Tuesday, September 4, 2018

மக்களின் எதிரிகள் ஆட்சியாளர்களே! அனுர குமார திசாநாயக

மக்கள் விடுதலை முன்னணியானது நாட்டை காக்கும் நாட்டை கட்டி எழுப்பும் மக்கள் நல ஆட்சி என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்பு நேற்று (03) மல்லாவி அணிச்சியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக, நாங்கள் இன்று உங்கள் முன் வந்திருப்பது எமது நாடு இன்று முகம்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பிலும் இவற்றிலிருந்து எவ்வாறு இந்த நாட்டை மீட்டெடுப்பது என்பது தொடர்பில் உங்களுடன் கலந்துரையாடவே ஆகும்.

ஆங்கிலேயர் எமது நாட்டை விட்டு சென்றதிலிருந்து கிட்டத்தட்ட 7௦ ஆண்டுகளாக ஒவ்வொரு அரசாங்கங்களை அமைத்திருக்கின்றோம், விரட்டியிருக்கிறோம் எமது நாட்டு மக்கள் அரசாங்கத்தை அமைக்கவும் அவர்களை விரட்டவும் மீண்டும் அரசாங்கத்தை அமைக்கவும் மக்கள் அணி திரண்டிருக்கின்றனர்.

ஏன் மக்கள் இந்த அரசாங்கங்களை அமைக்கின்றனர். எமது அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆனாலும் எழுவது ஆண்டுகள் அரசாங்கத்தை அமைத்தாலும் அரசாங்கத்தை கலைத்தாலும் அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கினாலும் எழுவது ஆண்டுகளாக எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை.

ஒரு மனிதனாக வாழ்வதற்கு பல அடிப்படை தேவைகள் உள்ளன. எமக்கு ஒரு வருமானம் வேண்டும் பிள்ளைகளுக்கு கல்வி வசதி வேண்டும். இருப்பதற்கு ஒரு வீட்டு வசதி வேணும் நல்ல சுகாதார வசதிகள் வேண்டும். நல்ல போக்குவரத்து வசதிகள் வேண்டும். குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வேண்டும்.

ஆனால் இந்த ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவில்லை, இன்று எமது நாட்டிலே மக்கள் பல்வேறு பிரச்சனைகலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

அவர்களுக்கு சிறந்த ஒரு வருமான வழி இல்லை. இன்று இந்த கிராமப்புற மக்களை வாட்டும் பிரதான பிரச்சினைதான் இந்த கடன் பிரச்சினை, எல்லா இடங்களிலும் இந்த கடன்களை பெற்றவர்கள் இருக்கின்றனர். இந்த மாகாணத்தை பொறுத்தவரை இங்குள்ளவர்களில் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகிறது ஆனால் அதற்க்கான வசதிகள் உள்ளதா?

உங்களுக்கு விவசாயம் செய்ய நல்ல விதை நெல் கிடைக்கிறதா? விவசாயம் செய்ய இடம்? அதற்க்கான நீர் வசதி? அந்த விளைபொருட்களை விற்றுக்கொள்ள சந்தை வாய்ப்பு? எனவே உங்களது பிரதானமான வருமான வழி விவசாய துறை எனில் அதனை அபிவிருத்தி செய்யாது உங்களது வருமானத்தை உயரத்த முடியாது. 7௦ வருடங்கள் கடந்த பின்பு திரும்பி பார்த்தால் மிகவும் வறுமையில் வாழ்வது எமது விவசாயிகள் எனவே எமக்கு இந்த கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஒரு ஆட்சிமுறை வேண்டும்

எமது நாட்டின் பிள்ளைகளின் கல்வித்துறைக்கு என்ன நடந்திருக்கிறது நாங்கள் நகரமா அல்லது சிங்களமா தமிழா அல்லது பணம் இருக்கிறதா இல்லையா அல்லது படித்தவர்களா இல்லையா இந்த வேற்றுமைகளை ஒழித்து கட்டி அல்லது இல்லாதொழித்து பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்க்கு முயற்சிக்குறோம்.

