Sunday, April 22, 2018

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்

ம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவ்வாறான ஒரு மாற்றுத் தலைவரும் ஐ தே கட்சிக்குள் இன்னும் இனம் காணப்படவில்லை. அதனை ரணில் விக்ரமசிங்க விரும்பப் போவதுமில்லை.

அதேநேரம் இரு அதிகாரமையத்தின் விளைவுகளையும் ஐ தே கட்சி அனுபவித்து விட்டது. எனவே, மேற்படி பிரேரணைக்கு ஐ தே க ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

மறுபுறத்தில் இன்று சிங்கள மக்களின் மகோன்னத ஆதரவைப்பெற்ற மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. இன்னொருவரை ஜனாதிபதியாக்கி அவரின்கீழ் பிரதமராக செயற்படுவதை மகிந்த ராஜபக்ச உள்ளூர விரும்பமாட்டார்.

இந்நிலையில் அவரது அணியும் இப்பிரேரணையை ஆதரிக்கும். கூட்டு எதிர்க்கட்சி ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் புதிய நிபந்தனையாக குறித்த சட்டமூலத்தில் “சட்டமூலம் நிறைவேறிய கணம் பாராளுமன்றம் கலைந்ததாகவும் கருதப்பட வேண்டும்” என்ற சரத்தையும் உள்வாங்க வேண்டுமென்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளார்கள். இதற்கு ஐ தே கட்சி உடன்படாது.

மஹிந்த அணியைப் பொறுத்தவரை இது ஒரு கல்லில் இரு மாங்காய்க்கு முயற்சிப்பதாகும். இருந்தாலும் ஒரு மாங்காய்தான் கிடைக்குமாயினும் அதன்பெறுமதி கருதி அம்மாங்காயைத் தவறவிட மாட்டார்கள்.

சிறுபான்மைக் கட்சிகளின் நிலை

ஜனாதிபதி ஆட்சிமுறை சிறுபான்மைக்கு சாதகமானது; என்ற கருத்து பொதுவாக நிலவுகின்றது. ஆனால் ஐ தே க, கூட்டு எதிரணி, ஜே வி பி போன்றவை இணைந்தால் சிறுபான்மைகள் இல்லாமல் பிரேரணையை நிறைவேற்றமுடியும். அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் சிறுபான்மைக் கட்சிகள் அதனை எவ்வாறு சந்திப்பார்கள். பரந்த கலந்துரையாடல்கள் இல்லாமல், முன் ஆயத்தங்களில் ஈடுபடாமல் சடுதியாக பாரதூரமான விடயங்களுக்கு முகம்கொடுத்து சமூகங்களை இக்கட்டுக்குள் தள்ளுகின்ற அனுபவம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு நிறையவே இருக்கின்றன. சிறந்த உதாரணம் இரு தேர்தல் சட்டமூலங்களுமாகும்.

பாராளுமன்றத் தேர்தல் முறைமை மாற்றப்படுமா?

ஜனாதிபதி ஆட்சிமுறைமை ஒழிக்கப்படுமானால் பொதுத்தேர்தல் முறைமையும் அதனுடன் சேர்த்தோ அதன்பின்னரோ மாற்றப்பட வாய்ப்பிருக்கின்றது. கடந்த காலங்களிலும் இது பேசப்பட்டிருக்கின்றது. நாட்டில் பரவலாக அதற்கான கோசம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

இதற்கான காரணம் அரசின் ஸ்திரத்தன்மையாகும். விகிதாசாரத்தேர்தல் காரணமாக ஒரு தனிக்கட்சி ஆட்சியமைப்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாத்தியமில்லாமல் போகின்றது. இந்த நிலைமையின் தாக்கம் ஜனாதிபதிப் பதவிமூலம் ஈடுசெய்யப்படுகின்றது; என்று பெரும்பாலான தேசிய சக்திகள் நம்புகின்றன. ( இம்முறை ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது 2001ம் ஆண்டுபோன்று விசேட சூழ்நிலையாகும்). எனவே ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும்போது பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்திற்கான கோரிக்கை வலுப்பெறும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்தல் முறை என்பது சிறுபான்மைகளுக்கெதிரான ஒரு தேர்தல் முறையாகத்தான் இருக்கும். காரணங்கள் இரண்டு; ஒன்று பேரம் பேசும் சக்தியை இழத்தல். அண்மையில் வலி வடக்கு காணிகள் விடுவிக்கப்பட்டதும் இந்த பேரம்பேசும் சக்தியின் ஓர் வெளிப்பாடாகும். (முஸ்லிம் கட்சிகளின் பேரம் பேசுதலுக்குள் இங்கு நான் செல்லவிரும்பவில்லை.)

