Saturday, October 6, 2018

உடைந்த கதிரைக்குக் கீழ் முறிந்த பனைமரம்- கீர்த்தி வீரசூரியா

1946ல் இருந்தே ஐரோப்பாவில் ஐக்கிய நாடுகளின் தலைமையிடமாக ஜெனிவா உள்ளது, இதில் தர்க்கரீதியான ஒரு தேர்வாக தோல்வியுற்ற உலக நாடுகள் சங்க நிறுவனத்தின் (உலக யுத்தத்தை தடுக்க முடியாத ஆரம்பகால நிறுவனங்களில் ஒன்று) கட்டிடங்கள்,வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் என்பன ஐக்கிய நாடுகள் சபையிடம் உள்ளன. பலயிஸ் டெஸ் நேஷனின் (தேசங்களின் அரண்மனை) முன்பாக உள்ள மிகப்பெரிய திறந்தவெளி சதுக்கத்தை ஒரு உடைந்த கதிரையின்( ஒரு 12 மீற்றர் உயரமான ஒரு கால் நொறுங்கிய நிலையிலுள்ள ஒரு கதிரை) நினைவுச் சின்னச் சிற்பம் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆரம்பத்தில் நிலக்கண்ணிவெடிகள் தொடர்பான ஒட்டவா உடன்படிக்கையை நாடுகளிடம் இருந்து கையெழுத்துப் பெறுவதற்கான ஒரு வாதிடும் கருவியாக அது பயன்பட்டது. அந்த உடன்படிக்கை 1999ல் நடைமுறைக்கு வந்தது மற்றும் தற்போது அதில் ஸ்ரீலங்கா உட்பட 162 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, ஆனால் அதில் குறிப்பிடத்தக்கதாக கையெழுத்திடாமல் இருக்கும் நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா என்பன முக்கியமானவையாகும், பிரசங்கம் செய்பவர்கள் கூட அதைச் செயலில் காட்ட வேண்டும் இல்லையா? நிலக்கண்ணி வெடிகள் விஷயத்தில் இது நடைபெற்றதாகத் தெரியவில்லை.

அரண்மனையின் முன்னால் உள்ள பெரிய சதுக்கம் ஒரு விளையாட்டு மைதானம் (அது ஆக்கிரமிக்கப்படாது இருந்தால்) சிறு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் நீர்த்தாரைகளைத் தவிர்ப்பதற்கு அல்லது அதை தவிர்க்காமல் இருப்பதற்காக வேகமாக அந்த இடத்தை சுற்றி வருவார்கள். அது அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சிவில் ஆர்ப்பாட்டங்களுக்கான மேடையாகவும் ஆக்கிரமிக்கப்படுவதுண்டு. கடந்த வெள்ளியன்று (செப்ரம்பர் 14) ஒலிபெருக்கிகள் சகிதமாக அங்கு ஒரு பெரிய ஆர்ப்பாட்டம், தீபெத்தினை சீனா ஆக்கிரமித்ததை கண்டித்து தீபெத் கொடிகள் , தலாய்லாமாவின் புகைப்படங்கள்,என்பனவற்றுடன் இடம்பெற்றது, நன்கு பராமரிக்கப்பட்டுவரும் தோட்டங்களுக்கு வெகு தொலைவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் கட்டிடத்துக்கு கேட்கும் வண்ணம் தீபெத்திய பௌத்த கீதங்கள் ஒலிபெருக்கிகள் மூலம் சத்தமாக ஒலிபரப்பப்பட்டன. மறுபுறத்தில் தழிழ் இனஅழிப்பு பற்றிய சுவரொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, ஆனால் காட்சிப்படுத்தப்படவில்லை. எப்படியாயினும் அதற்கு எவ்வித பாதுகாப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

ஆர்ப்பாட்டம்…?

