Friday, November 2, 2018

நாங்கள் ஐவரும் ரணில் விக்கிரமசிக்கவிற்கே ஆதரவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் றிசார்ட் பதுயுதீன் தெரிவித்துள்ளார். இன்று சபாநாயகரை சந்தித்த பின்னர் மேற்படி நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :

ஜனாதிபதி அவர்கள் தவறான செயலை செய்திருக்கின்றார். அவர் மக்கள் வழங்கிய வாக்குகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். எங்களுடடைய கட்சி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக வாக்களிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும், மஹிந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் அதேநேரம் மஹிந்த பக்கம் சாயவேண்டும் என கட்சிக்கும் அழுத்தம் கொடுத்துவருவதாக அறியக்கிடைக்கின்றது.

இதேநேரம் முஸ்லிம் காங்கிரஸின் இரு உறுப்பினர்கள் மஹிந்த தரப்பினருடன் பேச்சு நடாத்தி வருகின்றார்கள் என்ற செய்தியை அக்கட்சியின் தலைமைப்பீடம் மறுத்துள்ளது.


இதற்­கி­டையில் மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வாகச் செயற்­படும் சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஒருவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் எம்.பி.க்களையும் சந்­தித்து மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டி­யதன் தேவை குறித்து வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக இரு கட்­சி­களின் வட்­டா­ரங்­களும் உறு­திப்­ப­டுத்­தின.

மேற்­படி இரு கட்­சி­க­ளையும் மஹிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு கோரும் சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் தான் ஈடு­பட்­டுள்­ள­தாக முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார்.

இதேநேரம் கட்சிகள் யாருக்கு ஆதரவு வழங்கினாலும் அவர்கள் செய்யும் ஒப்பந்தத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என மக்கள் மத்தியிலிருந்து பலமான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com