Thursday, October 25, 2018

இந்திய றோ சந்தேச நபர் தொர்பாக வெளிவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்கள்..

ஜனாதிபதியை கொலைசெய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தின் பொருட்டு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜை பாதுகாப்பு பிரிவிற்கு ஒப்படைக்க ஒருவாரத்திற்கு முன்னர் " எதிரிகள் என்னை சுற்றி வளைத்துள்ளனர், எனது உயிருக்கு ஆபத்து" என கூறியதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்திய "ரோ" அமைப்பை சேர்ந்த இரகசிய தகவலாளி என சந்தேகிக்கப்படும் எம்.தோமஸ் என அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட அவரது நண்பரின் குறுஞ்ச்செய்தி கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இத் தகவல் அறியப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சந்தேகிக்கப்படும் இந்திய பிரஜை 1997 வருட முதல் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

சிவில் பொறியியலாளராக கடமையாற்றும் சந்தேக நபரின் நண்பர் தற்போது இந்தியாவில் இருப்பதாகவும் அவரது பெயரை குறிப்பிட மறுப்பதாகவும் அவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேக நபரான தோமஸ் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதன் காரணம் விபத்தொன்றில் தலையில் ஏற்பட்ட பாரிய காயமொன்றின் மூலமாகவே எனவும் அவர் இந்திய விமான நிலைய அதிகாரசபையில் கணக்கியல் உதவியாளராக பல வருடங்களாக சேவையாற்றி உள்ளதாகவும் அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

வணிகவியல் துறை பட்டதாரியான சந்தேக நபர் பின்னர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு சேவையாற்ற சென்றதாகவும் இருப்பினும் அவரது தொழில் அவரின் மனைவிக்கு கிடைத்ததாகவும் அதற்கான காரணம் தனக்கு சரியாக தெரியவில்லை எனவும் நண்பர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

சந்தேக நபருக்கு மகன் ஒருவர் இருப்பதாகவும் சில வருடங்களுக்கு பின்னர் அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

தோமஸ்சை இறுதியாக 2016 ஆண்டு தான் கண்டதாகவும் தோமஸ்சுக்கு கேராளாவில் 7 அறைகளை கொண்ட பங்களா ஒன்று இருப்பதாகவும் அதை விவாகரத்து செய்த மனைவி தன்னிடமிருந்து பறித்துக்கொள்ள கூடும் என்ற பயம் சந்தேக நபரிடம் இருந்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் தலைமறைவாகியதுடன் 2017 ஆண்டு அவரிடம் இருந்தது கிடைத்த தொலைபேசி அழைப்பில் அவர் கொழும்பில் இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் உரையாடியதாவும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

தன்னை கொழுப்பிற்கு தோமஸ் வருகை தருமாறு அழைப்பு விடுத்ததாகவும் அவரது நண்பர் த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அவருக்கு பணம் இல்லை என்பது எனக்கு தெரியும். சில நேரங்களில் அவர் மிஸ்கோல் அனுப்பினால் நான் திருப்பி அழைப்பேன் இறுதியாக அவர் பேசியது செப்டம்பர் மாதம் 3ஆவது வாரம் அப்போது அவர் தனக்கு அதிக விரோதிகள் இருப்பதாக கூறினார் நான் அவரை மீண்டும் வர சொன்னேன் அல்லாவிடின் பொலிஸிலோ, இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கோ முறையிடுமாறு கூறினேன். திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டது.' என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

இன் நாட்டில் அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் இந்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தமக்கு அதை தெரியப்படுத்தியதாகவும் தம்மிடம் தகவல்கள் பெறப்பட்தாகவும் இதுவரையும் தனது நண்பருடன் பேச கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தோமஸ் உடைய கடவுச்சீட்டு சில வருடங்களுக்கு முன்பே காணாமல் போயுள்ளதாகவும் 2 வருடங்களுக்கு முன்னர் புதிய அடையாள அட்டை ஒன்றை தயார் படுத்தி வைத்திருந்ததாகவும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

இந்திய அதிகாரிகளும் தோமஸ்சை சந்திக்க மறுத்துள்ளதாகவும் தோமஸ்சின் புகைப்படம் ஒன்றை தமக்கு அனுப்பிவைக்குமாறு இன் நாட்டின் அதிகாரிகள் கேட்டதாகவும் அதன் படி தனது நண்பரா இல்லையா என சரியாக உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் அவரது நண்பர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அவருக்கு உடணடியாக சிகிச்சையளிக்கும் பொருட்டு அவரை விடுதலை செய்யுமாறு இன் நாட்டு அரசிற்கு அவரது நண்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com