Wednesday, January 31, 2018

13 வயது மாணவனின் ஆண்குறியில் இந்திரியப்பரிசோதனை செய்த ஆசிரியர் கைது ..

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவன் வீங்கிய தனது ஆண்குறியுடன் அழுகையை நிறுத்தமாட்டாதவனாக வதங்கிப்போய் அவமானத்தில் குறுகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் படுத்துக் கிடக்கிறான்.

அவனது இந்த நிலைக்கு பள்ளி ஆசிரியர் காரணமாக இருந்தார் என்கின்ற செய்தி தரக்கூடிய அயர்ச்சியிலிருந்து மீளமுடியாமலும், காலையிலிருந்து எந்தவொரு பணியையும் ஒழுங்காகச் செய்யமுடியாமலும் பதட்டமாக இருக்கிறேன்.

ஏறாவூர் றகுமானியா பாடசாலையிலிருந்து விலகி அலிகார் தேசிய பாடசாலைக்கு பெரும் விருப்பத்துடன் மாறியுள்ளான். ”அலிகாரியன்” என்று தானும் பெருமையாகச் சொல்லவேண்டும் என்ற விருப்பம் அவனுக்குள்ளும் உண்டாகி வீட்டில் சண்டைகள் புரிந்து பள்ளியை மாற்றக் காரணமாக இருந்திருக்கலாம். எது எப்படியோ பள்ளி மாறிய சிறுவனுக்குப் புதிய பள்ளியின் சூழலும் புதிய நண்பர்களும் ஆசிரியர்களும் பழக்கமாகுவதற்கு முன்பே, அலிகாரில் கற்பிக்கும் ஆசிரியர் அலி முஹம்மது (55) அவனது ஆண்குறியில் இந்திரியம் வருவதைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டுவிட்டது.

சென்ற சனிக்கிழமை, ”நீ கணிதப் பாடத்தில் வீக்காக இருக்கிறாய். உனக்கு விசேஷட வகுப்புத் தருகிறேன்” என்று தனியாக அழைத்து இரண்டு மணி நேரமாக பாலியல் சேஷ்டைகள் புரிந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் எல்லோரையும் போல பாதிக்கப்பட்ட சிறுவனில் எனக்கும் அதிக அக்கறை இருந்தபோதும், அவனை பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆசிரியரின் முகத்திரையை கிழிப்பதும் முக்கியம் என்று தோன்றுகிறது.

இந்த ஆசிரியர் கடந்த முப்பது வருடங்களாக பணியில் உள்ளவர். இவரால் பல சிறுவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலை நிர்வாகம் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று முறைப்பாடு செய்யும் பெற்றோர்களிடம் ”அல்லாஹ்வுக்காகச் ஸபூர் செய்யுங்கள். இனி இப்படி நடக்காது” என்று மன்றாட்டங்கள் செய்து இவரைக் காப்பாற்றி வந்துள்ளது. இந்த ஆசிரியர் மீது 20 வருடங்களுக்கு முன்பும் பொலிஸில் இதே விவகாரத்துக்காக முறைப்பாடு செய்யப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டதும் நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு என்றால் இன்று வரைக்கும் இந்த ஆசிரியர் எத்தனை சிறுவர்களின் ஆண்குறியில் இந்திரியப் பரிசோதனை நடாத்தியிருப்பார்?

இன்றைக்கும் இவரைக் காப்பாற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தருகிறோம் என்றும் ஏறாவூரிலுள்ள உலமாக்களும் ஆலிம்களும் ஆசிரியர்களும் ஓடித்திரிவதைப் போல ஒரு வெட்கங்கெட்ட செயல் வேறென்ன இருக்கமுடியும். பள்ளி நிர்வாகம் முன்பே இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் பல சிறார்களை இவரிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம். ”அடுத்தவனின் மானத்தைக் காப்பாற்றினால் உனது மானத்தை அல்லாஹ் காப்பாற்றுவான்” என்பதற்கான அர்த்தத்தை பிழையாகக் விளங்கிக் கொண்ட தற்குறி உலமாக்கள், ஆலிம்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் தகுந்த பாடம் புகட்டவேண்டிய தருணம் இது. இது ஆசிரியரின் மானம் சார்ந்ததோ, பாடசாலையின் மானம் சம்பந்தப்பட்டதோ இல்லை. சிறுவனின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. சிறுவர்களின் உளவியலைச் சிதைக்கும் காரியங்கள் எதிர்காலத்தில் உண்டாக்கும் விளைவுகள் பாரதூரமானவை.

இந்த ஆசிரியர் நஜ்மில் உலும் என்ற பெயரில் அரபிக் கலாசாலை ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்த அரபிக் கலாசாலையில் 100 வரையிலான மாணவர்கள் உள்ளார்கள். பள்ளி வாசல்கள் சம்மேளனத்தில் இவர் ஒரு உறுப்பினர் என்றும் தெரியவருகிறது. பள்ளி வாசல்கள் சம்மேளனத்தில் தலைவராக இருந்தவரே ஒரு பெண்ணைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஓடி ஒழித்தவர்தான் ஒரு காலத்தில். இப்படி வேலியே பயிரை மேய்ந்தால் எப்படித்தான் இந்த சமூகம் உருப்படும்?