இரண்டு; இந்த நாட்டில் எந்தவொரு தேசியக்கட்சியும் அபூர்வமான சந்தர்ப்பங்களைத்தவிர 50 வீதம் அல்லது அதற்கு மேல் வாக்குகளைப்பெற முடியாது. ஆனால் 50 வீதத்திற்கு மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்று 50 வீதத்திற்குமேலான ஆசனங்களை ஒரு கட்சி பெறுவதை உறுதிப்படுத்துகின்ற தேர்தல்முறைதான் ஸ்திரத்தன்மையான அரசை ஏற்படுத்தும் தேர்தல் முறையாகும். இங்கு பெற்ற வாக்கு விகிதாசாரத்திற்கு மேலதிகமாக வெற்றிபெறுகிற கட்சியால் பெறப்படுகின்ற ஆசனங்களில் கணிசமானவை முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களுக்குரிய ஆசனங்களாக இருக்கும்.

அதேநேரம் இந்த இரு கட்சிகளும் இணைந்துவிட்டால் சிறுபான்மை இல்லாமல் தேர்தல் முறையையும் மாற்றிவிடலாம். இது நடக்குமா? நடக்காதா? என்பது விடயம். நடக்குமானால் நமது மாற்று ஏற்பாடு என்ன? அல்லது நடக்காமல் தடுக்க ஏற்பாடு என்ன?

சர்வஜன வாக்கு

பாராளுமன்றத்தேர்தல் முறையை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமே தேவை. சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை. எனவே, அது இந்த இரண்டு கட்சிகளின் ஆதிக்க எல்லைக்குள் இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி முறைமையை நீக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்புத் தேவை. இதன் சட்ட விளக்கத்தைச் சற்று ஆராய்வோம்.

இறைமை

இறைமை என்பது முழுமையான அல்லது கட்டுப்பாடற்ற அதிகாரம். இந்த அதிகாரம் அரசியல் யாப்பு சரத்து மூன்றின்படி, மக்களிடம் இருக்கின்றது. அது பிரிக்கப்பட முடியாதது. இந்த இறைமை அரச அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்குகின்றது.

இதன்பிரகாரம், அரச அதிகாரம் மக்களுக்குரியதும் பிரிக்க முடியாததுமாகும். அரசு மக்களின் அதிகாரத்தை ஒரு நம்பிக்கையாளர் சபை போன்றே செயற்படுத்துகின்றது. அதேநேரம் மக்களின் இந்த அதிகாரத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும்; என்றும் அரசியலமைப்புனூடாக கூறியிருக்கிறார்கள்.

சரத்து 4(a) இல் மக்களின் சட்டவாக்க அதிகாரத்தை பாராளுமன்றமும் சர்வஜனவாக்கினூடாக மக்களும் செயற்படுத்த வேண்டும்; என்றும்

சரத்து 4(b) மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியினூடாக செயற்படுத்த வேண்டும்; என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

எனவே மக்களின் இறைமையின் ஓர் அங்கமான நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியிடம் இருந்து முழுமையாக எடுப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு சிறுபான்மைகளுக்கு ஒரு பலமான ஆயுதமாகும். எனவே, இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது தொடர்பாக பரந்துபட்ட கலந்தாலோசனகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Read more...

Thursday, April 5, 2018

சுவிட்சர்லாந்திலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.

