Thursday, November 22, 2018

வழக்கு தாக்கலுக்கு உட்படாத தமிழ் விளக்கமமறியல் கைதிகளை விடுவிப்பதாக அறிவிப்பு!

நீண்ட நாட்களாக தடுப்புக்காவலில் வழக்குத்தாக்கல் செய்யப்படாதிருக்கும் தமிழ் விளக்கமறியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்திருப்பதாக ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் ஹொரண லக்ஸ்மன பியதாச தெரிவித்துள்ளார். ஜனவரிக்கு முன்னதாகவே விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாரிய குற்றமிளைத்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதானது பாதிக்கப்பட்டோருக்கான நீதிமறுப்பு என்ற கருத்து நிலவி வரும்நிலையிலேயே இவ்வறிவித்தல் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்டுள அரசியல் அசமந்த நிலையிலும், குறித்த கைதிகள் விவகாரம் தமிழ் அரசியல்வாதிகளின் வாக்குப்பிச்சைக்கான துரும்பாக காணப்படும் நிலையிலும், குறித்த நபர்களை விடுதலை செய்துவிட்டால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மேடையில் முழங்குவதற்கு காரணங்கள் இருக்காது என மைத்திரிபால செக் வைக்கை முற்பட்டிருக்கலாம் என இலங்கைநெட் நம்புகின்றது.

இதேநேரம் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் அரசரங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com