Saturday, November 17, 2018

பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு ஜனநாயக நாடொன்றுக்கு பொறுத்தமற்றதாம். பிரித்தானியா

இலங்கையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் முறையற்ற நடத்தையானது ஜனநாயக நடொன்றிற்கு பொருந்தகூடிய விடமல்ல என இலங்கைக்கான பிரித்தானிய உயரிஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் டூவிட் இட்டுள்ளார்.

'இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. மக்கள் வாக்குரிமையின் முலமாக தங்களுடைய பிரநிதியை தெரிவு செய்கின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் முறையாக நடத்தல் வேண்டும். ஆனால் இங்கு நடைப்பெற்ற நிகழ்வுகளை பார்க்கும் போது பாராளுமன்றத்தினை அவமரியாதை செய்துள்ளனர். மக்களுக்கு பொறுப்புகூற வேண்டிய இவர்களின் பொறுப்பற்ற நடத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.' என அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

அமெரிக்கா ஜப்பான் இந்தியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கலந்து கொண்ட சிங்கப்பூர் சந்திப்பொன்றின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com