29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1947 அன்று தனது 55 ஆவது வயதில் மறைந்தார். அவர் தமிழிற்கும் சயத்திற்கும் தன்னை அர்பணித்து ஆற்றிய தொண்டு அளப்பெரியது. இக்காரணத்தினால் அடிகளார் உலகில் தமிழர் வாழுமிடமெங்கும் வருடாவருடம் நினைவுகூரப்படுகின்றார். அவ்வரிசையில் எதிர்வரும் 07.04.2018 அன்று சுவிட்சர்லாந்தில் kirch Trimbach, chäppeligass 19, 4632 Trimbach, Oltern எனும் விலாசத்தில் அடிகளாரன் நினைவுகூரல் நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில் அடிகளாரின் 125 நினைவு தினத்தையொட்டி வசந்தகுமார் அவர்களின் தயாரிப்பில் , சீவகன் அவர்களின் நெறியாள்கையில் வெளியிடப்பட்டுள்ள வாழ்க்கைவரலாற்று குறும்படம் காண்பிக்கப்படவுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.


kirch Trimbach
chäppeligass 19
4632 Trimbach
Oltern



Read more...

Monday, April 2, 2018

கந்தன் கருணை.

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம்

இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று.

அதில் மாற்றியக்க போராளிகள் சுமார் 70 பேர்வரை விசாரணைக்காக அடைக்கபட்டனர், அவர்களும் தமிழர்கள், அதே மக்களுக்காக போராட வந்தவர்கள், ஆனால் புலிகள்முன் துரோகிகள் இவர்கள் போக புலிகளுக்கு கப்பம் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், ஆலோசனை சொன்னவர்கள், சாபமிட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கு அடைத்துவைக்கபட்டனர்.

இது சகோதர இயக்கங்கள் சிறைவைக்கபட்ட இடம்..

விசாரணை என்றால் ஒன்றுமல்ல, அந்த மாற்றுகுழுவின் தலைவன் எங்கிருக்கின்றான், ஆயுதம் எங்கிருக்கின்றது என போட்டு அடிப்பது, சித்திரவதை செய்து அடிப்பது, இதன் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அவருக்கு கீழே பல அடியாட்கள் உண்டு.

இந்த வீட்டிற்கு காவலாக வந்தவன் அருணா எனும் புலி. இந்த அருணா முன்பு பிரபாகரனுடன் இருந்தார், பின் சண்டையில் சிங்களபடையிடம் பிடிபட்டான், பின் சந்திரிகாவின் கணவரின் முயற்சியில் யுத்த கைதிகள் பறிமாறியபொழுது மறுபடி புலிகளோடு வந்தார்.

பிரபாகரன் தன் நிழலையும் சந்தேகிப்பவர், இந்த அருணாவிற்கு சிங்களன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாம் என அருகில் சேர்க்கவே இல்லை, ஒரு அல்லக்கை போல அலைந்தார் அருணா.

தினமும் அந்த சிறைபட்ட போராளிகளை போட்டுசாத்துவது அவரின் அன்றாட பணி.

அன்றைய காலகட்டத்தில் புலிகளுக்குள் அதிகாரபோட்டி நிலவியது, பிரபாகரன் தமிழகத்தில் இருக்கும்பொழுது புலிகள் கட்டுபாடு கிட்டுவிடம் இருந்தது, கிட்டுவிற்கும் மாத்தையாவிற்கும் ஆகாது. பிரபாரனுக்கோ கிட்டு மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது, அவர் அப்படித்தான்

இந்நிலையில் தன் காதலியினை பார்க்க சென்ற கிட்டுவின் மீது குண்டு வீசபட்டு காலினை இழக்கின்றார்.

இதே கிட்டு முன்பு சிங்கள வீரனின் காலை குண்டுவீசி துண்டித்ததும், பின் அந்த காலை நல்லூர் கந்தசாமி கோவில் வாசலில் வீரசாட்சியாக ரத்தம் சொட்ட சொட்ட காட்சிக்கு வைத்த காலமும் உண்டு.

கோவில் வாசலில் இப்படி செய்யாதீர்கள், இது ஆண்டவனுக்கே அடுக்காது என பலர் சொன்னபொழுது கிட்டு அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டிய காலமும் உண்டு

தெய்வம் நின்று குண்டு வீசியது..

