Thursday, December 13, 2018

பயங்கரவாத செயல்களுக்காக கைது செய்யப்பட்டிருப்போரை விடுவிப்பது ஆபத்தானது. சுசில் பிறேமஜெயந்த

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்காக விடுத்துள்ள நிபந்தனைகளில் மேற்படி நபர்களின் விடுதலையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது.

ஆனாலும் கடந்த காலங்களில் நீதித்துறை அமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான தலதா அத்துக்கொரல முன்னாள் புலிகளில் அதி பயங்கரமான குற்றச்செயல்களை மேற்கொண்டடவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களை நீதிமன்ற நடைமுறைகளுக்கு புறம்பாக விடுதலை செய்துவிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. அத்துடன் விடுதலை புலிகள் இயக்க போராளிகளை சட்டத்திற்கு முரணாக விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகள் என்று குறிப்பிடுபவர்களை விடுதலை செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் தமக்கு ஆதரவளித்தால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரணில் குறிப்பிட்டுள்ளமையாது பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com