Monday, September 10, 2018

இனவாதத்தின் தொடர் நிகழ்வுகள் நாட்டை குழப்பமடையச் செய்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் 39ம் அமர்வுகள் இன்று ஆரம்பமானது. இவ்வாரம்ப நிகழ்வில் பேசிய மனித உரிமைகளுக்கான புதிய ஆணையாளர் மைக்கேல் பெசேல்ட் (Michelle Bachelet) இனவாதத்தின் தொடர்ச்சியான சம்பவங்களால் நாடு தொடர்ச்சியாக குழப்பமடைவதை காணக்கூடியதாக உள்ளது தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு இலங்கை தொடர்பில் குறிப்பிடுகையில் :

இலங்கையில், இடைக்கால நீதித்துறையின் அர்த்தமுள்ள நடைமுறைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் மிக மெதுவாக நகர்வதுடன், காணாமற் போனோர் அலுவலகம் இப்போதுதான் அதன் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் விரைவாக செயல்பட அந்த அலுவலகத்திற்கு நாங்கள் கூறுகின்றோம். காணாமல் போனவர்களுக்கான பதில்களை வழங்க வேண்டும். பொறுப்புணர்வு மற்றும் சத்தியத்தோடும் நாடுகளின் நீண்ட கால ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் பெரும் எடையை கொண்டிருக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com