Wednesday, September 26, 2018

இனவாதக் கருத்துக்களுடன் கல்முனைப்பக்கம் வராதே! கோடீஸ்வரனுக்கு கல்முனை பிரதி மேயர் எச்சரிக்கை!

தமிழ், முஸ்லிம் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும் கருத்துக்களோடு கோடீஸ்வரன் எம்.பி கல்முனை எல்லைக்குள் கால்பதிக்க கூடாது என கல்முனை மாநகர பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்:

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து ஒற்றுமையுடன் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையே இனவாத கருத்துக்களை விதைத்து இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் சமீப காலமாக கோடிஸ்வரன் (பா.உ) கல்முனையில் செயல்பட்டு வருகிறார்.

நான் கல்முனை மாநகரசபையில் கடந்த 2006 ஆண்டு முதல் அங்கம் வகித்த ஒரு பிரநிதியாக தற்சமயம் பிரதி மேயராக பதவியேற்ற காலம் முதல் இன்று வரையில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவிற்கு 100 வீதம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் போன்றவர்கள் இனவாத கருத்துக்களுடனேயே இன்றும் கல்முனை மாநகர மக்களிடம் மட்டுமல்ல அதற்கு வெளியிலும், தொடர்ந்தும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இனங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் தாங்கள் அரசியலில் நீடித்தது இருக்க முடியுமெனவும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்வதையே விருப்புகின்றார்கள்.

ஆனால், இனவாதத்தை அரசியல் மூலதனமாக கொண்டு இயங்கிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு மாத்திரம் மட்டுமல்ல நாடாளவிய ரீதியில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்க்கும் நோக்கின் அடிப்படையில் செயல்படுவதுடன், தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுத்தருவதாக கூறி தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்கள்.

இப்போது தமிழ் மக்கள் மத்தியில் இவர்களுடைய முகத்திரை கிழிந்து காணப்படுகிறது. அதனால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் குழப்பம்,

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com