Wednesday, November 28, 2018

தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுற்ற அன்றிரவே அதிகாரங்கள் யாவற்றையும் கேட்டாராம் ரணில்! போட்டுடைக்கின்றார் தயாசிறி!

தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதுடன் தனக்கு சகல அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும், இதனை வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக அறிவிக்க வேண்டும் எனவும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிவடைந்ததும் அன்றிரவு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்ததாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார். இதன் மூலம் இவரின் அதிகாரத்தை கைப்பற்றும் சூழ்ச்சி எல்லோருக்கும் தெரியவந்தது.

அதாவது ஜனாதிபதியை கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு அனைத்து அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டுவர ரணில் விக்கிரமசிங்க முயற்சி செய்தார். தனக்கேற்றவாறு அரசியல் அமைப்புக்களை மாற்றுதில் ரணில் விக்கிரமசிங்க கைதேர்ந்தவர்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க செயற்பாடுகள் தொடர்பில் எதுவும் தெரியாது. அவருடன் 14 வருடங்கள் அரசியல் செய்த எனக்கு அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்துவைத்துள்ளேன்.

இவ்வாறான நிலையிலே முறையற்ற விதமான பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்கின்றார்கள் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com