திங்கட்கிழமை (17ந் திகதி) மதியம் ஐநாவுக்கு தமிழ் இனப்படுகொலையை நினைவு படுத்தும் விதமான ஆா்ப்பாட்டங்கள் முழு ஊக்கத்துடன் ஆரம்பமாகின. இந்த விடயம் தொடர்பாக முன்பு நடந்த ஆாப்பாட்டங்களைப் போலில்லாமல் (அது ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது) இது ஒரு சுவிஸ் விவகாரமாகத் தோன்றியது, மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பேருந்துகள் எதுவும் வரவில்லை. அது ஒரு உள்ளக விவகாரமாகத் தோன்றியது பொதுவாக பேச்சுக்கள் யாவும் தமிழிலும் மற்றும் அவ்வப்போது சில ஆங்கிலத்திலும் இடம்பெற்றது. வழக்கமான தலைவரின் சுவரொட்டிகள் மற்றும் தேசத்தினை வாதிடும் வரைபடம் ஆகியன ஒதுக்கப்பட்டிருந்தன ஆனால் அவர்கள் கையில் அசைத்துக் கொண்டிருக்கும் பதாகைகள் செப்ரம்பர் மாதம் ஜெனிவாவில் காயும் அசாதாரண வெய்யிலுக்கு நிழல் தருவதற்கு ஏற்றபடி பயனுள்ள அளவில் இருந்தன. சில அம்சங்களில் அது ஒரு குடும்ப விவகாரம் போலத் தோன்றியது, பத்துவயதுள்ள மகள் ஒரு சிறந்த வைபவ ஆடையை அணிந்திருந்த அதேவேளை அவளது இளைய சகோதரன் வழக்கத்துக்கு மாறான ஒரு கழுத்துப்பட்டி அணிந்திருந்தான். சமூகத்தினைச் சேர்ந்த வர்த்தகர்களும் இதைக் கவனத்தில் எடுத்திருந்தார்கள் - சுவையான அரிசிப் பைகள் மற்றும் பிரச்சாரத்துக்குத் தேவையான சாதனங்கள் அங்கிருந்தன. அங்கு எழுப்பப்பட்டிருந்த மேடையில் உக்கிரமான பேச்சுக்கள் இடம்பெற்ற வேளையில், அங்கிருந்த கூட்டம் (சுமார் 2000 பேர் வரை) தங்கள் சுமுகமான சொந்த உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தபடி பேச்சாளர் உரத்த கருத்துக்களைத் தெரிவிக்கும்போது ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பினார்கள். ஜெனிவா நகரக் காவல்துறை, இந்தக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியம் வெகு அரிது என மதிப்பிட்டிருந்தபடியால், ஏழு காவலர்களைக் கொண்ட ஒரு காவல்துறை வாகனம் மட்டுமே அங்கிருந்தது, சிலர் வெளியே நின்றிருந்த அதேவேளை மற்றவர்கள் வாகனத்தினுள் மெல்லிய உறக்கத்தில் இருந்தார்கள்.

பல தசாப்தங்களுக்கு முன்பு

சில மெல்லிய இளம் பெண்களினால் பிரச்சார சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன, ஒரு சின்னத்தை வாங்கும்படி அவர்கள் என்னிடம் கேட்டபோது, நான் ஒரு சிங்களவன் என்று மரியாதையாகத் தெரிவித்தேன், உடனே அவர்கள் என்னுடன் தொடர்பு எதுவும் கொள்ளாமல் வேகமாகத் திரும்பிச் சென்றார்கள். இந்தப் பெண்கள் வெகு காலத்தக்கு முன்பு எனது பல்கலைக்கழக நாட்களில் வழக்கமாக நான் உல்லாசமாகப் பேசிப்பழகும் எனது சக மாணவிகளாக இருந்த யாழ்ப்பாணத்துப் பெண்களை நினைவூட்டினார்கள். சமீபத்தில் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற எங்கள் சகமாணவர்களின் மீள் சந்திப்பின்போது, இதே மாணவர்கள் அவர்கள் தற்போது வதியும் நாடுகளில் மதிப்பான தொழில் நிபுணர்களாக உள்ளார்கள். எங்களுடன் படித்தவர்களில் சிறுபான்மையானவர்கள் ஸ்ரீலங்காவில் எஞ்சியுள்ள அதேவேளை பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் பசுமை தேடிப் போய்விட்டார்கள், அது அவர்களை குடிபெயரச் செய்தவிட்டது - அது சிங்களவர்கள் மற்றும் தமிழர்களில் சம விகிதத்தில் உள்ளது.
சுவரொட்டிகளில் உள்ள சில முரண்பாடுகள்.

