Saturday, September 29, 2018

ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாதாம் கூறுகிறார் - அநுரகுமார திசாநாயக்க

பிரபல இடதுசாரிக்கட்சியாக அறியப்பட்டதுதான் ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி. தற்போது அக்கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயகக்க சிவப்பு யானைக்குட்டி என பொது எதிரணியினரால் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

ஜேவிபி அரசியல் யாப்பின் 20 திருத்தத்தை தனி நபர் பிரேரணையாக கொண்டுவந்துள்ளது. அது மக்களின் வாக்குரிமையை கேள்விக்குட்படுத்தி அதனை மீறுவதாக விவாதிக்கப்படுகின்ற நிலையில், புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது ரூபா மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவை அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளத அவர் 20வது அரசியலமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு வேடிக்கையானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க் ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்றும், அவருக்கு ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருக்கும் ஆலோசகர்கள் என்ன கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்றும் ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

ஆனாலும், ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்பதை உணர்ந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை 20 ம் திருத்தத்தின் ஊடாக பிரதம மந்திரிக்கு பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அக்கருமத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமாரவை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com