பாதிக்கட்ட சிறுவனை நஷ்ட ஈடுகொண்டு தேற்றிவிட முயல்கிறவர்கள் அத்தனை பேர் மீது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்த ஆசிரியர் பெரும் செல்வாக்குப் பெற்றவர் என்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகூட கொஞ்சம் அப்படி இப்படித்தான் நடந்து கொள்கிறார் என்றும் அறிந்தேன். நியாயமாக இந்தப் பொலிஸ் அதிகாரி மீதும், ஏறாவூர் பள்ளி வாசல்கள் சம்மேளனம், அலிகார் பாடசாலை நிர்வாகம் அனைத்தின் மீதும் வழக்குத் தொடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த ஆசிரியரை பதவி நீக்கம் செய்து, ஓய்வூதியம் பெறமுடியாதபடி ஒரு தீர்ப்பை கொண்டு வரமுடியுமாக இருந்தால் நாடுபூராகவும் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக மாறும்.

சிறுவர்கள் நமது சொத்து. நாளைய நமது செல்வங்களைச் சுரண்டும் இந்தக் கயவர்களை எதிர்த்துப் போராட முடியாத நமது அறச்சீற்றத்தையும் எழுத்தையும் குப்பையில் தான் போடமுடியும்.

1929 என்ற இலக்கத்திற்கு (Child Help Line) அழைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பியுங்கள். ஏறாவூரில் மனிதாபிமானம் கொண்ட இளைஞர்கள் இருப்பீர்களாக இருந்தால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கொழும்பு அலுவலக இயக்குநருக்கு ஒரு கடிதத்தை உடனடியாகப் பெக்ஸ் மூலம் அனுப்புங்கள். பலர் கூடிக் கையெழுத்திட்ட மனுவாக அது இருந்தால் நன்று. பெக்ஸ் இலக்கம் தேவைப்படுகின்றவர்கள் உள்பெட்டியில் கேட்டுப் பெறலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளரான Sharmila Seyyid அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

என மனித உரிமைச் செயற்பாட்டாளரான அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

கைதினைத் தொடர்ந்து அவர் Sri Lanka Thowheed Jamath இற்கு கீழ்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்:

சட்டநடவடிக்கைக்கு ஏறாவூரின் SLTJ (Sri Lanka Thowheed Jamath) உறுப்பினர்கள் தான்காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள்.

தவிர்க்க முடியாமல் உம்மம்மாவின் சொலவடை ஒன்று துருத்திக் கொண்டு நினைவுக்கு வருகிறது. அது, "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்ற சொலவடை.

SLTJ க்கு ஏது சிறுவர் துஷ்பிரயோக அக்கறையெல்லாம்? அப்படியொரு அக்கறை SLTJக்கு மெய்யாகவே இருக்குமெனில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தில் பெண்களின் திருமண வயதை 18 ஆக திருத்தப் போராடியிருக்கவேண்டும். இந்தப் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனின் வயதுச் சிறுமிகளைத் திருமணம் செய்வதைச் சட்டமாக வைத்துக் கொண்டு அதனை மாற்ற ஆதரவளிக்காதவர்களின் சிறுவர் அக்கறை என்பது நகைப்புக்கிடமானது. அத்தோடு தாருநுஸ்ராவில் 18 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தச் சிறுமிகளின் நீதிக்காக குரல் உயர்த்தி இருக்கவேண்டும். மதரஸாக்களில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து வாய் திறந்திருக்கவேண்டும். அரபிக் கல்லூரிகளில் நிகழும் ஓர்பால் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.

இப்படி சுற்றி நிகழும் சமூகச் சீர்கேடுகள் ஒன்றைப் பற்றியும் வாய் உசுப்பாத SLTJ, இப்படியான சமூக அவலங்களுக்காக ஒரு துரும்பைத்தானும் தூக்கிப்போடாத SLTJ இன் ஏறாவூர் உறுப்பினர்கள் மட்டும் இந்த ஒரு விடயத்தில் பொங்கிக் கொண்டு புறப்பட்டது ஏன்? மருத்துவமனையில் இரவு பகலென்று பாதிக்கப்பட்ட சிறுவனுக்குக் காவல் இருந்தது ஏன்?

சம்பந்தப்பட்ட ஆசிரியர் / அவர் சார்ந்த மத நிறுவனத்திற்கு எதிரான ஒரு பழிவாங்கும் உட்பூசல் நடவடிக்கையாக இதனைப் பார்க்க முடியுமே தவிர சமூக அக்கறையாக கொள்ளவேண்டியதில்லை.

ஏறாவூர் SLTJ மட்டும் ஒரு முன்மாதிரியாக ரோசம் சூடு சுரணை உள்ள உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் அதனைப் பாராட்டுவதில் தவறில்லை. எங்கே அண்மையில் ஏறாவூரில் பதிவு செய்யப்பட்ட நான்கு பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளைப் பொலிசிலிருந்து தூசு தட்டி எடுத்து நீதி கிடைக்கச் செய்யட்டும் பார்ப்போம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com