அங்கே வெளியிடப்பட்டிருந்த சுவரொட்டிகளில் யுத்தக் காட்சிகள் குறிப்பாக கடைசிச் சில வாரங்களில் இடம்பெற்ற காட்சிகள் காணப்பட்டன, மரணமும் அழிவுகளும் அதில் முக்கிய பங்கு வகித்தன. எனினும் அதில் ஓரவஞ்சனையான சில திருப்பங்கள் இடம்பெற்றிருந்தன - இரண்டு படங்களின் பின்னணியில் அரச இலச்சினையுடன் கூடிய சுகாதாரத் திணைக்களத்தின் அம்புலன்ஸ் வண்டி காணப்பட்டது. மற்றொரு படத்தில் நிலத்தில் அமரந்திருக்கும் ஒரு பெண்கள் குழுவினை படை வீரர்கள் காவல்காப்பது போல இருந்தது, அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகக் காட்சியளித்தார்கள். வேறு உள்நாட்டு போர்களில் எதிர் தரப்பான அரசாங்கம் தனது எதிரியான போராளிகளுக்கு சுகாதார சேவைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குமா? முரண்பாடான வகையில் பல படங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துக் கட்டு கட்டியபடியும் உடைந்த கால்,கைகளுடனும் காணப்பட்டார்கள் மற்றும் அகதிகள் தீக்கனலுக்குள் விழுந்து கிடப்பதைப் போலும் காணப்பட்டது. முக்கியமான நபர்களின் “முன்னர்” மற்றும் “பின்னர்” (துப்பாக்கிச் சூடு பட்டபின்னர்) பிரபலமான படங்களும் இடம்பெற்றிருந்தன - அது எனக்கு போரின் கொடூரங்களை நினைவு படுத்தியதுடன் அனுராதபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளின் முன்னர் மற்றும் பின்னரையும் நினைவுபடுத்தியது.

அங்கு இடம்பெற்ற பேச்சுக்களில் ஒன்று ஆங்கிலத்தில் அமைந்திருந்தது, அது சர்வதேச விசாரணைகளுக்கான தரமான கோரிக்கை ஒன்றை வலியுத்தியது. அங்கு வழக்கமான கைதட்டல்கள் இடம்பெற்றன மற்றும் சிறிது நேரத்தின் பின்னர் அந்தப் பேச்சாளரை நான் ஒருவாறு சந்திக்க முடிந்தது, தொடர்ந்து இடம்பெற்ற ஆக்ரோஷமான பேச்சுக்களுக்கு இடையில் அவருடன் ஒரு நீண்ட உரையாடலை சாதாரணமாக நடத்தமுடிந்தது. ஒரு சிங்களவருக்கும் மற்றும் தமிழருக்கும் இடையில் ஆங்கிலத்தில் நடக்கும் உரையாடல் அது என்று எங்களைச் சுற்றியிருந்தவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது, ஆனால் அதில் கருத்துக்களோ அல்லது மிரட்டும் சைகைளோ இருக்கவில்லை, அந்தப் பேச்சாளரின் நண்பர்கள் வந்து கைகுலுக்கி தமிழில் சில வார்த்தைகள் பேசியபிறகு சென்றார்கள்.

குற்றவாளிகள் யார்?

அந்தப் பேச்சாளரிடம் நான் கேட்டேன் - இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் பயனுள்ளவையா அல்லது அது ஸ்ரீலங்காவுக்குள் மாற்றங்கள் ஏற்படுத்துவதைப் பற்றி வாதிடுவதற்கு ஆக்கபூர்வமானவையா? - புலம் பெயர்ந்தவர்கள் சுவிட்சலாந்தில் சௌகரியமாக இருப்பதால் அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள் ஆனால் தங்கள் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து வாதிடுவார்கள். அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்தான் யாழ்ப்பாண நூலகத்தை எரித்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் என்கிற குற்றச்சாட்டுக்கு என்னிடம் பதில் இல்லை - அது ஒரு சமூகத்தின் ஆன்மாவுக்கு இழைக்கப்பட்ட படுகொலை. எனினும் பின்னர் நாட்டைத் துண்டாடும் வாதத்துக்கும் மற்றும் ஆயுதங்கள் ஆயுதங்களுடன் சந்திக்க நேர்ந்ததையும் எந்த அரசாங்கத்தாலும் சகித்தக் கொள்ள முடியாதிருதந்தது. பேச்சு வார்த்தைகளுக்கான இடம் இருந்தது ஆனால் அரசாங்கம் அதைப் பயன்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு - சாட்சியங்கள் தெரிவிப்பதிலிருந்து சமாதானத்துக்காக வழங்கப்பட்ட காலம் ஆயுதங்களைச் சேகரிப்பதற்காக எடுத்தக்கொள்ளப்பட்டது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பையும் சேர்ந்த அரசியல்வாதிகளின் ( இது ஐதேக மற்றும் ஸ்ரீலசுக மட்டும் அல்லாது ஆனால் சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இரு தரப்பிலும்) குறுகிய காலத்தில் அரசியல் ஆதாயம் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள்தான் இதற்கான அடிப்படைக் காரணம் என்கிற் ஒரு விஷயத்தை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். பெரும்பான்மையான சிங்கள மக்கள் சிறுபான்மையினரை வாழ அனுமதிக்க வேண்டும் - சமாதானத்தை மேலுயுயர்த்துவதில் பௌத்த குருமார்களின் பங்கு என்ன? ஆகக்குறைந்தது சமீபத்தில் பௌத்தபோதனைகளுக்கு மாறாக நடந்த சில நபர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை சரியான பாதைக்காக ஒரு படி என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். எனினும் பௌத்த குருமார்களிடம் இருந்து தேசிய சமாதானத்துக்கான முக்கிய அழைப்பு வெளிவரும் என நான் எண்ணவில்லை.

