Friday, November 16, 2018

1000 ரூபாவும் மலையகத்து அரசியல்வாதிகளும். ஸ்ரெலா

ஐரோப்பியரின் வருகையால் தேயிலை தோட்டங்கள் உருவாகின. சுதேசியர்களின் வேலை பகிஸ்கரிப்பால் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படட்னர் இந்தியவம்சா வழியினர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தினர்.

இவர்கள் குதிரைகள் கட்டப்பட்ட இடங்களில் லயக் குடியிருப்புகளில் குடியமர்த்ப்பட்டனர். அந்நாளில் இருந்து இன்று வரை லயக்குடியிருப்பு வாழ்க்கையும் தேயிலைத்தோட்டமும் தலைவிதியாகி விட்டது.

அவர்களின் துன்பம் தொடரும் வண்ணமாக உள்ளது. எத்தனை அரசியல் தலைவர்கள் வந்து போயினர். ஆனால் ஒருவரும் எம்மக்களை பார்த்தது இல்லை.

மலையக தலைவர்கள் அனைவரும் அரசியல் மோகத்தில் திளைத்தார்கலே ஓழிய மலையகளை நாடியது தேர்தலின் போது மட்டும் தான். வாக்குரிமை போடும் மக்களும் பரம்பரை அரசியலுக்கும் சாராயத்திற்கும் அடிமையாகி போனார்கள்.

தொடரும் இத்துன்பம் இன்று 1000ருபாவில் ......எப்பொழுது பார்த்தாலும் பேச்சு வார்த்தை. ஆனால் நடப்பது ஒன்றும் இல்லை. ஒரு சாண் வயிற்றுக்கு இத்தனை போராட்டம். AC அறையில் பேச்சுவார்த்தை நடத்தும் முதலாளிமார்களுக்கு அடிமைகளாகவே கண்ணுக்கு புலப்டுகிறார்கள்hக எம் மக்கள்.

இன்று நடந்தது ஒரு எதிர்ப்பு போராட்டம். ஆட்சி மாறும் போது புற்றில் இருந்து வெளிவரும் ஈசல்கள் போல மலையக தலைமைகள் 1000 ரூபாவிற்காக வெளிப்பட்டுள்ளனர். அரசியல் இலாபத்திற்காக இல்லாமல் மக்களின் உண்மை நிலையை அறிந்து போராடுங்கள். மக்களை ஏமாற்ற வேண்டாம். அரசாங்கத்தின் பொறுப்பும் கூட.....

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com