குண்டை வீச திட்டமிட்டதும், வீசியதும் புலிகளின் உட்கட்சி விவகாரம், அதில் பல மர்மம் உண்டு, பிரபாகரனின் நண்பன் மீது கைவைக்க பிரபாகரனின் அனுமதி இன்றி எப்படி? என்ற சர்ச்சை அன்றே உண்டு. ஆனால் அது வேறு யாரோ வீசியது என கதை கட்டினார்கள் புலிகள், விஷயம் அருணா காதுக்கும் சென்றது. அவ்வளவுதான் ஆங்கில படங்களில் வரும் ஹீரோ போல (புலிகளுக்கு அடிக்கடி ஆங்கில யுத்தபடம் காட்டபடுவதுண்டு) இரு மெஷின்களை கையில் எடுத்து கந்தன் கருணை இல்லம் புகுந்தான் அருணா.

அந்த கொடூரம் அரங்கேறிற்று

அங்கு இருந்த கைதிகள் மீது சுட தொடங்கினான், அவர்கள் அலறினார்கள், கதறினார்கள், காலில் விழுந்து அரற்றினார்கள், சிலருக்கு வாயிலே சுட்டான் சண்டாளன்.

மாடிக்கும் தளத்திற்க்கும் ஓடி ஓடி சுட்டான், அவன் களைத்ததும் அடுத்தவனை அழைத்டு சுட சொன்னான், சிலர் உயிர்தப்ப சமையலறை போன்ற இடங்களில் பதுங்கிகிடந்தனர்

எண்ணி எண்ணி தேடினர், தப்பியவர்களை கண்டனர், அழைத்து வைத்து சுட்டனர்

அவர்கள் நிலை எப்படி இருக்கும் என எண்ணிபாருங்கள்?, யார் இந்த அநியாயத்தை கேட்க, தடுக்க முடியும்? ஒருவரும் இல்லை

ஏராளமான அப்பாவி போராளிகள் காரணமின்றி உயிர்விட்டனர், அவர்கள் செய்த தவறென்ன? போராட வந்தது, தமிழீழம் அமைய சிங்களனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியது

இன்னும் கொடூரமாக அரைகுறை உயிரோடு இருந்தவர்களை தலையிலே சுட்டு கொன்றார்கள், ஒருவன் மட்டும் தப்பினான்

அவன் சொன்ன சொல்தான் மானிட அவலத்தின் உச்சம்.

எல்லோரும் சாகும் பொழுது ஆடு அறுக்கும்பொழுது வரும் சத்தம் போலவே முணகி செத்தார்கள்,

அந்த குரல் என் காதில் அடிக்கது என் காதில் ஒலித்து என்னை நிலைகுலைய செய்யும் என்னால் அதிலிருந்து மீளமுடியவில்லை

இவ்வளவு கொடூரம் நடந்தபின் , அவர்களை சாவாகசமாக கொண்டு எரித்துவிட்டு வந்தனர் புலிகள்

விஷயம் லேசாக கசிந்தபொழுது புலிகள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்கள் “அவர்கள் தப்ப முயன்றதால் நடவடிக்கை எடுக்கபட்டது, இருவர் மட்டும் பலி”

எப்படி இருக்கின்றது? இதுதான் புலிகள் நடத்திய போர், சொந்த மக்களையே கொன்று குவித்த சாகசம், தியாகம்,வீரம் இன்னபிற‌ இன்று சிங்களனிடம் சரண்டைந்த புலிகளை காணவில்லை, அதனால் ரஜினி போக கூடாது என திருமாவும் இன்னும் சிலரும் ஒப்பாரி வைக்கின்றனர்.

அன்று புலிகளிடம் சரணடைந்த தமிழர்களும் இப்படித்தான் காணாமல் போனார்கள். இந்த விவகாரம் அப்படியே அடக்கபட்டு பின் புலிகள் யாழ்பாணத்தை போட்டு ஓடிய பின்பே வெளிவந்தது,

தண்ணீர் லாரியில் வெடிகுண்டு நிரப்பி தாக்குவது அவர்கள் ஸ்டைல், ஒரு நாள் அது குடியிருப்பு அருகே வெடித்தது 50 தமிழர்கள் அங்கேயே செத்தர், புலிகள் ஜஸ்ட் டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு சென்றனர், இப்படி ஏராள சம்பவம் உண்டு

இந்த படுகொலை சம்பவம் பாருங்கள், போராட வந்ததும் தமிழர்கள், சிறைபிடித்தவனும் சிறைபிடிக்கபட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழன், கால் போனவனும் தமிழன், அவன் காலை உடைத்தவனும் தமிழன்..

