Monday, November 26, 2018

மரணங்களுக்கு பொறுப்பானவனின் பிறந்தநாளை கொண்டாடும் பெருவிழா.

இந்த மாதம் பிரபாகரனின் பிறந்த நாளும், மறுநாள் பிரபாகரனின் சகாக்களின் மரணங்களை துக்க தினமாக அனுசரிக்கப்படும் ஒரு விசித்திரமான மாதமாகும். .

இதில் அதிசயம் என்னவென்றால் பிரபாகரனின் பிறப்பே அந்த மரணித்தவர்களின் மரணங்களுக்கு பொறுப்பு என்பதாக தெரியப்படுத்துகிறது. எனவே பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு மறுநாள். துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.

இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபின் 1981 இல் மாவட்ட சபை தேர்தலின்போது தியாகராசா கொலை, யாழ் நூலகம் அழிவுக்கு காரணமாக அமைந்தது. 1982இல் வவுனியாவில் விமானப் படையினர்மீது நடத்திய தாக்குதல் ஒரு சிறிய இனக் கலவரமாக வெடித்து திருகோணமலை வரை பரவியது. பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பொறுப்பாக இருந்த புளொட் அமைப்பு மக்கள் இழப்பை தவிர்க்கு முகமாக தாக்குதல் நடாத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது.

1985 இல் ரெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையம், மாங்குளம் ரயில் தாக்குதல்களை நடாத்தியது. ஆனால் அதன் பின்விளைவுகள் மக்களை பாதிக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தே நடாத்தியது. மக்களைப் பற்றிய ஒரு அக்கறையை வெற்றியோடு சேர்த்தே காட்டினார்கள்.

பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்பு என்றைக்குமே மக்கள் உயிர்கள் மேல் அக்கறை கொண்டதில்லை. மக்களைப் பற்றி கவலைப் பட்டதும் இல்லை. தம்மைப் பாதுகாக்க மக்களை அரணாக பாவித்தார்கள்.

1982 கந்தர் மடம் பாடசாலையில் இராணுவம் மீது புலிகள் நடாத்திய தாக்குதலின் விளைவாக அயலில் உள்ள ஏழைகளின் வீடுகளை இராணுவம் கொழுத்தியது. அந்த ஏழைகளுக்கு பல்க்லைக் கழக மாணவர்களே உதவினார்கள். புலிகள் தமது கொலைகளை எண்ணி சந்தோசப்பட்டனர்.

1983 இல் 13 இராணுவத்தினர் படுகொலையின் எதிரொலியாக யாழ் நகரத்தில் 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாடே இனக் கலவரத்தில் மூழ்கியது. வெலிக்கடை சிறையில் 52 கைதிகள் கொல்லப்பட்டனர். இதற்காக புலிகள் வருந்தியது இல்லை.

அதைத் தொடர்ந்து பல இடங்களில் தாக்குதல்களை நடாத்தினார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கிழக்கே பல தமிழ்க் கிராமங்களே காணாமல் போனது. அதைப் பற்றி எல்லாம் புலிகளோ பிரபாகரனோ கவலைப் படவில்லை. இறந்து போன இராணுவ, பொலிஸ் உடல்களை கணக்குப் போட்டு சந்தோசம் கொண்டாடினார்கள்.

ஒரு இராணுவ வீரனைக் கொல்ல பத்து, நூறு என அப்பாவிப் பொதுமக்களை பலிக்கடாக்களாக கொடுத்தார்கள். பல கிராமங்களும் விலையாக கொடுக்கப்பட்டது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல கொல்லப்பட்ட இராணவ எண்ணிக்கைகளை தமது வீரமாக காட்டுவார்கள்.அதன் எதிர் வினையாக பலியான மக்கள் உடல்களை படம் பிடித்து அனுதாபமும் தேடுவார்கள். இரண்டு மரணங்களுக்கும் புலிகளே பொறுப்பு என்பதை மக்களும் உணருவது இல்லை.

மற்ற அமைப்புகள் தாக்குதல் நடாத்தினால் அதை ஒரு சவாலாக கருதி இன்னொரு தாக்குதல் நடாத்துவார்கள். அங்கே மக்களைப் பற்றிய கவலைகளே இல்லை.

மேலும் தாக்குதல்களை தொடர வழியில்லாத இயலாமை காரணமாக சக அமைப்புகள்மேல் தாக்குதல்களை நடாத்தினார்கள். சிங்கள இஸ்லாமிய அப்பாவிகள் மேல் தாக்குதல்களை நடாத்தினார்கள்.

தமது நோக்கத்தை நிறைவேற்ற தமது உயிர்களை தக்க வைக்க பொதுமக்களை கேடயமாக்கினார்கள். தம்மை நியாயப்படுத்த பொதுமக்களை அழிவுக்குத் தள்ளினார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் உயிர்களைப் பற்றி கவலைப்படவில்லை.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் பலியான அத்தனை மரணங்களுக்கும் புலிகளும் பிரபாகரனுமே பொறுப்பாளிகள்.இவர்கள் நினைத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

அரச படைகள் நடாத்திய அராஜகங்கள் எல்லாம் புலிகளின் செயற்பாட்டின் எதிர்வினைகளே. எனவே முதல் குற்றவாளிகள் புலிகளே.அதன் தலைவர் பிரபாகரனே குற்றவாளி.

இது மரணங்களை நினைவு கூரும் மாதம்.அந்த மரணங்களுக்கு காரணமான பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாடும் மாதம்.பிரபாகரனே இத்தனை அழிவுகளுக்கும் பொறுப்பாளி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com