ஆனால் திரும்பவும் பழைய கேள்விக்கு வந்தால் தனிநாட்டுக்கான இந்த வகையான ஆர்ப்பாட்டங்கள் பயனுள்ளவையா? அந்த பேச்சாளர் குறிப்பிட்டது இது பேச்சு வார்த்தை தொடங்குவதற்கான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு வேண்டியானது - பகிரப்பட்ட பொறுப்புக்களுடனான ஒரு கூட்டாட்சி நாடு உருவானால் தனிநாட்டு பிரச்சினை அடங்கிப் போகும். கொள்கையளவில் இது நல்லது, நாடு முழுவதிலும் உள்ள இந்த பகிரப்பட்ட ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் நாங்கள் கவலையடைந்துள்ளோம். மாகாணசபைகளின் கட்டுப்பாடு எங்கே?

வெளிப்படைத்தன்மை - வடக்கிற்கு மட்டும் அல்ல ஆனால் நாடு முழுவதுக்கும்

வடக்கில் உள்ள குடிமக்களின் பிரார்த்தனை இயல்பு வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே - அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றது ஆனால் காட்டு நிலங்களுக்கு எந்த முன்னேற்பாடும் இல்லை. குறைந்தபட்சம் அவற்றை சுத்தமாக்கி திரும்ப ஒப்படைக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உரியது. அரசாங்கம் அதைச் செய்யுமா? நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலங்கள் கையேற்கப்பட்டிருந்தால், சுத்திகரிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டதா? வட மாகாண முதலமைச்சர் மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக விசேட நிதி ஒன்றை வழங்குமாறு கேட்டிருந்தார், ஆனால் அது மறுக்கப்பட்டுவிட்டது, அப்போது நான் அவரிடம் கேட்டேன், அத்தகைய நிதி மாகாண சபைகளின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமா என்று? நிதி முறையான வகையில் செலவு செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்துவது எப்படி? ஒரு யோசனை - வடக்கிற்கு மட்டுமன்றி அனைத்து மாகாண சபைகளினதும் செலவு விபரங்களை இணையத்தில் வெளியிட்டால் என்ன? குடிமக்கள் செலவுகளைக் கண்காணிக்க இது உதவியாக இருக்கும்.

சமீபத்தைய புத்தகம் - இரு தரப்பிலுமுள்ள போர் விதவைகளின் வருமானம்

அப்போது நான் அஜித் கனகசுந்தரம் எழுதிய சமீபத்தைய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டேன், அவர் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை ஆனால் நான் இரு தரப்பிலுமுள்ள யுத்த விதவைகளின் வருமானம் பற்றிக் குறிப்பிட்டபோது, அதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கவேண்டும். மேலதிகமாக, அவரது பேச்சில் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டதைப்பற்றிக் கேடடபோது, அது இரு தரப்பையும் சேர்ந்தவர்களுக்கா அல்லது இராணுவத்துக்கு மடடுமா என்று நான் கேட்டேன். இரண்டு தரப்பிலும் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டவர்களைப் பற்றி விசாரணை செய்வதில் அவருக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருப்பதற்கு மாறாக அந்தப் பக்கத்தில் விசாரணை செய்யப்பட்டால் வரிசையில் முதலில் நிற்கப்போகிறவர் தலைவராகத்தான் இருப்பார். உக்கிரமான பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மிக மிக ஆரம்பத்தில்

