Thursday, June 16, 2016

விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அழிக்காமல் ஓயமாட்டாராம் மைத்திரி!!

ஈழக் கனவு பற்றிய விடுதலைப் புலிகளின் கொள்கைகளை சர்வதேசத்திலிருந்து அழிக்காமல் ஓயமாட்டேன் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

இலங்கையின் கொழும்பு நகருக்கு அருகே தெஷிவளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, ”ஒரு நாடு, ஒரு இனம் என்ற ரீதியில் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சமூக அமைப்பினை நிலை நாட்டுவதற்காக, சமயத் தலைவர்களினதும் வழிகாட்டல் சிறப்பாக கிடைக்கப் பெற்று வருகிறது

யுத்த ரீதியாக விடுதலைப் புலிகள் தோல்வியுற்ற போதிலும், கொள்கை ரீதியில் அவர்கள் இன்னும் தோல்வி அடையவில்லை. விடுதலைப் புலிகளின் கொள்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பலர் இன்னும் பின்பற்றி வருகின்றனர்.

அதனால், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அழித்தொழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும், அவற்றை அழிக்காமல் விடப்போவதில்லை.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், உலகத் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஒழிக்கப்போகிறேன்” என்று ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com