Wednesday, October 3, 2018

ஈழதமிழரின் ரத்தத்தில் இங்கு யார் அரசியல் ஆதாயம் பெறுவது? தமிழகத்திலே முட்டி மோதினால், இலங்கை எப்படி இருக்கும்?

அவர்களுக்கு அது தீவிரவாத ஒழிப்பு. யார் புலிகளை தைரியமாக ஒழித்தது? என அந்த பெருமையினை தக்க வைக்க படாதபாடு படுகின்றார்கள்.

முதலில் பொன்சேகாவும் ராஜபக்சேவும் மோதினார்கள், பின் ராஜபக்சே நானே புலியினை துரத்தி துரத்தி மண்டையில் போட்டவன் என சொல்லிகொண்டார்.

கோத்தபாயா, மகிந்தா இருவரும் கடைசி வாரத்தில் இலங்கையிலே கிடையாது, நானே புலிகளுக்கு அஞ்சாமல் அவர்களை கொன்றேன் என்றார் பொன்சேகா

இதில் பொன்சேகா சிறை செல்லும் வரை சிக்கல் வந்தது.

இப்பொழுது இலங்கை அதிபர் சிறிசேனா இந்த கோதாவில் குதிக்கின்றார். புலிகளை ஒழித்தது நானே என்கின்றார்

எப்படி?

முள்ளிவாய்க்கால் நடக்கும்பொழுது இவர்தான் பாதுகாப்புதுறை அமைச்சர், கொழும்பில் புலிகள் எப்பொழுதும் தாக்குதல் நடத்தலாம் எனும் நிலையில் ராஜபக்சே ஜோர்டானுக்கு பறந்தார், கோத்தபாயா கடலுக்குள் பாய்ந்தார்

யுத்தநடத்தல் பாதுகாப்பு அமைச்சர் சிரீசேனா வசமே இருந்தது, அதைத்தான் இப்பொழுது சொல்லி "நானே சகலகலா வல்லவன், ராஜபக்சே ஒன்லி ஆக்டிங்" என பகிரங்கமாக சொல்கின்றார்

அத்தோடு விட்டாரா? புலிகள் சென்னையில் இருந்தும் வன்னியில் இருந்தும் கொழும்பினை விமானம் மூலம் தகர்க்கும் திட்டத்தில் இருந்தனர் , நானே அதை தைரியமாக எதிர்கொண்டேன் என்கின்றார்

ஏன் சொல்லவேண்டும் என்றால் இலங்கை பொருளாதாரம் இந்தியாவினை விட மோசம், பின் எதை சொல்லி தேர்தலை சந்திப்பது?

இதில் மறைமுகமாக சிறீசேனா சொல்வது என்னவென்றால் முள்ளிவாய்க்கால் படுகொலையினை நடத்தியது நானே, ராஜபக்சேக்கு பங்கு இல்லை என்பது.

இந்த சிரிசேனாவிடம் தான் அதிமுக அமைச்சர்கள் சென்று பல்லைகாட்டி பரிசு பெற்று வந்தனர் என்பது சமீபத்திய செய்தி.

சிரீசேனா விவகாரம் இன்னும் தமிழகத்து ஈழ அழிச்சாட்டிய கும்பலுக்கு, குறிப்பாக அங்கிள் சைமனுக்கு தெரியாது போல‌.

தெரிந்தால் என்னாகும், அந்த விமான விஷயத்தை பிடித்துகொள்வார், சென்னையில் இருந்து புலிகள் தாக்கும் ஆபத்து இருந்தது என்றால் போதாதா?

