Thursday, December 13, 2018

நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேவிபி தலைவர் அநுர குமார திஸாநாயக்க

மைத்திரி மஹிந்த கூட்டனி ஜனநாயகத்திற்கு சவாலாகவே செயற்பட்டனர். கடந்த ஒன்றரை மாதங்களாக நடைப்பெற்ற சிக்கலான சூழ்நிலைக்கு உயர் நீதிமன்றம் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உலக வரலாற்றில் எந்த அரசாங்கத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு விதித்தது இல்லை. பாராளுமன்றத்தை கலைத்து ஜனநாயகத்திற்கு எதிராக சர்வதிகாரமாக செயற்படவே ஜனாதிபதி முற்பட்டார்.

சர்வதேசத்தினது தலையிட்டிற்கு எதிராகவும் மக்கள் மத்தியில் காணப்பட்ட குழப்பமான எண்ணங்களுக்குமான வெற்றியாகவே இதனை கருத வேண்டும். மைத்தரி மஹிந்த சர்வதிகார செயற்பாட்டிற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது என அவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com