Saturday, September 29, 2018

கொழும்பில் நடுத்தெருவில் மாணவர்களை விட்டு திரும்பிய புனித மிக்கேல் கலலூரி ஆசிரியர்.

கொழும்பில் டயலொக் கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் பங்குபற்ற புனித மிக்கேல் கல்லூரியின் அணி அதற்கு பொறுப்பான ஆசிரியர் தலைமையில் சென்றுள்ளது. குறித்த மாணவர்களை நடுத்தெருவில் விட்டு ஆசிரியர் மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மாணவர்கள் உண்ண உணவின்றி பொருத்தமான தங்குமிடமின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதை அறிந்த கொழுப்பிலுள்ள கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் அங்கு விரைந்து தற்காலிக வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஆசிரியர் அவ்வாறு மாணவர்களை நடுத்தெருவில் விட்டுவந்ததற்கான காரணம் யாது என்று இதுவரை தெரியவில்லை.

இது தொடர்பாக கல்வித்திணைக்களம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது அவதானிக்கப்படவேண்டியதொன்றாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com