Thursday, November 29, 2018

மைத்திரி-கரு சந்திப்பு நிறைவு பெற்றது. கட்சித் தலைவர்களுடன் தனித்தனியே சந்திப்பாம்.

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதிசெயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பானது இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் விதமாகவே அமைந்திருந்து.

சுந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டபோதும் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அறியமுடிகின்றது. அத்துடன் நாளை 30.11.2018 மீண்டும் சந்தித்து பேசுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com