Monday, May 29, 2017

பெண்கள் எப்படி ரஷ்சியப் புரட்சியைத் தொடக்கினார்கள். வ.அழகலிங்கம்

ஒவ்வொரு மொழியிலும் உள்ள மிகவும் வீரமான வீறாய்ந்த சொல் புரட்சி என்ற சொல்தான். இந்தச் சொல்லாக் கேட்டால் மெய்தான் அரும்பி விதிர் விதிர்க்கும். இது சிலிர்ப்பிக்கும் மற்றும் அதிரவைக்கும், மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும். கொடுங்கோலர்களும் மற்றும் காலத்திற்கேற்ப தகவமைப்பவர்களும் கொள்கைமாறிகளும் அதற்கு அஞ்சுவர்.

ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டு ஆனந்தமடைந்து அதைப் பாராட்டுவர். ரஷ்சிய வரலாற்றின் பிப்ரவரி 1917 ன் பெரிய நிகழ்வுகள் செத்த வரலாறல்ல. இந்தப் பெரும் சமூகமாற்றத்தைச் செய்த தைரியமான ரஷ்சியப் பெண்களுக்கு, அந்தப் பாடங்களைக் கற்று அவைகளை இன்றைக்கு பிரயோகிப்பதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும். இன்றுவரையுள்ள மனித வரலாற்றில் அது மிகப்பெரிய ஒற்றை நிகழ்வு ஆகும். மற்றும் அந்தப் பெண்கள் வரலாற்றின் வீரங்கனைகள்.

'பெண்களின் கிளர்ச்சி எழுச்சிகள் இன்றி பெண்களின் ஊக்கமான உற்சாகமான பங்களித்தல் இன்றி பெரிய சமூகப் புரட்சிகள் சாத்தியமற்றது என்பதை வரலாற்றைப் பற்றி ஏதாவது தெரிந்த எல்லா மனிதர்களும் அறிவார்கள்.,,

லுட்விக் குகெல்மனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம், டிசம்பர் 12, 1868.


ரஷ்யாவில் பெண்தொழிலாளர்களால் எவ்வாறு ஒக்டோபர் புரட்சி தூண்டிவிடப்பட்டது? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1917 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினத்தில் ரஷ்ய புரட்சி தூண்டிவிடப்பட்டது. மார்ச் 8, 1917 இல் பெட்ரோகிராட்டில் ரஷ்ய புரட்சி பெண்களால் தூண்டிவிடப்பட்டதானது உலகத்திற்கு ஒரு பெரிய படிப்பனையாகும். அதன் பின்பு உலக அரசுகள் பெண்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை. ஒரு பெண் அரசியற்போராட்டத்தில் கலந்து கொள்ளுவதென்றால் அது ஒரு குடும்பம் கலந்துகொள்வதாகிவிடும். அதன் தாக்கத்தால் ஒருசமுதாயம் அரசியற் போராட்டத்தில் கலந்துகொள்வதாகி விடும். சர்வதேச மகளிர் தினமான அந்த துரதிர்ஷ்டமான காலையில், பெண் தொழிலாளர்கள் தங்கள் கருவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறித் தெருக்களில் சென்றனர். அன்று அவர்கள் ஆயிரக்கணக்கான பெண்களை வீதிகளிலே சந்தித்தனர். அவர்களில் பலர் இராணுவ வீரர்களின் தாய்களும் தாய்மைப் பேறுபெற்ற மனைவிமார்களும். 1914 யுத்தம் தொடங்கிய நாளிலிருந்து மெல்ல மெல்ல அவர்களின் குழந்தைகள் பசியால் வாடுவதையும் பட்டினியாற்சாவதையும் அலறல்களையும் இனிமேற் சகிக்கமுடியாத நிலையை அடைந்தனர். சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. சுடலைகள் நிரம்பி வழிந்தன. சாவுமணிகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இந்த நிலைமைகள் மக்களை மனச்சோர்வடையவைத்தது.

1914 ல் முதலாம் ஏகாதிபத்திய யுத்தம் தொடங்கியதிலிருந்து இந்த முடிவில்லாத யுத்தம் நகரத்தை நரகமாக்கியது. நகரத்திலே நீண்ட கியூ வரிசைகளிலே பாணுக்காக காத்திருக்க வைத்தது. பாணுக்கு வரிசைகளிலே கால்கடுக்க நிற்பது நகரத்தின் நித்திய நிரந்தர நிகழ்சியாகியதை மூன்று வருடங்களாகப் பொறுத்தனர். இது தாய்மார்களால் விடுக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பொருளாதார மற்றும் அரசியல் அறிக்கையாகும். அந்தக் காலத்தில் பெட்ரோகிராட் தொழிலாளர்களில் 47 சதவிகிதம் பெண்களாகும். பெண்களின் இந்தப் போராட்டம் மற்றும் ஆண் தொழிலாளர்களையும் வேலையை விட்டு வீதியிலே இறங்கும்படி தூண்டியது. இது நகரின் பொருளாதார வாழ்வைத் திறம்பட மூடியது. பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் ரஸ்சியாவுக்கு ஓர் அடிப்படை மாற்றம் தேவை என்று ஜார் நிக்கோலஸ் அரசாங்கத்திற்கு அறிவித்தனர்.