"ஆமாம், நான் அண்ணனை பார்க்க சென்றபொழுது வாடா நாம வான்புலி விமானத்தில் பறப்போம் என்றார், எப்படின்னே விமானமே இல்லையேன்னே, புலிடா இது இப்போ பாரு என சிரிச்சார்

டிராக்டர்ல இருந்து டயரை கழட்டுனாங்க, கண்டெய்னெர் ல இருந்து இரும்பு தகடை சைஸா வெட்டுனாங்க, தோட்டத்தில ஓடிகொண்டிருந்த ஆயில் மோட்டார் ஒன்னை கொண்டு பொருத்தினாங்க, கொஞ்ச நேரத்தில் விமானம் ரெடி. வாடா தம்பின்னார், நானும் ஓடி போய் ஏறிகிட்டேன், ரன்வே இல்லியண்ணே என்றேன் சிரிச்சார்

விமானத்தில் பறக்கும் போது சாப்பிட 6 வகை இறால், கணவாய் எல்லாம் இருந்தது,

திடீர்னு ஒரு அறிவிப்பு வான்புலி கிளம்புதுன்னு சொன்னாங்க, அவ்வளவுதான் தெரு எல்லாம் அமைதி அண்ணன் அப்படியே தெருவில ஓடி ரோட்டில ஓடி ஒரு குளத்தில ஓடி அப்படியே மேலே எழுப்பினார், நாங்க ஆஸ்திரேலியா வரை பறந்தோம், அவனுக நீங்க யாருண்ணு கேடானுக போடா ஓ..தா ன்னு சொன்ன்னேன் சுட்டானுக‌

ஆனா விமனாம் பல்டி எல்லாம் அடிச்சி அட்டகாசமா வந்துட்டு, ஆஸ்திரேலியாகாரனே பயந்துட்டான். இன்னுவரைக்கும் அவனுக்கு அது யாருண்ணு தெரியாது.

மறுபடி வன்னிக்கு வந்தோம், 2 செகன்ட்ல எல்லாம் பிரிச்சாச்சி, டிரக்டர் கண்டெய்னர்னு எல்லாம் செட் ஆயிட்டு, விமான எந்திரம் தண்ணி மோட்டார் ஆயிட்டு

எப்படி அண்ணே இப்படி என அதிர்ச்சியாய் கேட்டேன், தம்பி சீவகசிந்தாமணி, ராமயணம் எல்லாம் விமானம் பற்றி சொன்னதை நீ படிக்கவில்லையா? இதெல்லாம் தமிழனுக்கு சாதாரணம் என்றார். அடுத்து விமான தயாரிப்பு பறத்தல் , மண்ணெண்ணயில் விமானத்தை இயக்குதல் போன்ற பயிற்சி எல்லாம் வழங்கினார்.

இப்படி பயிற்சி அளிச்சிட்டு என்னிடம் சொன்னார், தம்பி தமிழகம் முழுக்க இப்படி விமானம் மாறுவேடத்தில் இருக்க வேண்டும், நான் சொல்லும்பொழுது நீ தயாராகி பறந்து வந்து கொழும்பை தகர்க்க வேண்டும்

நானும் 2008ல் தயாரானேன், எங்க ஊர்பக்கம் நான் பறந்தபொழுது பனையேறிட்டு இருந்த சிலர் பார்த்துட்டாங்க, விஷயம் கருணாநிதி காதுக்கு போயிட்டு

அவர் உடனே எல்லா விமான என்சினையும் பறிமுதல் செய்து அறிவாலயம் பக்கம் வச்சிருந்தார், மாமல்லபுரத்துக்கு வந்த சில பிரெஞ்ச்காரன்ட இந்த திமுககாரன் எல்லாம் அத‌ வித்துட்டானுக‌

அந்த விமானம்தான் இப்பொழுது ரபேல் என இந்திய அரசு வாங்கியிருக்கின்றது என் உறவே, எப்படிபட்ட அநீதி இது , எப்படிபட்ட கொடுமை இது

நானும் என் அண்ணனும் அசால்ட்டா செய்த விமானம் இப்பொழுது டசால்ட் ரபேலாம்..

இத மாதிரி கேணத்தனம் ஏதாவது உண்டா என் சொந்தமே"

தமிழகத்திலிருந்து ஸ்ரான்லி ராஜன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com