Monday, October 22, 2018

இதுவரை வன்னியில் 11086 ஆறு அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் மாத்திரம் அகற்றப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட புலிகள் வன்னியில் தஞ்சமடைந்தனர். அவர்கள் அங்குள்ள மக்களையும் தங்கள் இருப்பு பிடிக்குள் வைத்திருந்தனர். இக்காலத்தில் வன்னியின் சகல பிரதேசங்களிலும் மிதிவெடிகளை விதைத்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (ளூயசி) ஸார்ப் நிறுவனம் புலிகளால் விதைக்கப்பட்ட வெடிபொருட்களை அகற்றி வருகின்றது.

குறித்த சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஒக்டோபர் ; மாதம்; 15 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஆறு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதின்மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (649,613) இருந்து பதினொராயிரத்து எண்பத்து ஆறு (11,086) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் மொத்தம் 118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 11 பெண் பணியாளர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிறுவனம் நான்கு இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து எட்டு (422,828 ளஙஅ) நிலப்பரப்பினை மக்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com