1917 மார்ச் 8 ம் திகதி பெண்களின் இந்த நடவடிக்கைகள் தன்னிச்சையானது போலப் பலருக்குத் தோற்றமளித்தது. இது உண்மையில் பெட்ரோகிராட்டின் ஆடைத் தொழில்களில் ஈடுபடும் பெண்களின் தொழிலாளவர்க்க போராட்டப் பாரம்பரியத்தின் மகத்தான பகுதியாகும். அவர்கள் வெகுசன வேலை நிறுத்தத்தின் சக்திபற்றி உணர்மையடைந்தே இருந்தார்கள். இந்த உணர்மையை உயர்த்தியதே லெனினது போல்சவிக் கட்சியின் மாபெரும் சமூகப் பங்களிப்பாகும். பெண்கள் இந்தப் போராட்டத்தின் மத்தியிலே சம உரிமைகள் வேண்டும், சமுதாய நலன்புரி சேவைகள் வேண்டும் என்ற சமூகநல அரசியற்கோரிக்கைகளையும் அதனோடு இணைத்தே கோரிப் போராடினர். மாக்ஸ்சியம் எப்பொழுதும் பொருளாதார, சமூகநல, அரசியற் கோரிக்கைகள் என்ற மூன்றையும் இணைத்தே தமது கோரிக்கைகளாக வைத்துப் போராடும். இது ஒன்றே தொழிற்சங்க வாதத்திலிருந்தும் தேசியவிடுதலை வாதத்திலிருந்தும் மாக்ஸ்சியத்தை வேறுபடுத்திக் காட்டும். தொழிற்சங்க வாதம் தனித்துப் பொருளாதாரக் கோரிக்கையை மாத்திரம் முன் வைக்கும். தேசியவிடுதலை வாதம் வெறுமனே அரசியற் கோரிக்கையை மாத்திரம் முன்வைக்கும். இந்த மூன்றையும் ஒன்றிணைக்காமையே வரலாற்றில் ஆயிரக்கணக்கான வெகுஜனப் பேரெழுச்சிகளை எதிர்ப்புரட்சிகள் நசுக்கியது.

ரஷ்யாவில் ஏற்பட்ட சர்வதேச மகளிர் தின எதிர்ப்பு இதுதான் முதற்தடவை அல்ல. 1913 லேயே பெண்களுக்கு வாக்களிக்கும் சமஉரிமையைக் கோரி நாட்டிலுள்ள அனேக நகரங்களில் ஆர்ப்பாட்ட அணிவகுப்புகளை ரஸ்சியப்பெண்கள் நடாத்தினார்கள். 1800 களின் பிற்பகுதியில் தொடங்கி, பெண்களுக்கு வாக்குப்பதிவு செய்வதற்கு மட்டுமல்லாமல், கல்விக்கான உரிமையையும் கோரி எத்தனையோ போராட்டங்களை நடாத்தியிருக்கிறார்கள். பாஸ்போர்ட் அடக்குமுறை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அதாவது அந்தக் காலத்தில் பெண்கள் எப்போதும் ஓர் ஆண் உறவினருடன் சேர்ந்தே பயணம் செய்யவேண்டும். அல்லது வேலைகள் மாறும்போது ஏற்படும் ஒப்பந்தங்களின் போது எப்பொழுதும் ஓர் ஆண் துணை சமூகமளிக்க வேண்டும். இவைகளையெல்லாம் ரஸ்சியப் பெண்கள் போராடி மாற்றினார்கள். வேலைத்தலங்களிலே பெண்தொழிலாளர்கள், அடிக்கடி செய்த கலகங்களை அலெக்ஸாண்ட்ரா கொல்லொண்டாய் பதிவுசெய்திருக்கிறார். 1890 களின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முக்கியமாக பெண்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் பல தொந்தரவுகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் இருந்தன: ஷாங்காயில் இருந்த புகையிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகளில், பெட்ரோகிராடில் இருந்த மேக்ஸ்வெல்,, நூற்பு மற்றும் நெசவு ஆலைகள் போன்றவற்றில் இப்படியான போராட்டங்கள் நடைபெற்றன. இப்படித்தான் ரஷ்யாவில் தொழிலாள வர்க்க இயக்கம் மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து வலிமை பெற்று, தன்னைத்தானே கட்டமைத்து, உருக்கு உறுதிவாய்ந்த நிறுவனமாகி புரட்சி செய்யும் வலிமையைப் பெற்றது. சமுதாய ஒட்டுண்ணிகளான போகவதிகளுக்கும் சமுதாயக் கடமையுணர்வோடு சமுதாய உணர்மையடைந்த ரஸ்சியப் பெண் பாட்டாளி வர்க்கத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ரஸ்சியாவிலே உலகின் முதலாவது சோஷலிச புரட்சி நிதர்சனமானது ஏதும் தற்செயல் அல்ல. ஒட்டுமொத்த வெகுசனங்களின் சிந்தனைகளின் கூட்டுத்தொகையின் சராராசரிப் போக்கு புரட்சிப் புள்ளியை நோக்கிய திசையில் பரிணமித்ததின் விளைவே ரஸ்சியப் புரட்சியாகும்.

