Thursday, December 27, 2018

துர்நாற்றம் வீசிய இடத்திலிருந்து உடலம் மீட்பு...

பம்பலப்பிட்டி பொது குடியிருப்புப் தொகுதியில் இருந்து 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தக் குடியிருப்புத் தொகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார்கள். தகவலறிந்த காவல்துறையினர் குறித்த குடியிருப்புத்
தொகுதிக்கு விரைந்து, விசேட சுற்றி வளைப்பை மேற்கொண்ட நிலையில், உடலம் மீட்கப்பட்டது.

அத்துடன், இது குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, ஹொரணை - மொரகஹஹேன - கனன்வில பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்த அப்பகுதி காவல்துறையினர், இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே இன்று தலவாக்கலை புகையிரத நிலையம் முன்பாகவும் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com