Sunday, September 9, 2018

பொலிஸ் சீருடையில் நடனமாடிய பூஜித. அவமானமாம் கோட்டா

இலங்கை பொலிஸ் மா அதிபரின் நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி எசல பெரேராவின் பொலிஸ் சீருடையில் நடனமாடி தனது பதவிக்கு அவர் இழுக்கு ஏற்படுத்தி விட்டார் என்று கூறினார்.

இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கூறிய அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை மட்டுமல்ல யுத்தத்துக்கு பின்னரான அபிவிருத்தியையும் மேற்கொண்டார் என்றும் அதனால் தான் அத்தகைய ஒருவர் நாட்டுக்கு தலைவராக வரவேண்டும் நேரும் அவர் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்ஷவை எவ்வாறு சிறைச்சாலை சீருடையை அணியவைப்பது என்றே முழு அரசாங்கமும் சிந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டிய கோத்தபாய ராஜபக்ஷ போதைப்பொருட்களும் பாதாள உலக நாட்டை ாலும் நிலையில் இவாறு சுதந்திரம் இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com