Thursday, December 6, 2018

உச்ச நீதிமன்றை சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்பு

நாட்டின் நிலைமைகளை ஸ்திரமற்றதாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்றை கலைப்பதாக வெளியிடப்பட்ட அரசநாளிதழ் மீதான மனு உச்ச நீதிமன்றில் இன்று மூன்றாவது நாளாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

இது குறித்த தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளதுடன் தீர்ப்பின் பின்னர் நாட்டில் பெரும் வன்செயல்கூட வெடிக்கலாம் என்ற நிலையில், உச்ச நீதிமன்றினைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் நாடு எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமைகளை எதிர்கொள்ள பாதுகாப்பு படையினர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com