Tuesday, October 30, 2018

கிளிநொச்சியில் கெரோயினுடன் கைதானவர் தப்பி ஓடிட்டாராம்.

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் கடந்த இருபத்தாறாம் திகதி ஆறு கிராம் கெரோயினுடன் மன்னார் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன், கடந்த இருபத்தெட்டாம் திகதி கிளிநொச்சிப் பொலிஸாரின் காவலில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது :

கைது செய்ய முற்றபட்டபோது, மன்னார் விசேட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உப பரிசோதகர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது. காயங்களுடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பாரமளிக்கப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து சந்தேக நபர் தப்பி ஒடிவிட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், சந்தேக நபருக்கு காவலாக இருந்த இரு பொலிஸ் உத்தியோகித்தர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com