இப்படி நடந்ததன் பெயர்தான் ஈழமக்களுக்கான போராட்டம்.

கந்தன் கருணை மாதிரியான‌ ஏராள சம்பவங்கள் உண்டு, கொஞ்சம் ஆழமாக பார்த்த்தால் சிங்களனை விட அதிகமான தமிழர்கள் புலிகளால் பாதிக்கபட்டிருக்க்கின்றார்கள். இதனை எல்லாம் நாம் சொன்னால் துரோகி. இப்படி மக்களின் வீட்டை அபகரித்து புலிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, பணம், வீடு, சொத்து , குழந்தைகள் என எதனை அவர்கள் விட்டார்கள்?

அப்படி மக்களின் வீட்டை அபகரித்துகொண்டு சிங்கள படையினை தாக்குவார்கள், அவன் திருப்பிதாக்குவான் வீடு இடியும் புலிகள் அவர்கள் போக்கிற்கு ஓடுவார்கள். அந்த வீடுகளை கட்டிகொடுக்கும் விழாவிற்குத்தான் ரஜினி செல்ல இருந்தார், அதற்குள் திருமா கும்பல் பொங்கிற்று.

இந்த கந்தன் கருணை சம்பவம் எல்லாம் சொல்வார்களா என்றால் சொல்லமாட்டார்கள்.

“கந்தன் கருணை” படுகொலை ஒரு எடுத்துகாட்டு, அது வெளிவந்தது. அதனைபோல வெளிவராத கொடூரங்கள் ஏராளம் உண்டு

அந்த அருணா என்ன ஆனான்? பின் இந்திய அமைதிபடை சென்று அவனை சுட்டு கொன்றது, இதுதான் இந்திய அமைதிபடை இலங்கையில் செய்த அட்டகாசம்..

கிட்டு என்ன ஆனான்? மிக தந்திரசாலி என தன்னை எண்ணிய அவன் அமைதிபடை காலத்தில் இந்திய நண்பன் போல நடித்து, ராஜிவ் கொல்லபடுவதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பு டெல்லியில் சென்று பார்க்குளவு இந்தியாவின் மதிப்பினை பெற்றான்

1987பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத சட்டையினை பரிசாக கொடுத்த ராஜிவ், கொல்லபடுவதற்கு கொஞ்ச‌ நாட்களுக்கு முன்பாக அவனை டெல்லியில் கார் வரை வந்து வழியனுப்பினார்.

அந்த அப்பாவி தலைவன் அப்படி எல்லோரையும் நம்பி செத்திருக்கின்றான். அந்த கிட்டு கொடுத்த நம்பிக்கையே புலிகளால் தனக்கு ஆபத்து இல்லை என அவரை நம்ப வைத்து, தைரியமாக சென்னைக்கு வரவழைத்தது.

அப்படிபட்ட நயவஞ்சக கிட்டுவினை இந்திய கடற்படை கப்பலோடு கொன்றது. ஆக அப்பாவி தமிழர்கள் சாக காரணமான‌ கந்தன் கருணை சம்பவத்திற்கு காரணமான அருணாவினையும், கிட்டுவினையும் தண்டித்தது சிங்களனோ, பிரபாகரனோ அல்ல‌ மாறாக இந்தியா இப்படி பெரும் துரோகம் செய்தது இந்தியா, நம்பிகொள்ளுங்கள்

இந்த கந்தன் கருணை இல்லம், சொந்த மக்களின் மேலே புலிகள் நிகழ்த்திய கொடூரத்திற்கு சுவடாய் இன்னும் அங்கே நிற்கின்றது

நிச்சயமாக அது ஒரு நினைவிடம், பெரும் அடையாளம், புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு.




Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com