Wednesday, October 31, 2018

பிரதமர் நியமனம் குறித்து கருத்து கூறமுடியாதாம் என்கின்றார் பிரத நீதிபதி.

பிரதமர் பதவி மாற்றம் அரசியல் அமைப்புக்கு முரணானது என்ற கருத்து வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அதன் நியாயம் குறித்து விளக்கமளிக்குமாறு சபாநாயகர் கடந்த 29ஆம் திகதியன்று சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கடிதத்திற்கு பதிலனுப்பியுள்ள பிரதம நீதியரசர், இலங்கையில் பிரதமர் பதவி மாற்றம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கருத்து கூறுவது பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றினை சட்ட ரீதியாக அணுகவேண்டும் என்ற செய்தியை அவர் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com