Saturday, September 29, 2018

கூட்டுவீர் பாராளுமன்றை! சபாநாயகரை கோருகின்றது கூட்டு எதிர்கட்சி.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு அவசர பாராளுமன்ற அமர்வை நடத்துமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அவசர பராளுமன்ற அமர்வை நடத்தும் அதிகாரம் தற்போது பிரதமரிடம் காணப்படுவதால் அவருக்கு இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆவது நிலையியல் கட்டளை சட்டத்திற்கு அமைய இந்த அதிகாரம் பிரதமருக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று முன்தினம் (26) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com