ஏழைகளுக்கு கிடைக்கும் உணவுகளின் கடுமையான பற்றாக்குறையே 1917 மார்ச் 8 இன் வெகுஜனஎழுச்சியைக் கூடுதலாக ஊக்குவித்த காரணியாகும். முதலாம் உலகயுத்தத்தின் போது ஏற்பட்ட சமூக நெருக்கடி ஆழமடைந்ததால், உணவு பற்றாக்குறைக் கலகங்களுக்கு வழிவகுத்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில், பெண்கள் பேக்கரி ஜன்னல்களை உடைத்து, உள்ளே இருந்த பாண்களை எடுத்து வீதிகளில் குவிந்த பட்டினிப் பட்டாளங்களுக்கு வழங்கினர். போர்க் காலத்தில், பெட்ரோகிராடில் உள்ள பெண்கள் இரண்டொரு நாளைக்கு ஒருக்காவாவது குழந்தைகளுக்கு பட்டினியாற் கிடக்கும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உணவு கொடுக்கப் பத்து மணிநேரத்திற்கு மேலாகப் பட்டினத்திலே அலைந்து திரிய வேண்டியிருந்தது. இந்தச் சனக் கூட்டங்களைப் பார்த்த ஜாரின் இரகசிய போலீஸார் இது ஒரு நாளைக்கு ஒரு வெகுஜன எழுச்சியாக வெடிக்கக் கூடும் என்று முன் அனுமானித்திருந்தனர். இது பெண்களும் குடும்பங்களின் தாய்மார்களும் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து காத்திருந்து, காலமெல்லாம் காத்திருந்து அலுத்துப்போய், அவர்களின் கண்களுக்கு முன்னாலேயே பட்டினியாலும் அதன்காரணமாய் நோய்வாய்ப் பட்டும் இருக்கும் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்துப் பரதவித்து இந்த ஆட்சியின் கீழ் வாழ்வதிலும் ஒரேயடியாய்ச் சாவது மேலென்று மாறி மாறி ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளுவது ஒவ்வொரு கணநேரக் காட்சியாகவும் இருந்தது.

1917 மார்ச் 8 ம் திகதி பெண்களின் நடவடிக்கைகள் முற்றிலும் எதிர்பாராதவை அல்ல. ஆச்சரியம் என்னவென்றால் அவர்களின் போராட்ட வடிவம் பிரமிப்பானதாக இருந்தது. பாண் கலவரங்கள் மற்றும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெட்ரோகிராட் முழுவதும் எந்த முன் திட்டமும் இல்லாமல் ஓர் ஒருங்கிணைந்த வெகுஜன வேலைநிறுத்த ரூபத்தில் வெடித்தது. அது பல நாட்கள் நீடித்தது. அடுத்த நாள் ஒரு பொது வேலைநிறுத்த வடிவத்தை எடுத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சார்பாக இராணுவமும் பொலீசும் மாறியது. பல இடங்களில் சிப்பாய்க் கலகங்கள் ஏற்பட்டன. பெப்ரவரி 10 ல் ஒரு பொதுவேலை நிறுத்தம் ஏற்பட்டது. பெப்ரவரி 13இல் சார் மன்னனின் மந்திரிகள் கைது செய்யப் பட்டனர். இந்தப் புரட்சி எந்த உண்மையான தலைமை அல்லது முறையான திட்டமிடல் இன்றி, எந்தக் கட்சியின் வழிநடத்தலுமின்றி அனாமதேயமாகவும் தன்னிச்சையாகவுமே தோன்றி வளர்ந்தது. நகரம் குழப்பங்களால் நிரம்பி வழிந்தது. அனேகமான துருப்புக்கள் அரசுக்கு விசுவாசமின்றி விட்டோடியதோடு எழுச்சிகொண்ட மக்களோடு இணைந்து கொண்டனர். 1905 புரட்சியில் உருவாகிய சோவியத் என்ற தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகள் அமைப்பு மீண்டும் புதிதாக உருவாகியது. ரஷ்சியாவின் நிக்கொலஸ் சார் மார்ச் 15இல் தனது ஆட்சியைவிட்டு ஒடி ஒழித்துக் கொண்டார். 300 வருடங்களுக்குப் பிறகு கொடுங்கோன்மை சார் ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. ரஷ்சியப் பேரரசு வீழ்ந்தது. முதலாவது உலக யுத்தம் ஜேர்மானிய, ஆஸ்திரிய, ரஸ்சிய மூன்று பேரரசுகளையும் வீழ்த்தியது. மூன்று நாடுகளிலும் சோஷலிசப் புரட்சிக்கான கிளர்ச்சி எழுச்சிகளும் வெடித்தன.

