Sunday, April 17, 2016

தானும் செய்யான் தள்ளியும் படான் என்ற சிலையில் வட மாகாண சபை. சாடுகின்றார் ராஜபச்சா

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு பல துய­ரங்­களை எதிர்­கொண்­டுள்ள மக்­க­ளுக்கு வட மாகாண சபை எதுவும் செய்­வ­தாக இல்லை. மாறாக அவர்­க­ளுக்கு சேவை­யாற்ற மத்­திய அர­சாங்கம் முயற்­சிக்­கும்­போது அதற்கு மாகாண சபை எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றது. இது குறித்து நாங்கள் கவ­லை­ய­டை­கின்றோம் என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

அர­சாங்கம் முன்­வைத்­துள்ள 65 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் உகந்­த­தாக இல்­லா­விடின் மாற்­றுத்­திட்­டத்தை வட மாகாண சபை முன்­வைக்­க­வேண்டும். ஆனால் மக்­களின் தேவை­களை மாகாண சபை நிவர்த்தி செய்­ய­வில்லை. வட மாகாண சபையின் முன்­னேற்றம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை. கூட்­ட­மைப்­புடன் சண்டை பிடிப்­ப­தற்கே வடக்கு முதல்­வ­ருக்கு நேரம் போதாமல் இருக்­கின்­றது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வடக்கு கிழக்கு வீட்­டுத்­திட்டம் மற்றும் அர­சாங்கம் வடக்கு கிழக்கில் முன்­னெ­டுக்­க­வுள்ள திட்­டங்கள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் இந்த விட­யங்­களை குறிப்­பி்ட்டார்.

நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்

குறு­கிய காலத்தில் வடக்கு மக்­க­ளுக்கு வீடு­களை அமைத்­துக்­கொ­டுக்­கவே 65000 வீட்­டுத்­திட்­டத்தை உரு­வாக்­கி­யுள்ளோம். இவ்­வாறு குறு­கிய காலத்தில் 65 ஆயிரம் வீடு­களை அமைத்­துக்­கொ­டுக்க உலகில் வேறு எந்த நிறு­வ­னமும் முன்­வ­ர­வில்லை. தற்­போ­தைய நிறு­வனம் அதற்கு முன்­வந்­துள்­ளது.

ஆனால் ஒரு வீட்­டுக்கு தற்­போது மதிப்­பி­டப்­பட்­டுள்ள செலவுத் தொகை அதி­க­மா­னது என்­ப­தனை நாங்­களும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால் குறு­கிய காலத்தில் இந்த திட்­டத்தை முடிப்­ப­தற்கு யாரும் முன்­வ­ர­வில்லை. எனவே தான் இந்த நிறு­வ­னங்­க­ளுடன் நாங்கள் பணி­களை முன்­னெ­டுக்கத் தயா­ரா­கினோம். அது மட்­டு­மன்றி எவ்­வ­கை­யி­லா­வது மக்­க­ளுக்கு வீடுகள் கிடைக்­கின்­றன என்­பதே இங்கு முக்­கி­ய­மாகும். அப்­பாவி மக்­க­ளுக்கு எந்த வழி­யி­லா­வது வீடுகள் கிடைக்­கும்­போது அதனை புறக்­க­ணிக்­கக்­கூ­டாது. அதனை எதிர்த்­துக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை.

இந்­நி­லையில் வட மாகாண முத­ல­மைச்சர் இந்த திட்­டத்தை எதிர்த்­துள்ளார். வட மாகாண சபை மக்­க­ளுக்கு பய­ன­ளிக்­கக்­கூ­டிய இந்தத் திட்­டத்தை எதிர்த்­தமை தொடர்பில் நாங்கள் கவ­லை­ய­டை­கின்றோம்.

இது­வ­ரையும் வட மாகாண சபை­யா­னது வடக்கு மக்­க­ளுக்கு உரிய முறையில் சேவை­யாற்­ற­வில்லை. அந்த மக்­க­ளுக்குத் தேவை­யான வச­தி­களை செய்­து­கொ­டுக்­க­வில்லை. மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்­ய­வில்லை.

அதா­வது வட மாகாண சபை கடந்த காலங்­களில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெளிக்­காட்­ட­வில்லை. அவர்கள் முன்­னேற்­றத்­தையே ஏற்­ப­டுத்­த­வில்லை என்றே கூற­வேண்டும். இந்த நிலையில் மத்­திய அர­சாங்கம் துய­ரப்­படும் மக்­க­ளுக்கு விரைவில் வீடு­களை அமைத்­துக்­கொ­டுக்க இந்த 65 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கும்­போது அத­னையும் தற்­போது எதிர்க்­கின்­றனர். இவர்கள் என்ன நினைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்று தெரி­ய­வில்லை.

எனவே வட மாகாண சபை மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்யும் விட­யத்தில் பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றோம். அப்­பாவி மக்­களின் தேவைகள் குறித்து பொறுப்­புடன் செயற்­ப­டுங்கள். ஆனால் வட மாகாண சபை மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்­வ­தற்கு மாறாக கூட்­ட­மைப்­புடன் சண்டை பிடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்­புடன் சண்டை பிடிப்­ப­தற்கே வடக்கு முதல்­வ­ருக்கு நேரம் போதாமல் இருக்­கின்­றது.

அர­சியல் தெரி­யா­த­வர்­களை பத­வியில் அமர்த்­தினால் என்ன நடக்கும் என்­ப­தற்கு சிறந்த உதா­ரணம் தற்­போது கிடைத்­துள்­ளது. மக்­களின் உட­னடி மற்றும் அடிப்­படைத் தேவைகள் குறித்து கூட்­ட­மைப்பு சிந்­திக்­க­வேண்டும். இந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்­டத்தில் குறை­பா­டுகள் இருந்தால் அது தொடர்பில் பேச்சு நடத்­தலாம். மாறாக இதனை எதிர்ப்­பதில் பய­னில்லை.

மேலும் இந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்­டத்­துக்கு பதி­லாக மாற்­றுத்­திட்டம் இருந்தால் வடக்கு முதல்வர் அதனை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிக்­கலாம். நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தலாம். வடக்கு கிழக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை விரை­வாக தீர்க்­க­வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். ஆனால் இந்த விட­யத்தில் வடக்கு மாகாண சபையும் பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எதிர்த்­துக்­கொண்­டி­ருப்­ப­தை­வி­டுத்து மாற்­றுத்­திட்­டங்­களை முன்­வை­யுங்கள்.

இதே­வேளை இந்த 65 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் தொடர்­பான அமைச்சர் சுவா­மி­நா­தனின் அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை ஜனாதிபதி நிராகரித்ததாக கூறுவதில் உண்மையில்லை. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இந்தத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடிவிட்டு விரைவில் முடிவெடுப்போம் என்றுதான் ஜனாதிபதி கூறினார். அதற்கு குழு ஒன்றையும் அமைத்தார். அதாவது இந்தத் திட்டத்தை விரைவில் செய்து முடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் ஜனாதிபதி இருக்கின்றார். ஆனால் அதனை நிராகரித்துவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்றார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com