Sunday, November 18, 2018

பாராளுமன்ற மோதல் குறித்து 6 பேரிடம் விசாரணை

பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் குறித்து இதுவரை 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசாரணைக்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதாகவும் அதில் 5 பேர் தொடர்பான வைத்திய அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் கூரிய ஆயுதம் வைத்திருந்த எம்பி தொடர்பில் விசாரணை நடத்தவும் வீடியோ ஆதாரங்களை பெறவும் சபாநாயகரின் அனுமதி பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com