Saturday, April 23, 2016

கோத்தபாயவை கைதுசெய்யக்கோரி மீண்டுமொரு முறை மூக்குடைபட்ட புலிப்பினாமிகள்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அவரை கைது செய்யக்கோரி இரு புலிப்பினாமி அமைப்புக்களான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன அமெரிக்க அரசுக்கு மனுக்கொடுத்தனர். இக்கோரிக்கையை அந்நாட்டின் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனர்.

இம்மனு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்கா ரோமப் பிரகடனம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடாமை, கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படாமை ஆகிய விடயங்களை முன்வைத்து அமெரிக்கா இந்த வேண்டுகோளை மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேநேரம் கோத்தபாய அமெரிக்க பிரஜாவுரிமையுடையவர். அவரை எதாவது ஓர் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யவேண்டிய தேவை அமெரிக்க அரசுக்கு இருக்குமாயின் அவ்வரசாங்கம் அவரை ஒரு குறுஞ்செய்தியூடாக அன்றில் மின்னஞ்சலூடாக அழைப்பாணையை அனுப்பி அக்கருமத்தை செய்து கொள்ளும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் மேற்படி அமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுவற்காகவும் தாங்கள் ஏதோ ஓர் செயற்பாட்டில் உள்ளனர் என்று மக்களிடம் போலிப்பிரபல்யம் தேடிக்கொள்வதற்காகவும் இவ்வாறான மலிந்த விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

எது எவ்வாறாயினும் இவர்களின் இச்செயற்பாட்டால் கோத்தபாய மீது சிங்கள மக்களுக்கு மேலும் கருணையும் அக்கறையும் எற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதன் அடிப்படையில் இவ்வமைப்புக்கள் ராஜபக்சவினரின் அத்தேவையை பூர்த்தி செய்வதற்காகவே செயற்படுகின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com