Friday, October 19, 2018

சீஐடி க்கு வாக்குமூலம் வழங்கி விட்டு பத்திரமாக வீடு சென்றார் டிஐஜி நாலக டி சில்வா.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என வெளியான ஒலிப்பதிவுகள் தொடர்பில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

நேற்று அவரிடம் 7 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்திருந்த நிலையில் இன்று 9 மணிநேர விசாரணையின் பின்னர் வீடு சென்றுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றது சாதாரண குற்றமல்லவெனவும் அவரை கைது செய்தே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பலத்த குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், அவர் இன்று கைது செய்யப்படலாம் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com