Tuesday, August 14, 2018

என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும்! 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர் ஒபரோய் தேவன் அல்லது பறுவா என்று அழைக்கப்பட்ட குலசேகரம் தேவசேகரம்.

கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவர் தனது சுகபோக வாழ்வை துறந்து தமிழீழ விடுதலைக்காக ஆற்றிய பணிகள் காத்திரமானவை. இவ்வாறு அவரது களப்பணி மக்கள் மற்றும் போராளிகள் மத்தியில் வீச்சுப்பெற்றுச் சென்றபோது, தங்களை விட எவரும் வழரலாகாது என்ற நோக்கம் கொண்ட புலிகள் அவரை சுட்டுக்கொன்று இன்றுடன் 38 வருடங்கள்.

கடந்த 1983ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ம் திகதி நீராவியடியில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 25 வயது வாலிபனான ஒபரோய் தேவன் அவர்கள் இறக்க முன்னர் „என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும்' என்று தெரிவித்திருக்கின்றார் என்பதும் அது நிதர்சனமாகியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com