Monday, September 17, 2018

ஆளுனருக்கும் அனந்தி சதிதரனுக்குமிடையேயுள்ள நெருக்கம் என்ன?

வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அண்மையில் இந்திய பயணமொன்றை செய்திருந்தார். இந்திய பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமைச்சராக பெற முடியாத நிலை ஏற்பட்டபோது, அமைச்சு பதவியை தவிர்த்து, சாதாரண மாகாணசபை உறுப்பினராகவே விண்ணப்பித்து அனுமதியை பெற்றிருக்கிறார்

வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரை சட்டவிரோதமாக விக்னேஸ்வரன் பதவிநீக்கம் செய்ததையடுத்து விடயம் நீதிமன்று சென்றது. விக்கினேஸ்வரன் பதவி நீக்கம் செய்தது தவறானது என நீதிமன்று தீர்ப்பளித்து. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை விக்னேஸ்வரன் உதாசீனம் செய்ததால் முழு அமைச்சரவையும் செயலற்றுக்கிடக்கின்றது.

இந்நிலையில் வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், இந்திய பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பது அனந்தியின் திட்டம். இதற்கு முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்திய பயணத்திற்கு அனுமதி கோரி, ஆளுனருக்கு அனந்தி கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் அமைச்சர் என குறிப்பிட்டு அனந்தி கையொப்பமிட்டிருந்தார்.

அமைச்சரவை ஒன்று இயங்காத நிலையில் அமைச்சர் என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டிருந்தால் அது செல்லுபடியற்றதாகும். எனவே ஆளுனரால் அக்கடிதத்தை நிராகரித்திருக்க முடியும். மேலும் தாங்கள் தற்போது அமைச்சர் அல்ல என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கவும் முடியும். ஆனால் ஆளுனர் அமைச்சர் அன்றில்லாமல் உறுப்பினர் என்று புதிய கடிதம் தாருங்கள் அனுமதி தருகின்றேன் என மாற்றுவழியைக் காட்டி அனுமதியும் வழங்கியுள்ளார்.

அவ்வாறாயின் அனந்திக்கும் றெஜினோல்ட கூரேக்குமிடையிலான உறவு யாது?

அரசியல்வாதிகள் தங்களது பிரச்சினைகள் பரஸ்பர புரிந்துணர்வுடன் இவ்வாறு மிகுந்த விட்டுக்கொடுப்புடன் நிறைவேற்றிக்கொள்ளுகின்ற அதே நேரத்தில் மக்களை கூறுபோடுவதற்காக இனவாதத்தை கக்குகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com