Thursday, April 27, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பால் தவறவிடப்பட்ட அருமையான சந்தர்ப்பங்கள். ஸ்ரீரங்கன்.

நேரிடையாக தமிழரசு கட்சியை மட்டும் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக கூட்டமைப்பையும் சேர்த்து குற்றம் சாட்டுவது காரணத்துடனே தமிழரசு கட்சியின் தவறுகளை தட்டி கேட்க்காமல் அவர்களுடன் சேர்ந்து பயணித்து தவறுக்கு துணை போனது.

2015 ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு சர்வதேச சக்தியுடன் இணைந்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தென்னிலங்கை அரசியல் தலைமைகள் பல ரகசிய சந்திப்புகளை மேற்கொண்டதை யாவரும் அறிவர் குறிப்பாக ஐயா சம்பந்தனும் பிரதமர் ரணிலும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரியுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன் ஐயாவால் ஆட்சியை மாற்ற காட்டிய ஆர்வத்தில் சிறிதளவு கூட தமிழ் மக்களின் நலன் சம்மந்தமாக கலந்துரையாட படவிலை என்ற கசப்பான உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஏன் இந்த தவறை விட்டனர்? இங்கு இவர்களின் பேரபேச்சில் அரசிடமும் சர்வதேசத்திடம் எதிர்பார்த்தது பண வெகுமதிகள் மட்டுமே.

சிறப்பான ராஜதந்திரத்தை கையாண்டு பல விடயங்களில் குறைந்தபட்சம் காணி விடுவிப்பு. கைதிகள் பிரச்சினை. யுத்தத்தால் நலிவுற்றர்களுக்கு இழப்பீடு போன்ற விடயங்களில் எழுத்து மூல உறுதி மொழிகளை பெற்றிருக்கலாம். அரசுடன் மட்டுமல்லாது ஆட்சி மாற்றத்துக்கு தூண்டிய சர்வதேச சக்திகளுடன் பேசி சிறப்பாக காய் நகர்த்தியிருக்கலாம் ஏன் செய்யவில்லை?

நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி தமிழர்களை கோமண்துடன் நட்டாற்றில் விட்டுவிட்டு இன்று அரசு ஏமாற்றினாலும் சர்வதேசம் நம்மை கைவிடாது என்று புதிய வியாக்கீனம் பேசுகீறிர்கள்.

இதே வாயால் தான் இதயத்தால் இணைந்துள்ளோம் என்றீர்கள். பல விடயங்களை சாதிப்போம் என்று கூறினீர்கள் தற்போது என்னாச்சு?

எங்களுக்கு தெரியும் நாங்கள் மீண்டும் டொலர் காகங்களால் (தமிழரசு கட்சி தலைமை) ஏமாற்றபட்டுள்ளோம் என்பதை அடிக்கடி உங்கள் கட்சியினர் கூறும் சொற்பிரயோகம் (தமிழ் மக்கள் அரசால் ஏமாற்றப்பட்டால்) இது தவறான பதம் தமிழரசுகட்சியால் தவறாக வழி நடத்தி ஏமாற்றபட்ட மக்கள் என்பதே சரியான சொற்பதம். இதை கருத்து பதிவிடும் நன்பர்கள் யாரவது இல்லை என்று மறுதலிக்க முடிந்தால் சரியான காரணத்தை கூறி எனது கருத்தை நிராகரியுங்கள்.

அரசால் முற்றாக தாம் முட்டாள்கள் ஆக்கப்பட்டுவிட்டோம் என்பதை தமிழரசு கட்சி தலைமை நன்றாக உணர்ந்துவிட்டது. கிளிநொச்சியில் மாவையின் வாயால் வெளிவந்து விட்டது. இவர்களை பொறுத்தவரை கிடைத்தவரை லாபம்.

நிபந்தனைகள் ஏதுமின்றி மைத்திரியை ஆட்சிக்கு கொண்டுவர இதர கூட்டமைப்பு அங்கத்துவ கட்சி தலைவர் சுரேஸ் பிறேமசந்திரனுக்கு 35 லட்சம் தமிழரசு தலைமையால் வழங்க முற்படும் போது இவர்கள் எவ்வளவு பேரத்துக்கு விலை போயிருப்பார்கள் என்பதை அறியமுடியும்.

மாற்று தலைமைக்கான தேவை எதற்காக உணரபடுகின்றது என்பதை பின்வரும் நிகழ்வுகள் எடுத்தியம்புகிறது. மக்களின் உரிமைக்கான எமது போராட்டத்தில் சம்மந்தபட்ட தரப்பு எதிர் தரப்புடன் பணப் பட்டுவாடா செய்வதென்பது முற்றாக விலை போகும் தன்மையே.

ஐ நா சபை நிகழ்வுகளில் இவர்களின் நெகிழ்வு தன்மையை பலர் விமர்சித்திருந்தனர் ஆனால் இதன் பின் உள்ள உண்மை தன்மை யாதனில் பெரும் பணத்தொகை கைமாறியுள்ளது இவர்களின் மௌனத்துக்கான காரணம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.

இன்னும் இரு வாரங்களில் பாமரனுக்கு கூட வழிநடத்தல் குழுவால் தாம் ஏமாற்ற பட்டுள்ளோம் என்பதை அறிய முடியும் இனி என்ன செய்யமுடியும்?

தற்போது எமக்கான தேவை சலுகைக்கும் பணத்திற்கும் விலை போகாத தலைமையே வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கி எம்மையும் வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றும் அரசியல்வாதிகளை அடியோடு நிராகரிப்போம்.
மாற்றங்களை சிந்திக்கும் மக்களால் சிறப்பான மாற்றத்தை கொண்டுவர முடியும். மாற்றத்தால் உரிமை இலக்கை அடைய முயற்சிப்போம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com