Tuesday, November 6, 2018

பொலிஸ் திணைக்களத்திலும் ஆட்சிமாற்றம் நிகழலாம். போட்டியும் சூடுபிடித்துள்ளது.

பொலிஷ் மா அதிபர் சுஜித்ஜயசுந்தர தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தமையும், தற்போதுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவராகவும் அவர் காணப்படுகின்றார்.

இந்நிலையில் அவர் பதவியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அப் பதவிக்கு யார் தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பான பல கதைகள் இலங்கை பொலிஷ் திணைக்களத்தில் பரவிய வண்ணம் உள்ளன.

பொலிஷ் திணைக்களத்தினுள் உள்ள சிரேஷ்ட பொலிஷ் அதிகாரிகளுள் முன்னிலை வகிப்பவர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஷ். எம். விக்ரம சிங்க ஆவார். இவருக்கு அடுத்தப்படியாக பொலிஷ் திணைக்கள நிர்வாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன ஆவார். இவர்களுள் ஒருவர் இப் பதவிக்கு தெரிவு செய்யப்படலாம் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றது.


இவர்களுள் எதிர் வரும் ஏப்ரல் 22ம் திகதி எஷ். எம். விக்ரம சிங்க அவர்கள் ஓய்வு பெறவுள்ளார். சி. டி. விக்ரமரத்ன அவர்கள் 2023 மார்ச் 26 ம் திகதி ஓய்வு பெறுவார்.

இவர்களில் எவரை சுயாதீன ஆணைக்குழு பரிந்துரைக்கும் என்பதில்தான் விடயம் தங்கியுள்ளது. அரசாங்கம் மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் சுயாதீன ஆணைக்குழுக்களில் எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை என்பதும் இங்கு அவதானிப்புக்குரியது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com