Wednesday, November 28, 2018

விக்கினேஸ்வரனின் பொலிஸ்பாதுகாப்பு வாபஸ்!

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொலிஸ்பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர் பதவிக்காலம் முடிவடைத்ததை தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு அவசியமில்லை என்ற காரணத்தினாலும், அவ்வாறு தொடர்ந்து பாதுகாப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்ற காரணத்தினாலும் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் அதிகாரி ஒருவர் இலங்கைநெட் இற்கு தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் தொடர்ந்தும் சிங்கள பொலிஸ் அதிகாரிகளையே பாதுகாப்புக்கு வைத்திருந்தார் என்றும் அவர் தமிழ் பொலிஸாரை விரும்ப வில்லை என்றும் ஆழுனர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

எது எவ்வாறாயினும் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்கு தனது சம்பந்தி வாசுதேவவின் உதவியை விக்னேஸ்வரன் நாடியுள்ளதாக அரசியல் வாட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com