ஆனால் இன்று பாடசாலைகளில் என்ன நிலை பாடசாலைகளில் போதிய கட்டிடங்கள் இல்லை அல்லது தளபாடங்கள் இல்லை அல்லது உரிய ஆசிரியர்கள் இல்லை எந்த அடிப்படை வசதிகளும் இல்லை நாங்கள் எவ்வளவு எதிர்பாப்புக்களை வைத்துக்கொண்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினாலும் பிள்ளைகள் திறமான பெறுபேறுகளை பெறுவதில்லை எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியாத அரசாங்கங்கள் எங்களுக்கு தேவையா?

எங்களுக்கு ஒரு சிறந்த வீட்டு வசதி உள்ளதா அரசாங்கத்தின் தரவுகளை கூறுகிறேன் எமது நாட்டில் வீடுகள் அற்ற இரண்டரை இலட்சம் குடும்பங்கள் உள்ளனர். சிலருக்கு வீடுகள் உள்ளது ஆனால், அது வீடுகளே இல்லை எமது நாட்டில் வீடுகளில் சுமார் பத்து வீதம் 15 ற்கு 15 அளவிலேயே உள்ளது. அதை நாங்கள் வீடாக கருத முடியாது குறிப்பாக கடந்த யுத்த காலப்பகுதியிலே இந்த பகுதிகளிலே வாழ்கின்ற மக்களுடைய பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன இன்னுமே இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. இந்த மக்களில் வீடில்லா பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏன் நாங்கள் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்க முடியவில்லை.

எமக்கு சிறந்த சுகாதார வசதி இருக்கிறதா? இன்று கிராமப்புற மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் சிறுநீரக நோய்கள் பல்வேறு வகையான தொற்றா நோய்கள் என அவதிப்படுகின்றனர் எமக்கு ஒரு சிறந்த சுகாதாரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க இந்த ஆட்சியாளர்களுக்கு முடியவில்லை

எமது பிள்ளைகளுக்கு சிறந்ததொரு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியவில்லை பெரும்பாலான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இன்று எந்த பகுதியிலே என்ன வேலைவாய்ப்பு இருக்கிறது கொழும்பிலே கடைகளிலே அல்லது கட்டிட வேலைகளில் கொங்கிரீட் வேலைகளில் அல்லது பாதை வேலைகளில் எனவே சிறந்த ஒரு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியாத அரசாங்கமாக தான் இருக்கின்றனர்.

வடக்கிலும் அப்பிடித்தான் தெற்கிலும் அப்பிடித்தான் சிங்கள், தமிழ், முஸ்லிம் என்ற வேற்றுமைகளை கடந்து அடிமட்டத்திலுள்ள மக்கள் இந்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறோம்.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டாமா நாம் கஷ்டப்படும் இந்த நிலையை எமது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமா எமக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. இன்று நாங்கள் படும் கஷ்டத்தை எமது பிள்ளைகள் அனுபவிக்காதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்? அரசியல் வாதிகள் தான் எனவே எதற்கு தீர்வாகவும் நாம் இதையே பாவிக்க வேண்டும் இதற்க்கு எப்பிடி தீர்வு காண்பது இதற்காக நாம் என்ன செய்யபோகிறோம்.

சிங்கள மக்களில் இருந்து தமிழ் மக்களை பிரிக்கும் போராட்டமா தெற்கிலிருந்து வடக்கை பிரிக்கும் போராட்டமா அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டமா என்ற போராட்டம் அல்ல தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேற்றுமைகளை கடந்து விவசாயிகள் இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

மீனவ மக்கள் இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். வடக்கு தெற்கு என்ற பேதங்களுக்கு அப்பால் எமது பிள்ளைகளுக்கு நாங்கள் கல்வியுரிமையை வழங்க வடக்கு தெற்கு என்ற பேதங்களுக்கு அப்பால் வைத்தியசாலைகளை நிர்மாணிக்க வேண்டும். இது வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள பிரச்சினை அல்ல சிங்களவர்களுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் அல்ல தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களது போராட்டமல்ல எமக்கு என்ன தேவை 7௦ ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேற்றுமை இன்றி ஒன்றாக இணைந்து போராடவேண்டிய தேவை உள்ளது.