அப்போது நான் 1970ம் ஆண்டின் உயர்தரப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் இடம்பெற்ற தரப்படுத்தல்தான் ஆயுத மோதலின் ஆரம்பம் என்பதைக் கவனத்துக்கு கொண்டு வந்தேன் - இது பெரும் எண்ணிக்கையிலான கல்விகற்ற தமிழ் இளைஞர்களில் ஒரு பகுதியினரின் வாழ்க்கை முன்னேற்றமடையும் வாய்ப்பினைக் குறைத்தது. எனினும் அவர்கள் நல்ல கல்வி வசதியுள்ள பாடசாலைகளில் படித்ததின் விளைவாகவே அவர்களால் நல்ல பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற முடிந்தது. கல்வி ரீதியாகப் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் கடுமையாகப் படித்தபோதிலும் அவர்களால் இதே மாதிரியான பெறுபேறுகளை அடைய முடியவில்லை. கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் சில “நேர்மறையான பாகுபாடு” உள்ளது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும், அது நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் செயல்படுத்தப்படுகிறது. கொழும்பு, கம்பகா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் அவர்கள் தமிழர் மற்றும் சிங்களவர் என்ற பேதமின்றி பல்கலைக்கழகத்துக்கு தேர்வாவதற்கு ஒரே அளவான உயர் தடையை தாண்டவேண்டி உள்ளது.

ஒக்ஸ்போட் மற்றும் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகங்கள் அரச பாடசாலைகளில் (அங்கு வசதிகள் குறைவு) உள்ள குறைந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் அதேவேளை வசதியுள்ள தனியார் பாடசாலை மாணவர்களைச் சேர்ப்பதற்கு உயர்ந்த பெறுபேறுகளைத் தெரிவு செய்கிறார்கள். இளங்கலைப் படிப்பின் முடிவில் இறுதிப் பெறுபேறுகளை ஒப்பீடு செய்யும்போது, அரச பள்ளிகளில் இருந்து தெரிவானவர்கள் விகிதாசார ரீதியில் மிகவும் சிறப்பாகத் தேர்ச்சி அடைந்திருப்பது, அரச பள்ளி மாணவர்களின் பரீட்சை முடிவுகளுக்கான கட்டுப்பாட்டு மட்டம் இன்னும் குறைவாக இருக்கவேண்டும் என்பதை அடையாளப் படுத்துகின்றது (ஸ்ரீலங்காவின் பல்கலைக்கழக ஆணைக்குழுவும் இதுபோன்ற முடிவுகளை ஸ்ரீலங்கா பல்கலைக்கழக முறையில் அறிமுகப்படுத்துமா?).

இந்த விடயத்தில் அதை ஒப்புக்கொள்ளும் மனநிலை பேச்சாளரிடம் இருக்கவில்லை - பரீட்சை முடிவுகள் மற்றும் நுண்ணறிவு இரண்டும் ஒரே திட்டமான அளவுகோலாக இருக்கவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அதன்படி கிராமப்புற மாணவர்கள் ( இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரதேசங்கள் உட்பட) பல்கலைக்கழகத்துக்கு நுழைவதற்கான வரிசையில் தொடர்ந்தும் பின்னுக்குத்தான் நிற்கவேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. ஆகவே போராட்டம் நடத்தப்பட்டது தமிழ் மாணவர்களுக்காகவா அல்லது தரப்படுத்தலால் அனுகூலம் அடைய முடியாதவர்களுக்காகவா?

தரப்படுத்தல் ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல - ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்தங்கிய பகுதிகளுக்கு ஆழ்ந்த வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் மற்றும் அதன்பின் உயர்தரப் பரீட்சை முடிவுகளின் முன்பு அனைவரும் சமமாக இருப்பார்கள். திரும்பவும் குறுகிய நோக்கை இலக்காகக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் குடியியல் மனப்பான்மையோடு இருக்கிறார்களா அல்லது அபராதம் என்கிற அச்சுறுத்தலுக்குப் பணிந்து உள்ளனரா?

