றுக் கோம்பையாகும். கோட்பாடு இல்லாத நடைமுறையானது குருட்டுத் தனமாகும். கோட்பாடு செயலுக்கு வழிகாட்டியாகும். தத்துவத்தையும் நடைமுறையையும் தொடர்ந்து ஒன்றோடு மற்றொன்று இசைந்து இணைந்துபோகச் செய்யவேண்டும். நடைமுறை அனுபவம் இல்லையேல், கோட்பாடு கண்டதே காட்சி கொண்டதே கோலமாகி மலடாகி விறைத்துச் சிதைந்துவிடும்.

கோட்பாட்டின் புறக்கணிப்பு இலக்கற்ற நடைமுறைக்கு வழிவகுக்கிறது. „உழைப்பாளர்களின் விடுதலை என்பது ஓர் உள்ளூர் பிரச்சனையோ அல்லது ஒரு தேசியப் பிரச்சனையோ அல்ல, ஆனால் அது ஒரு சமூக பிரச்சனை, நவீன சமுதாயம் இருக்கும் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியது, மற்றும் அதன் தீர்வு மிக முன்னேறிய நாடுகளினிடையே உள்ள உடன்பாட்டையும் உடன் நிகழ்வையும் நடைமுறை மற்றும் கோட்பாட்டின் மீதான ஐக்கியத்தையும் பொறுத்திருக்கிறது.'

சர்வதேச தொழிலாளர்களின் சங்கத்தின் விதிகள்-1864-71 ஒரேயொரு கேள்வி: சிறி;சேனாவை ஏன் ஜனாதிபதி யாக்கினாhகள். ஏன் ஒரு றம்பண்டாவையும் முத்துமெனிகாவை ஆக்கவில்லை. காரணம் சிறீ சேனா ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாகச் சேவகஞ் செய்வார் என்ற அறிகையின் பேரிலும் , உத்தரவாதத்தின் பேரிலும்தான். முதலாளித்துவம் மிகக் கீழ்தட்டிலிருந்தவர்களை அரசியல் வானின் உச்சத்திற்கு உயர்த்தியிருக்கிறது.

அவர்கள் தங்களது முந்திய சமூகத்தட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பார்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மிக விசுவாசமாகச் சேவகஞ் செய்வார் என்பதைக் கண்டதின் பேரில்தான்.

உதாரணம்: லவரியா விற்ற பிறேமதாசா ஜனாதிபதியாக உயர்த்தப் பட்டார். தேத்தண்ணிக் கடையில் தேத்தண்ணி ஆற்றிய மோடி பிரதமர் பதவிக்கு உயர்த்தப் பட்டார். பள்ளிக் கூடத்திற்குக் கள்ளமொழித்த பிரபாகரன் தேசியத்தலைவராக உயர்த்தப் பட்டார். கறுப்பின மனிதனா பறாக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக உயர்த்தப் பட்டர்ர். மிகக் கீழ் மட்டத்திலிருந்த சோசலிசவாதி முசோலினி உயர்த்தப் பட்டார். கீழ் அடுக்கைச் சேர்ந்த கிட்லர் உயர்த்தப் பட்டார். எல்லோருமே கண்டு கேட்டிராத ஒடுக்குமறையளாராக நடந்து முதலாளிவர்க்கத்திற்கு அவர்களது விசுவாசத்தைக் காட்டினார்கள்.

கடாபி கொல்லப்படும்பொழுது ஒபாமாவும் கில்லரி கிளங்டனும் அந்தக் கொலையைத் தொலைக்காட்சியில் பார்ததுச் சிரித்து வயின் குடித்ததை தொலைக் காட்சியில் காட்டினார்கள். ஜனாதிபதி சிறிசேனாவின் ஏகாதிபத்தியம் பற்றிய சுவிசேசம் இலங்கை மக்களுக்குப் ஒரு பொழுதும் புதிதாக இருக்காது. அவர்கள் தற்காலிகமாக ஏமாற்றப் பட்டர்ர்கள். ஆனால் வெகுசீக்கிரத்தில் அந்த உறங்குநிலையிலிருந்து மீளுவார்கள்.

இன்றய பாராளுமன்ற நெருக்கடி பாராளமன்றத்தை இல்லாமற் செய்யவேண்டிய அவசியத்தைக் கற்கும் நெருக்கடி. சம்பந்தனாலும் சுமந்திரனாலும் ஒரு செக்கனில் அரசியற் சட்டத்தை மீறியதைக் கண்டதை ஏழு சுப்பிறீம் கோட்டு நீதிபதிகாளால் இரண்டு கிழமையாகியும் அரசியற் சட்டத்தை மீறினதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓரு சின்ன இராச தந்திரத் தவறு நடந்தால் இலங்கை இந்து சமுத்திரத்தில் தாண்டுவிடும்.

கிட்லர் ஒரு முறை சொன்னான் : இங்கிலாந்துக்குக் கீழே ஓர் ஒட்டை துளைத்து டைனமெற்றுகளைச் செருகிக் கொழுத்திவிட்டால் இங்கிலாந்து கடலுக்குள் தாண்டுவிடும். இங்கிலாந்து தாழா விட்டர்லும் இங்கிலாந்தின் கொலனி தாழுக்கூடும். இலங்கை இந்தியாவுக்கும் நண்பன். சீனாவுக்கும் நண்பன். அமெரிக்காவும் நண்பன். எல்லாருக்கும் நண்பன். ஒருவருக்கும் விசுவாசமாக இருக்க மாட்டான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com