Sunday, November 4, 2018

பாராளுமன்றை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானமாம். சபாநாயகரை எச்சரிக்கின்றது அரசு.

சபாநாயகர் தற்துணிவின் அடிப்படையில் பாராளுமன்றத்தை கூட்டின் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டு வரப்படும் என அரசாங்கத்தின் அரசியல் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஆயினும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டள்ளமையானது ஜனாதிபதி மூலமாகும். ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கும் வரை பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர்க்கு எவ்வித அதிகாரம் இல்லை என அரசியல் ஆய்வாளர்களும் சட்டத்தரணிகளும் கூறியுள்ளனர்.

மேலும் அரசியலமைப்பின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யின் அதிகாரத்தை மீறி யாரும் செயற்பட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சுகத கம்லத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தின் எதிர்வரும் அமர்வின் போது பெரும்பான்மை பலத்தை நீருபிக்க தற்போதைய பிரதமர், முன்னால் பிரதமர் ஆகியோரின் போட்டி பலமாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதேநேரம் ஆழும் கட்சியுடன் பலர் இணைந்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com