பேச்சாளர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் மற்றொரு கூட்டத்துக்கு செல்ல இருப்பதால் உரையாடல் அத்துடன் முடிவுற்றது. நான் சுவரொட்டிகளைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன் அரிசிப் பைகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன மற்றப்பக்கத்தில் வரலாற்றைப் பதிவு செய்திருந்த புத்தகங்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. மோதலைப் பற்றி நன்கு விளங்கிக் கொள்வதற்காக நான் இந்தப் புத்தகங்களை கொள்வனவு செய்யலாமா அல்லது நடுநிலையான சுயாதீன விளக்கத்தை வெளிப்படுத்துவதில் ஆர்வம் அற்ற ஒரு காரணத்துக்கு அது பங்களிப்புச் செய்கிறதா என்கிற குழப்பம் ஏற்பட்டது. முடிவில் நான் புத்தகங்களைக் கொள்வனவு செய்யவில்லை. பின்னர் இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் மற்றும் எதிர்காலத்துக்கு என்ன பயன் என்று ஆச்சரியப்பட்டவாறே எனது அலுவலகத்துக்குத் திரும்பினேன். பின்னர் நான் பி.ப 7.30 மணியளவில் (ஆம் இன்னமும் பகல் வெளிச்சம் உள்ளது) திரும்பவும் அந்தச் சதுக்கத்தைக் கடந்து சென்றேன், அது, சுத்தமாக,நன்கு கூட்டப்பட்டு அடுத்த ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராக இருந்தது. ஒரு தரமான ஸ்ரீலங்காவாசியை (சிங்களவர் மற்றும் தமிழர் ஆகிய இருதரப்பினையும் சேர்த்து) விட புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் குடியியல் மனப்பான்மை கொண்டவர்களா அல்லது ஜெனிவா நகரசபை அதிகாரிகள் அபராதம் விதிப்பார்களே என்கிற அச்சம் காரணமாக இது செய்யப்பட்டதா?

எனவே நாங்கள் என்ன செய்ய முடியும்

மேலும் நாங்கள் என்ன செய்ய முடியும் - காயங்களை குணப்படுத்தி எங்களை ஒன்று சோ்ப்பதற்காக நாங்கள் அரசியல்வாதிகளிலும் மற்றும் ஆட்சியாளர்களிலும் தங்கியிருக்கலாமா? அவர்களில் சிலர் அப்படிச் செய்வதற்கு முயற்சி செய்யலாம் ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக நாம் பார்த்த வரலாறு மூலம் அவர்களது குறுகிய பார்வை மற்றும் தங்களைச் செழிப்பாக்குவது இன்னும் தொடரும். உயர்மட்ட ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சி என்பனவற்றில் சிறிதளவு நம்பிக்கை உள்ளது.

கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறைக்கான சாத்தியம் உள்ளதா?

ஸ்ரீலங்கா கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறையை கொண்டிருந்தது அது விளைவுகளைத் தந்தது - 1956ல் வாக்குரிமையற்ற பெரும்பான்மை சிங்களவர்கள் சமூகத்தில் தங்களுக்குள்ள இடத்தை தேர்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோரினர். 1970ல் கிராமப்புற இளைஞர்கள் தங்கள் கிளர்ச்சியின் மூலமாக, நில உரிமை, வளங்களை நியாயமாகப் பகிருதல் போன்ற பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். ஆனால் இது ஒரு தேர்தல் புரட்சி மூலம் உருவானதல்ல. இரண்டாவது ஒரு கிளாச்சி ஏற்பட்டால் தாங்கள் தப்பி பிழைக்க மாட்டோம் என அச்சமடைந்த அரசியல்வாதிகளின் சுயபாதுகாப்பு காரணமாக அது ஏற்பட்டது. 1990 களில் தெற்கில் அரசாங்கத்துக்கும் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டஒரு சர்வாதிகார அரசியல் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ஆனால் அது ஒரு சமூக அமைப்பு அல்ல. அந்தக் கட்சி தனது பாடங்களைக் கற்றுக்கொண்டது மற்றும் இப்போது அது கொள்கை மற்றும் நேர்மை என்பனவற்றைக் கொண்ட ஒரே அரசியல் கட்சியாக அது தோற்றம் பெற்றுள்ளது. உள்நாட்டு மோதல் 1980 களில் ஆரம்பித்து மூன்று தசாப்தங்களாக நீடித்தது - பெறுமதியான சில கொள்கைகளைக் கொண்டிருந்த ஒரு இயக்கம் (மற்றும் பெரிய அளவிலான சர்வாதிகாரத் தன்னமைகளையும் கூட) பேச்சுவார்த்தையில் அவர்களது இயலாமை காரணமாக இறுதியில் தோல்வியடைந்தது.