இந்தப் புரட்சியின்போது லெனின் சுவிற்சலாந்திலுள்ள சூறிச்மாநகரில் அரசியற் தஞ்சம் கோரியிருந்தர். முதலில் புரட்சி நடந்த செய்தி கிடைத்தவுடன் லெனின் அதை நம்பவே இல்லை.

குறுப்ஸ்கயாவின் நினைவூட்டல்:


'ஒரு நாள், லெனின் மதியபோஷனத்திற்குப் பின்னர் நூலகத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது நான் உணவுப் பாத்திரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் கணத்தில் அவசர அவசரமாக பொறொன்ஸ்கி ஒரு செய்தியோடு ஓடிவந்தார். நீங்கள் செய்தியை அறிந்தீர்களா? ரஷ்யாவில், புரட்சி வெடித்துள்ளது. தான் அதைச் சிறப்புப் பதிப்புகளில் படித்ததாகக் கூறினார். பொறொன்ஸ்கி
வீட்டைவிட்டுப் போனபின்னர் சூரிச் ஏரிக்கரையில் எல்லாப் பத்திரிகைகளும் விற்பனைக்காகத் தூங்கவிடப்படும் இடத்திற்குப் போய்ப் பார்த்தோம். நாம் அந்தச் செய்திகளை மீண்டும் மீண்டும் படித்தோம். ரஷ்யாவில், உண்மையிலேயே புரட்சி வெடித்துவிட்டது. லெனினின் மூளை மிகவும் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

சினோவேவ்வும் றடக்கும் சுவிற்சலாந்திலேயே இருந்தனர். லியொன் ரொக்ஸ்சி நியூ யோர்க்கில் இருந்தார். ஸ்டாலின் கமனேவ் மற்றும் மற்றய போல்சவிக் தலைவர்கள் எல்லாம் சார் மன்னன் விட்டோடிய பின்னரே பீற்றஸ்பேர்க்குக்கு வந்தனர்.

பிப்ரவரி புரட்சி ஜார்ச ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவியது.

இந்தப் பிப்ரவரி 1917 புரட்சியானது, ரஷ்சியாவின் போருக்கு முந்திய அரசியல் மற்றும் பொருளாதார உறுதியற்ற நிலமைகளால், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலையில் இருந்ததால், மற்றும் அடிப்படை சமூகப் பிளவுகள் ஆகியவற்றால், யுத்த முயற்சிகளின் ஒட்டுமொத்த தவறான வழிகாட்டுதலால், இராணுவத் தோல்விகளால், உள்நாட்டு பொருளாதார முரண்பாடுகளால், மற்றும் மன்னரைச் சுற்றியுள்ளவர்களின் கொடூரமான ஊழல்களால் ஏற்பட்டது.

அதன் பழமையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதில் தோல்வி கண்டதால் ஏற்பட்டது. சுதந்தர வர்த்தக முதலாளித்தவத்திற்கும் வரம்பற்ற அதிகாரமுடைய தனிமனித சார் சர்வாதிகார ஆட்சிக்குமிடையே இசைந்துபோக முடியாமையால் ஏற்பட்டது. விவசாயிகளைக் பண்ணையார்கள் கொடூரமாக நடாத்தியது, நகர தொழிலாளர்களின் மோசமான வேலை நிலைமைகள், வளர்ந்து வந்த தொழில்துறைப் பொருளாதாரம், மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மேற்கு நாடுகளில் இருந்து ஜனநாயக கருத்துக்களை பரப்பி, குறைந்த வகுப்புகளின் வளர்ந்துவரும் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது.
ஏன் இப்படியான வெகுஜனப் புரட்சிகள் ஏற்படுகின்றன. இதை மார்க்ஸ் சமூக உருமாற்றமும் சமுதாயச் சிந்தனைமாற்றத்தல் (பதார்த்மாற்றத்தால); ஏற்படுபவை என்கிறார். social metamorphosis and social metabolism என்று தனது மூலதனம் முதலாம் பாகத்தில் குறிப்பிடுகிறார். பக்கம் 198. Marx introduces for the first time the concept of Metabolism. The chemical processes that occur within a living organism in order to maintain life. This bilogical analogy plays a cosiderable part in his analysis.

மார்க்ஸ் முதல் முறையாக(ஜீவத்துவ பரிணாமம); வளர்சிதை மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறார். உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரு உயிரினத்துக்குள் ஏற்படும் இரசாயன செயல்முறைகள் அதாவது பதார்த்த மாற்றங்கள்;. உண்ணும் உணவுகள் உயிர்வாழ்வனவின் உடலப்பகுதிகாளாக மாறும் இரசாயனம். இந்த உயிரியல் ஒப்புமை மாக்ஸ்சினது பகுப்பாய்வில் கணிசமான பங்கை வகிக்கிறன.

