Sunday, October 28, 2018

சபாநாயகருக்கு சம்பந்தர் கடிதம். பாராளுமன்றை கூட்டட்டாம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர அரசியல் மாற்றத்தினை கருத்திற்கொண்டு நாடாளுமன்றினை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்தின் மேன்மையமை உறுதி செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டமைந்த நாடாளுமன்றின் மேன்மை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றினை கூட்டுவதன் மூலம் சட்டம் ஒழுங்கினை உறுதி செய்ய முடியும் எனவும் அதனால் துரித கதியில் நாடாளுமன்றை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com