Wednesday, May 31, 2017

பணம் பத்தும் செய்யும்

ஜி.ஜி. பொன்னம்பலம் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்.ஒரே ஒரு வட இலங்கைத் தமிழர்களின் தலைவராக இருந்தவர்.ஒரு அரசியல் தலைவர் என்பவர் சமூக அக்கறை உள்ளவராக நல்வழுப்படுத்துபவராக இருக்கவேண்டும்.சமூக நலன்களுக்காக தியாகங்கள் செய்யக்கூடியவரே நல்ல தலைவர்.

ஜி.ஜி. பொன்னம்பலம் ஒரு சிறந்த குற்றவியல் வழக்கறிஞர் .இவரின் மெய் பாதுகாவலராக ஓ.சி.கொரியா எனபவர் இருந்தார். இவர் ஒரு பிரபலமான குற்றவாளி என அறியப்பட்டவர். 1958 பாராளுமன்றம் முன்பாக நடந்த தமிழரசுக்கட்சி நடாத்திய சத்தியாக்கிரகத்தை ஒரு கிண்டலுக்காக பார்வையிட ஓ.சி.கொரியாவையும் அழைத்துக் கொண்டு வந்ததாக படித்தேன்.

இந்த தமிழர் தலைவர் பொன்னம்பலம் பல குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்றியவர்.தமிழ் நாட்டில் கருணாநிதிக்கு எதிரான ஊழல் வழக்கிலும் ஆஜரானார். கற்பழிப்பு, பெண் கடத்தல், கொலை, களவு என பல விவகாரங்களில் சிக்கிய தமிழ்,சிங்கள இஸ்லாமிய குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்றிய கதைகள் பலர் பலவிதமாக கூறக் கேட்டிருக்கிறேன்.

கோகிலாம்பாள் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் அமிர்தலிங்கம் வாதாடியதாக சொன்னார்கள்.ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை காப்பாற்ற ராம் ஜெத்மலானி,நாரிமன் போன்ற புகழ் பெற்ற வக்கீல்கள் உதவினார்கள்.

இப்படியாக குற்றவாளிகளை காக்க என்று பலர் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கிறார்கள்.

வித்தியா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு இன்னமும் இழுபறி நிலையில் உள்ளது. இது முடியுமுன்பாக மூதூரில் ஒரு சம்பவம் அரங்கேறிவிட்டது.

இந்த சம்பவத்தை ஒரு குற்ற சம்பவமாக பார்க்காமல் இனரீதியான வன்மம் என்றே பலர்( தமிழர்கள்) பதிவு செய்கிறார்கள். அந்த இடத்தில் அந்த நேரத்தில் ஒரு இஸ்லாமிய பெண்ணோ அல்லது பௌத்த பெண்ணோ போயிருந்தாலும் அவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதுதான் நடந்திருக்கும்.இதை இனரீதியாக பார்பதால் சம்பந்தப்பட்ட மதத்தை சேர்ந்தவர்களால் எந்த கருத்தையும் கூறமுடியாமல் தவிக்கிறார்கள் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

சில மாதங்கள் முன்பாக மட்டகளப்பில் ஒரு பெண் தற்கொலை செய்தார்.அவரின் தற்கொலைக்கு காரணமானவனை இனரீதியாக ஏன் அடையாளப்படுத்தவில்லை. ஆனால் இந்த கற்பழிப்பு சம்பவம் மட்டும் இரு ----- இளைஞர்கள். என ஏன் அடையாளப்படுத்த வேண்டும். இது வக்கிரமானது.

செல்வச் சந்நிதி,நல்லூர் போன்ற கோவில் திருவிழாக்களில் எவ்வளவு அசிங்கமாக நமது இளைஞர்கள் நடந்துகொள்கிறார்கள்.இதை என் இளம் வயதில் அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறேன். எத்தனை கற்பழிப்பு சம்பவங்கள் தமிழர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.பொலி கண்டி கமலம் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு பிரபலமானது.

அந்த கமலம் கொலை வழக்கில் பல பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளியை பாதுகாக்க கமலம் தன்னுடைய காதலி என வாய் கூசாமல் பொய்ச் சாட்சி சொன்னார்கள். இறந்த பின்னும் அந்த கமலம் சட்டத்தின் முன்பாக கேவலப்படுத்தப்பட்டாள்.இதை எந்த ஊடகமும் இன முலாம் பூசவில்லை.இந்த வழக்கின் தீர்ப்பு ஜூரிகளின் கைகளில் திணிக்கப்பட்டது.குற்றவாளி ஏகமனதாக ஜூரிகளின் சிபாரசில் விடுதலையானான்.

அந்த நாட்களில் வடக்கில் ஒரு அரசியல்வாதியின் சகோதரியையே ஒருவர் கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்தார்.1976 இல் ஒரு நீதிபதி இளம் பெண் சட்டத்தரணியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரவலாக பேசப்பட்டது. இதுவும் குடாநாட்டில்தான்.

எனது கிராமத்தில் 1975 இல் நடுத்தர வயது குடும்பப் பெண்ணும் ஒரு ஏழு வயது சிறுமியும் கற்பழிக்கப்பட்டனர்.மேல சொல்லப்பட்ட சம்பவங்களுக்கு தமிழர்கள் என ஏன் வசை பாடமுடியவில்லை.

இவ்வாறான குற்ற சம்பவங்கள் எங்கும் பொதுவானவை. கண்டிக்கப்பட வேண்டியவை.தடுக்கப்பட வேண்டியவை. வேறு மதம் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்காக மத முலாம் பூசுவது நல்லதல்ல. இந்த சம்பவத்துக்காக அந்த மதம் சார்ந்த எத்தனைபேர் அவிமானத்துடன் தலை குனிந்து நிற்கிறார்கள். காரணம் அவரகளின் மதத்தவன் என்ற ஒரே காரணம்.

குற்றவாளிகளை குற்றவாளிகளாக பாருங்கள்.தமிழ,சிங்களம்,இஸ்லாம் என இனமத அடையாளம் போடவேண்டாம்.

இந்த குற்றவாளிகளை காக்க ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற சிலர் வரலாம்.அதற்கும் மத முலாம் பூசவேண்டாம்.ஏனென்றால் பணம் பத்தும் செய்யும்.

இந்த சட்டம் சம்பந்தப்பட்டவர்கள் பணத்துக்காக எதையும் செய்பவர்கள்.நீதியைக் காப்பவர்கள் மிக குறைவானவர்களே.கேட்டால் தொழில் தர்மம் என்பார்கள்.

Vijaya Baskaran

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com