மாக்ஸ்சியம் என்பது ஒரு வெகுசன எழுச்சிமூலம் பழைய சமுதாயத்தைப் புதியசமுதாயத்தால் இடம்பெயர்க்கும் நிகழ்வுப் போக்காகும். குட்டிமுதலாளித்துவக் குறுங்குழுக் கொரில்லா வாதத்தை மாக்ஸ் அறவே வெறுக்கிறார். ஒரு சமுதாயத்தின் வெகுசனக் கடமையை எந்தக் குறுங்குழுவாலும் பிரதியீடு செய்ய முடியாது என்பதுவே மாக்சியமாகும். குறுங்குழுச் சதியால் வரலாற்றை மாற்ற முனைவதை மாக்ஸ்சியம் பிளாங்கிசம் என்று சொல்லும்.

முதலில் உயிரியல் உருமாற்றத்தில் லாவா அதாவது மயிர்கொட்டி கூட்டுப்புழுவாக(பியூப்பா) மாறிப் பின் வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கிறது. மயிர்கொட்டி வேண்டிய அளவுக்கு ஊட்டப்பெருட்களை உண்டு பெருத்தபின்தான் அதன் உறங்குநிலைக்குப் போகும். லாவா போதிய அளவு ஊட்டப் பொருட்களை உண்ணாது விட்டால் அதன் உறங்குநிலைக்காலத்தில் செத்துவிடும். கூட்டுப்புழுப் பருவத்தில் எந்த இயக்கமும் இன்றி அதன் உடல் மூலக்கூறுகள் கரிமப்பொருள்களாக மாறும் வேதியல் மாற்றத்திற்கு உட்பட்டு வேறுபதார்த்தங்களாக மாறுகின்றன. இந்த வேதியல் தாக்கங்கள் அதாவது (மெட்டாபோலிசிம்) நிகழாவிடில் உருமாற்றம் ஏற்படாது. கூட்டுப் புழுக்காலத்தில் ஏதாவது சிறு அசைவு ஏற்பட்டாலும் இந்த நிகழ்வு ஏற்படாது. கூட்டுப் புழுச் செத்துவிடும். வண்ணத்துப் பூச்சியும் உருவாகாது.

இந்த இயற்கை விஞ்ஞானத்தை மாக்ஸ் சமூகவிஞ்ஞானத்துக்குப் புகுத்துகிறார். அதை அவர் சமூக உருமாற்றமும் சமுதாய வளர்சிதைவும என்கிறார். (சோஷிசியல் மெட்டாபோலிசும்). அதாவது 300 வருடங்களுக்கு மேலாக இருந்த தனிமனித சர்வாதிகார சார் ஆட்சிமுறை சமுதாய ஆட்சிமுறையாக மாறிய நிகழ்வுப் போக்கு. முடிமன்னர் ஆட்சிமுறை சோஷலிசமாகிய நிகழ்வுப் போக்கு.

சமூக வளர்சிதை மாற்றம்(Social metabolism)


முரண்பாடான மற்றும் பரஸ்பர பிரத்தியேக சூழ்நிலைகளால் சமூகம் மாறுகிறது. சமூகத்தின் மேலதிக வளர்ச்சியானது இந்த உள் முரண்பாடுகளை அகற்றுவதில்லை, மாறாக சமூகம் செல்ல வேண்டிய இடத்திற்கு ஏற்ப உள்நிலமைகளை வழங்குகிறது. இது பொதுவாக, உண்மையான சமூக உள்முரண்பாடுகள் தீர்க்கப்படும் வழியாகும். இந்தச் சமூகமுரண்பாடு தொடர்ந்து வேறொரு சமூகமாக மாற்றிக்கொண்டே இருக்கும். அது மாறின அந்தக் கணத்திலேயே வேறொன்றாக மாறிவிடும். இது தொடர்ந்து நடைபெறும். இப்படியான இயக்கங்களினால் சமுதாய முரண்பாடுகள் தோன்றித் தோன்றி மறையும். இந்த நிகழ்முறையானது சமூக வளர்சிதை மாற்றத்தின் ஒரு செயல்முறையாகும். இங்கே மார்க்ஸ் முதன்முறையாக சமூக'வளர்சிதை மாற்றம்' பற்றி அறிமுகப் படுத்துகின்றார். அதாவது புறநிலை மாற்றங்களின் தாக்கங்களினால் அகவய மாற்றங்கள் ஏற்படுவதைக் காட்டுகின்றார். இதுவரை மனிதவாழ்வக்கு அனுகூலமாக இருந்த ஒரு வகையான மனித சமுதாயமானது புதிதாகப் பொருத்தமான வேறொரு சமுதாயத்தால் மாற்றப்படுது. ஒரு சமுதாயம் வரலாற்றுரீதியாக மானிடம் இணக்கமாக இசைந்து வாழ்வதற்குப் பொருத்தமில்லாததாக ஆகிவிட்டதால் புதிதாக மானிடவாழ்வுக்கு ஏற்றதாக அந்த சமுதாயம் மாற்றப்படுகிறது. முன்னாள் சமுதாயம் மட்டுமே இங்கே எங்களுக்கு ஆர்வமாக உள்ளது.