எங்களுடைய அனைத்து மக்களுடைய எதிரிகள் யார் சிங்களவர்களுடைய எதிரியாக தமிழர்களும் தமிழர்களுடைய எதிரியாக சிங்களவர்களையும் குறிப்பிட முடியாது. எமது எதிரிகள் இதுவரை காலமும் எமது நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள். அவர்களுக்கிடையே ஒருபோதும் பிரிவினை இருக்கவில்லை அவர்கள் ஒன்றாக சிறப்பாக இருந்தார்கள். எமது நாட்டு மக்களுடைய பணத்தை களவாடுகின்றனர் இவர்களுக்கு எப்போதும் வீட்டு பிரச்சினை இல்லை அவர்களுக்கு கொழும்பில் ஒரு வீடு வேறு இடங்களில் வீடு குளிர் பிரதேசமான நுவரெலியாவில ஒரு வீடு அதேபோன்று வெளிநாடுகளிலும் வீடு உண்டு.

அவர்களுக்கு ஒருநாளும் வீட்டு பிரச்சினை இல்லை அவர்களுக்கு தொழில் வாய்ப்பு பிரச்சினையும் இல்லை அப்பா ஜனாதிபதி எனின் மகன் அமைச்சர் அப்பா அமைச்சர் எனின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தொழில் பிரச்சினை இல்லை எல்லா இடங்களிலும் உள்ளனர். மாகாண சபை அல்லது பாராளுமன்றங்களில் இருக்கின்றனர் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு பிரச்சினை இல்லை.

அவர்களுக்கு மருத்துவ பிரச்சினை உள்ளதா அவர்கள் மருந்தெடுக்க போவது எங்கே முன்னாள் ஜனாதிபதி அவர்கள் அவருடைய இடுப்புவலிக்கு மருந்து எடுக்க சென்றது சிங்கப்பூர் அவர்களுக்கு சுகாதார பிரச்சினை இருக்கா ராஜித சேனாரட்ன நாட்டின் சுகாதார அமைச்சர் மருந்து எடுக்க சென்றது சிங்கப்பூர் நாட்டின் சுகாதார அமைச்சருக்கு நாட்டின் சுகாதார துறையில் நம்பிக்கையில்லை ஜனாதிபதி நிதியத்திலிருந்து 1௦௦ இலட்சம் ரூபாவை ராஜித சேனாரட்ன அவர்களுக்கு மருந்தெடுக்க வழங்கினர்.

இந்த நாட்டின் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிக்க இரண்டு மூன்று இலட்சம் வழங்குகின்றனர். ஆனால் அமைச்சருக்கு மருந்தெடுக்க 1௦௦ இலட்சம் ரூபாவை வழங்குகின்றனர். எமது இந்த பகுதியில் உள்ள வைத்திய சாலைகளுக்கு கூட ஒரு வருடத்தில் 1௦௦ இலட்சம் ரூபாவை ஒதுக்குவதில்லை அவர்களுக்கு பிரச்சினை இல்லை எனவே இந்த ஆட்சியாளர்கள் இதுவரை மகளுடைய சொத்துக்களை வீணாக்கினர். மக்களுடைய சொத்துக்களை சூறையாடினர். இந்த ஆட்சியாளர்கள் மக்களுடைய பணங்களை எவ்வாறு சூறையாடினர் என்பது வெளிவந்துகொண்டு இருக்கிறது.

அந்த வகையில் அண்மையில் வெளியாகியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரூபா 111 கோடி சீன நிறுவனமொன்றிடம் பெற்றதாக இந்த 111 கோடி என்பது முல்லைத்தீவு மாவட்ட சொத்துக்கள் அனைத்தையும் சேர்த்தாலும் வராது இவ்வாறு இவளவு நிதியை என் அந்த நிறுவனம் வழங்கியது. அதாவது இந்த நிதி சாதாரண மகிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு சீனா பிரஜை வழங்கவில்லை ஜனாதிபதி மகிந்தவுக்கு வழங்கியது.

