Thursday, March 3, 2016

ரஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது: மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் முருகன் உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. 7 பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

மக்களவையில் இந்த தீர்மானத்தின் மீது மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்யக்கூடாது என்றும், தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தை பரிசீலனை செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முடிவு பற்றி உள்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com