முழு செயல்முறையையும் அதன் வழக்க விதிமுறைகளின் அம்சமாக நாங்கள் சிந்தித்துப்பார்த்தால் அதாவது, சமூகத்தின் வடிவமாற்றம் அல்லது சமூகத்தின் உருமாற்றம் ஆகியவைகள் சமூக வளர்சிதைமாற்றத்தினால் (சமூக சிந்தனை மாற்றம்) உண்டாக்கப்படுகிறது என்பது தெரியவரும்.

வடிவத்தின் இந்த மாற்றம் மிகவும் அபூர்வமானதாக இருப்பதால், சூழ்நிலைகள் காரணமாக, மதிப்புமிக்க சமுதாய வாழ்வின் கருத்திலிருந்த தெளிவற்ற பற்றாக்குறையை தவிர்த்துப் பார்ப்போமானால், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாய வடிவத்திலும், பொருளாதார நிலைமைகளின் விளைவாக, இரண்டு சமுதாயங்களை உருவாக்குகிறது. அதாவது பழைய சாதாரண சமுதாயம் மற்றும் புதிய மேம்பட்ட குணம் கொண்ட சமுதாயம்.

சிறந்த சமூக வாழ்வுபற்றிய கருத்திற் கூடத் தெளிவான தன்மை இல்லாததால் சூழ்நிலைகள் காரணமாக இந்த வடிவமாற்றம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியாது போகிறது. சமுதாயத்தின் ஒரு வடிவமாற்றமானது சடத்துவ நிலைமைகளிலிருந்து விளைகிறது. இது பழைய காலவாதியாகிப்போன சமுதாயத்தோடு கூடவே புதிய மேம்பட்ட சமுதாயமொன்றயும் படைத்து இந்த இருசமூகங்களை ஒரே நேரத்தில் வைக்கிறது.

இந்த சமூகங்கள் ஒன்றையொன்று பரஸ்பரம் மாற்ற முற்படுகின்றன. இதை மாக்ஸ்சியம் முன்னது பின்னதான உறவு என்கிறார் (ஆங்கிலத்தில் Reciprocal relation). முன்னது பின்னதையும், பின்னது முன்னதையும் மாறி மாறி இடைவிடாது தாக்கும் நிகழ்வுப்போக்கு. ஒன்று முலாம் பூசப்படாத தேன் பூசப்படாத பழையது. மற்றது பொலிவான இனிப்பான புதியது. இரண்டுமே அவைகளின் சொந்த வீட்டில் வளர்ந்து வடிவம்பெற்றவை. தொடர்ச்சியான மாற்றங்களினால் இரண்டு சமூகங்களிலும் வேறுபாடுகள் உருவாகின்றன. வெளிப்புற எதிர்ப்புகள் பழையதற்கும் மற்றும் புதியதற்றிற்குமிடையே முட்டிமோதல்களை உருவாக்குகின்றன. மறுபுறம் இந்தப் பரஸ்பர முட்டிமோதல்களை ஏற்படுத்தும் இரண்டுமே சமூகங்கள். எனவே பழைய சமூகமும் புதிய சமூகமும் எதிரிடைகளின் சேர்க்கையாகும். ஆனால் இந்த ஐக்கியத்தில் உள்ள வேறுபாடுகள் இரு துருவங்களாகி விடுகின்றன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு வழியில் போகின்றது. துருவங்களாக இருப்பதால் அவைகள் இணைக்கப் பட்டிருப்பதைப் போலவே ஒன்றை ஒன்று எதிர்மறுக்கின்றன. சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் 300 வருடங்கள் நீடித்த ஒரு தனிமனித சர்வாதிகார சார் ஆட்சி உள்ளது. மறு புறத்தில் கிளர்ச்சி செய்யும் வெகுசனங்கள் தமக்குப் பட்டினிச்சாவு இல்லாத நலமான வாழ்வு வேணும் என்கின்ற ஒன்று உள்ளது. சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் சாதாரண வெகுசனங்களைக் காண்கின்றோம். ஒரு மாறி மாறி நடைபெறும் செயல் முறையையும் இந்த எதிர்மின் இயக்கத்தில் வெகுசனங்கள் என்ற இலத்திரன்கள் செயற்படுவதையும் காண்கிறோம். இதுவே இந்த இரு துருவங்களுக்குமிடையேயுள்ள மாற்று உறவு. இந்த இரு பரஸ்பர விரோத சக்திகள் சமுதாய மாற்றங்களின் போது செயற்படும் இயல்பான வடிவங்குளாகும். வெளியிலே இவைகளுக்கு ஏற்படும் எதிர்ப்புக்கள் உள்ளார்ந்த எதிர்ப்புக்களை உருவாக்குகின்றன. இந்த மாற்றமானது எதிரெதிராகச் செயற்படும் இரண்டு உருமாற்றங்களால் ஏற்படுகின்றன. பழைய நிலப்பிரபுத்துவ சமுதாயம் சோவியற் சமுதாயமாக மாற்றமடைகிறது. புதிய தற்காலிக சோவியற் சமுதாயம் மேலும் சோஷலிச சமுதாயமாக மாற்றமடைந்தது. என்ன மாதிரி பண்டம் என்ற லாவா பணம் என்ற பீயூப்பாவாக மாறி மீண்டும் பியூப்பா பண்டமாக மாறுவது போல, லாவா பியூப்பாவாக மாறி மீண்டும் பியூப்பா வண்ணத்துப் பூச்சியாக மாறுவதுபோல. இந்த உருமாற்றங்களின் இரண்டு கட்டங்களும் இரண்டு திட்டவட்டமான தனித்தனி மாற்றங்களாகும். மாற்றங்கள் அநித்தயமாகவோ நித்தியமாகவோ அன்றேல் இடைப்பட்ட கால எல்லையையோ வைத்திருக்கும். முழுச் செயல்முறைச் செயல்பாடுகளும் இயற்கை அல்லது சமூக விதிகாளால் ஏற்படுகின்றன.