எமது நாட்டின் துறைமுகங்கள் விமான நிலையங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் இலக்குவைத்து வழங்கப்பட்டது. எனவே, இது லஞ்சம் எனவே எமது நாட்டு ஜனாதிபதி லஞ்சம் வாங்கியவர்.

அதுமட்டுமல்ல நாட்டின் பிரதமர் பிணைமுறி மோசடியில் அவருக்கு தொடர்பிருக்கிறது. மத்திய வங்கியானது நிதியமைச்சின் கீழ் தான் இருக்கிறது. அதை முதல் தடவையாக பிரதமர் தனது பொறுப்பின் கீழ் கொண்டுவந்து சிங்கப்பூர் பிரஜை ஒருவரை கொண்டுவந்து மத்திய வங்கி ஆளுனராக்கினர் களவாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.

களவெடுத்ததன் பின்னர் நாட்டை விட்டு வெளியேற வழியமைத்து கொடுத்தார். எனவே, எமது நாட்டின் தலைவர்கள் களவாணிகள் தலைவர்கள் களவானிகளாக இருக்கும் போது நாடு முன்னேறாது களவானிகளுக்கு அரசியல் என்பது வியாபாரம் அவர்களது வியாபாரம் அரசியல் எனவே வியாபாரமாக்கப்பட்ட அரசியலை மீட்டெடுக்க வேண்டும் வியாபாரமாக்கப்பட்ட அரசியலை ஊழல் மோசடிகள் உள்ள அரசியலை மக்கள் சார்பான அரசியலாக மாற்றவேண்டிய தேவை உள்ளது.

நாங்கள் எந்த அரசாங்கத்தை அமைத்தாலும் எந்த தலைவர்களை கொண்டுவந்தாலும் ஊழல்வாதிகளாக மக்களை பற்றி சிந்திக்காது தம்மைப்பற்றி சிந்திப்பவர்களாக இந்த நாட்டுக்கு நல்லது நடக்காது நாங்கள் 7௦ ஆண்டுகளாக அரசாங்கத்தை அமைத்தாலும் தலைவர்களை கொண்டுவந்தாலும் நாங்கள் கொண்டுவந்தவர்கள் ஊழல்வாதிகள் களவாணிகள் அதையே நாங்கள் மாற்ற வேண்டும்.

எனவே, நாங்கள் இந்த தவறான அரசியலை இந்த ஊழல் நிரம்பிய அரசியலை மீட்டெடுக்க வேண்டும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாங்கள் எங்களுக்கு அரசியல் வியாபாரமல்ல நாங்கள் இந்த அரசில் இருந்து ஒரு சதத்தை கூட எடுக்கவில்லை. அப்பிடியானால் என் இந்த அரசியலை தேர்ந்தெடுத்தோம் எமக்கு தெரியும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுடைய வாழ்க்கை மிகவும் அடிமட்டத்தில் உள்ளது எனவே இந்த நாட்டு மக்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை வேண்டும்.

அந்த வாழ்க்கையை உறுதிப்படுத்த கூடிய ஒரு அரசியல் தேவை எனவே இந்த நாட்டிலே ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் சிறந்த ஒரு வாழ்க்கை அவசியம் புதிய அரசியல் பாதை தேவை புதிய ஒரு அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் அதற்காகவே நான் ஒன்றுபடுவோம் என்றார்

எங்களுக்கு இருப்பது இனவாதம் அல்ல இன்று என்ன நடக்குறது தமிழர்களுக்கு பிடித்த அரசியல் தமிழ் இனவாதம் ஆக இருக்கிறது. சிங்களவர்களுக்கு பிடித்த அரசியல் சிங்கள இனவாதம் ஆக இருக்கிறது முஸ்லிம்களுக்கு பிடித்த அரசியல் முஸ்லிம் இனவாதம் ஆக இருக்கிறது இந்த இனவாதத்துக்கு அப்பால் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சிறந்ததொரு எதிர்காலத்தை அமைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com