வாக்காளர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியுள்ள ஆட்சியாளர்களைப் பெறுகிறார்களா?

தங்கள் பிரதிநிதிகளின் தகுதிகள் பற்றிச் சிறிதளவு கருத்தில் கொள்ள வேண்டும் - மக்கள் பிரதிநிதிகளின் கல்வித் தகைமைகளை கொண்ட சுயாதீனமான ஒரு வலைத்தளத்தை அமைத்தால் அது மிகவும் சுவராஸ்யமானதாக இருக்கும். கடந்து செல்லும்போது பிரித்தானிய அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு நபரும் பல்கலைக்கழக பட்டதாரிகள் ஆவர் - எங்கள் பிரதிநிதிகளிடம் குறைந்தபட்சம் ஒரு முழுமையான இரண்டாம் நிலை கல்வித்தரத்தை பூர்த்தி செய்துள்ளார்களா என்று கேட்பதுகூட அதிகப்படியான ஒன்று - அதாவது உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒரு சில பாடங்கள் சித்தி அடைந்திருப்பது.

ஆகவே நாட்டிலுள்ள உயர்ந்த கல்வி கற்ற வாக்காளர்கள் தாங்கள் பெற்ற இலவசக் கல்விக்குத் துரோகம் செய்கிறார்கள் - அவர்கள் சுய நலனுக்காக வாக்களிக்கப்பட்ட அரசியல்வாதியைப் போன்றவர்கள் (வேட்பாளரிடம் இருந்து என்ன நலனை என்னால் பெறமுடியும்) மற்றும் அவர்கள் தேசிய நீண்டகாலத் தீர்வில் அக்கறையற்றவர்கள். குடிமகன் தனது கடமையைச் செய்து அவர்களைத் தெரிவு செய்த பின்னர் அரசியல்வாதி மற்றும் ஆட்சியாளர்கள் குடிமக்களுடன் பெரிதாகத் தொடர்பு கொள்வதில்லை, அந்த நேரத்தில் எதிர்மறையான தாக்கங்கள் எதுவும் எழுவதில்லை ஆனால் தேர்தல் வரும்போது முழுப்பேரும் தள்ளி ஒதுக்கப்பட்டு புதிய தொகுதி ஒன்று வேரூன்றிவிடும். ஆகக்குறைந்தது 1977வரை அதுதான் வழமையான பாணியாக இருந்தது, விஷயங்களைக் கையாள்வதில் வல்லவரான ஒருவர் இந்த அச்சை உடைத்ததுடன் தேர்தலையும் வேறுவிதமாகக் கையாண்டார், அரசியல்வாதிகள் வழக்கமான பாணியை உடைத்து தசாப்தங்கள் நீண்ட வன்முறை, அழிவு, மற்றும் அரசியலில் இருந்த குடியியல் தன்மை மற்றும் பொதுவாக வாழ்வில் பலவீனம் என்பனவற்றை இந்த நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். மற்றும் இது உரிமை தொடர்பான உணர்வில் எழுச்சியைத் தந்ததா, யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது ஆகவே இந்த முயற்சிக்கான ஒருங்கிணைப்பாளர்களான நாங்கள், நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் உரிமை உள்ளவர்கள். இந்த யுத்தம் (பிரதானமாக கிராமப்புற இளைஞர்களால் நடத்தப்பட்டு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது), நாடும் மற்றும் சமூகமும் வழங்கும் நலன்புரி சேவை, கல்வி,மற்றும் வாய்ப்புகள் போன்ற அனைத்து நலன்களையும் பெறும் வகையில் நாட்டைப் பழைய நிலைக்கு கொண்டுவர் உதவியது.

தடையற்ற அதிகாரம் கொண்டு வரப்பட்டு மற்றும் எதிர்மறைத் தாக்கங்கள் அகற்றப்பட்ட நிலையில் சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிவதை நம்மால் காணமுடிகிறதல்லவா. நாங்கள் செலுத்திய விலை நிரந்தரக் குழப்பம் மற்றும் மூன்று படிகள் முன்னேறினால் இரண்டு படிகள் கீழிறங்கும் நிலை என்பன உருவாவதற்கா, ஒருவேளை அப்படியிருந்தால் அதுதான் ஜனநாயகத்தின் விலை.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com