பெப்ருவரிப் புரட்சியிலே லெனின் பங்கெடுக்காதது மாத்திரமல்ல அதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை.


லெனின் சூரிச்சிலுள்ள மக்கள் கோட்டை (Volkshaus schlos) என்ற பெப்ரவரிப் புரட்சிக்கு இரண்டுநாளைக்கு முன்னர் அதாவது 6.3.1917 இல் 1905 ஆம் புரட்சியின் நினைவாக சுவிற்சலாந்து சோஷலிசவாதிகளுக்கு முன் உரையாற்றும் பொழுது: 'புரட்சி நெருங்கி வருகின்றது. ஐரோப்பா முழுவதும் உள்ள தற்போதைய இடுகாட்டின் கல்லறை ஓய்வையிட்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது. ஐரோப்பா இப்பொழுது புரட்சிக் கர்ப்பத்தைச் சுமக்கிறது. அடுத்த ஆண்டுகளில் இந்த சூறையாடும் போர் உறவுகளால் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் பெரிய எழுச்சிகள் வர உள்ளன. அந்த எழுச்சியானது நிதிமூலதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக, பெரிய வங்கிகளுக்கு எதிராக, முதலாளிததுவத்திற்கு எதிராகவே வரும். இந்த அதிர்ச்சிகள் முதாளித்துவத்தின் உடைமைகளை அபகரித்து சோஷலிசத்தின் வெற்றியைச் சாதிக்கும். லெனின் இந்த முன் நோக்கைக் காட்டினார். ஆனால் அதன் தேதியைக் குறிப்பிடவில்லை. தனது சொற்பொழிவின் முடிவில்:'எங்களுக்கு வயது வந்துவிட்டதால் வரும் இந்தப் புரட்சியின் தீர்மானகரமான போர்கள்வரை உயிர்வாழ்வோமோ தெரியாது என்று மொதுவாகத் துக்கம் தோய்ந்த அடிக்குரலில் கூறினார்.,,,,

புரட்சிகள் வரும் விஞ்ஞான விளக்கத்தை மார்க்ஸ் பின்வருமாறு எடுத்தியம்புகின்றார்:

'மனிதர்கள் தங்களது வாழ்க்கைக்கான சமூக உற்பத்தியில் ஈடுபடும்பொழுது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ சில நிச்சயமான உறவுகளுள் நுளைவார்கள். இந்த உற்பத்தி உறவுகள் அவர்களின் பொருள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான நிலைக்கு ஒத்திருக்கும். இது உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்த சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பு ஆகும். இந்த உண்மையான அஸ்திவாரத்தில்தான், எந்த ஒரு சட்டமும் மற்றும் அரசியல் கட்டமைப்பைப்பும் எழுகிறது. இதற்கு ஏற்றாற்போலவே எந்தவொரு சமூக உணர்மையின் திட்டவட்டமான வடிவங்கள் அமையும். அவர்களது பொருள்சார் வாழ்வின் உற்பத்தி முறையானது சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்க்கை முறைகளை பொதுவாக நிர்ணயிக்கிறது. அவர்களது இருப்பை அவர்களது உணர்மை தீர்மானிக்காது மாறாக அவர்களது சமூக நலம் அவர்களின் உணர்மையை நிர்ணயிக்கும்.(மனிதர்களின் உணர்மையல்ல அவர்களின் இருப்பை நிர்ணயிப்பது மாறாக அவர்களின் சமூக வாழ்க்கையே அவர்களின் உணர்மையை நிர்ணயிக்கும்.) அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு சில காலகட்டத்தில், சமுதாயத்தில் பொருள் உற்பத்தி சக்திகளுக்கிடையே நிலவும் உற்பத்தி உறவுகள் முரண்பாட்டுக்கு வந்துவிடுகிறது, அல்லது – அவை ஒரு சட்டவெளிப்பாடு ஆகிவிடுகின்றன. அங்கே நிலவும் சொத்துடமை உறுவுகளுக்குள்ளே அவை செயற்படுகின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி வடிவங்களுக்கு இந்த உறவுகள் விலங்குகளாக மாறிவிடுகின்றன. பின்னர் சமூகப் புரட்சியின் ஒரு சகாப்தம் தொடங்குகிறது. பொருளாதார அஸ்திவாரத்தின் மாற்றத்தால், முழு மேற்கட்டுமான நிர்மாணமும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வேகமாக மாறுகின்றன. இத்தகைய மாற்றங்களைக் கருத்தில் கொண்டோமானால் அதாவது இயற்கை விஞ்ஞானத்தை, சட்டத்தை, அரசியலை, சமயத்தை, அழகியலை மற்றும் சுருங்கச் சொல்வதென்றால் தத்துவத்தில் ஏற்படும் மாற்றங்களின் சரித்தன்மைகளைக் கருத்தில் கொண்டோமானால் பொருள் உற்பத்தி நிலைமைகளே இவைகளைத் தீர்மானிக்கும். இந்தப் பொருள் உற்பத்தி நிலைமைகளின் மாற்றங்களுக்கு இடையில், முரண்பாடுகளும் முட்டிமோதல்களும் எப்போதும் செயற்படும். இந்த முட்டிமோதல்களைப் பற்றி மனிதர்கள் உணர்மையடைந்து அதற்கெதிராகப் போராடுவார்கள். ஒரு நபர் என்ன நினைக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரைப் பற்றிய கருத்தை நாங்கள் எப்படிச் சொல்ல முடியாதோ அதே போலவே நமது யதார்த்த வாழ்வில் சமூக உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதலின் பலனாய் எந்தக் காலத்தில் நம்முடைய சொந்த நனவில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை நாம்
ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.

மாறாக, இந்த உணர்மை சடத்துவ வாழ்க்கையின் முரண்பாடுகளிலிருந்து விளக்கப்பட வேண்டும். சமூக உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதலில் இருந்து விளக்கப்படவேண்டும். எந்தவொரு சமூக ஒழுங்கும் அதன் உற்பத்திச் சக்திகள் மேலும் அபிவிருத்தியடைய வாய்ப்புகள் இருக்குமட்டும் அழிந்துபோகாது. பழைய சமுதாயத்தின் கருப்பையில் புதிய உற்பத்தி உறவுகள் கருக்கொண்டு வளர்ந்து முதிர்ச்சியடைந்து மேலும் தப்பிப் பிழைப்பதற்குரிய சடத்துவ நிலைமைகள் தோன்றுவதற்கு முன்னர் ஒரு பொழுதும் புதிய உயர்ந்த உற்பத்தி உறவுகள் தோன்றாது. ஆகையால் மனிதகுலம் எப்பொழுதும் தன்னால் தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை மட்டுமே தீர்க்க முற்படும். இந்த விஷயத்தை இன்னும் நெருக்கமாக பார்த்தோமானால், நாம் எப்பொழுதும் அதன் தீர்வுக்குத் ;தேவையான சடத்துவ நிலைமைகள் ஏற்கனவே எம்கண்முன்பே எழுந்த பின்பே அல்லது அது குறைந்த பட்சம் அந்த நிகழ்வுப் போக்கு உருவாகத் தொடங்கினால் மட்டுமே அந்தப் பணி எமக்காக உள்ளன என்பதைக் கண்டு பிடிப்போம். சமூகத்தின் பொருளாதார உருவாக்கத்தில் பல முற்போக்கான சகாப்தங்களான ஆசிய பொருளாதார உற்பத்திமுறை, பண்டைய பொருளாதார உற்பத்திமுறை, நிலப்பிரபுத்துவ பொருளாதார உற்பத்திமுறை மற்றும் நவீன முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை போன்றவைகளை நாம் பரந்த வெளிப்பாடுகளாகக் குறிப்பிடலாம்.

உற்பத்தியின் முதலாளித்துவ உறவுகள், உற்பத்திமுறையின் சமூக செயல்முறையின் கடைசி விரோத வடிவமாகும். விரோத என்று சொல்லும் பொழுது தனிப்பட்ட விரேதத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக இந்த விரோதம் தனிநபர்களின் சமூக நிலைமைகளிலிருந்து எழும் ஒன்று. அதே நேரத்தில் முதலாளித்துவ சமுதாயத்தின் கருப்பையில் வளரும் உற்பத்தி சக்திகள் அந்த விரோதத்தின் தீர்வுக்கான பொருளாதா நிலைமைகளை உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக உருவாக்கமானது, மனித சமுதாயத்தின் வரலாற்றுக்கு முந்தைய நிலையின் இறுதி அத்தியாயமாகும்.

---அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கான பங்களிப்புக்கு முன்னுரை (1859)--

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com