Thursday, February 4, 2016

மஹிந்தவின் எடுபிடி சிறிதரனுக்கு இன்று சுதந்திரமற்ற நாளாம்.

சுதந்திர தின விழாக்களை பகிஸ்கரிக்குமாறு மஹிந்த சார்பு சிங்கள இனவாதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்தது. சிங்கள இனவாதிகளின் இனவாத வெறிக்கு வடக்கில் தீனிபோடும் முதலாவது எடுபிடியாக சிவஞானம் சிறிதரன் என்ற முட்டாள் செயற்பட்டு வருவதும் யாவரும் அறிந்ததே. அந்த வகையில் சிங்கள இனவாத கும்பல் காலால் இட்ட கட்டளையை தலையால் நிறைவேற்றியுள்ளான் சிறிதரன்.

இன்றை சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் மற்றும் ஊடக பேச்சாளர் சம்பந்தன் , சுமந்திரன் கலந்து கொண்டிருந்த நிலையில் வடக்கின் சில பகுதியில் சிறிதரன் மக்களை கூட்டி சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்தவிற்கு தனது விசுவாசத்தை காட்டியுள்ளான்.

நாட்டிலுள்ள உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டின் தேசிய சுதந்திர தினம் என்பது அனைவருக்கும் பொதுவானதும் புனிதமானதுமாகும். நாட்டில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட நாசகார செயல்களால் கடந்த 3 தசாப்தங்கள் சுதந்திர தினம் இருளில் மூழ்கியிருந்தது. ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்காளிகளாக உருவாக்கிய ஒர் அரசின் தலைமையில் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர தினத்தை அக்கூட்டமைப்பின் அங்கத்தினனான கட்டாக்காலி ஊதாசீனம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வஞ்சக போக்கினை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது.

இன்று தமிழ் மக்களுக்கு சுதந்திர தினம் அல்ல என்று தெரிவித்துள்ள சிறிதரன் இலங்கையின் அரசியல் யாப்பை முற்று முழுவருமாக ஏற்றுக்கொள்வதாக சத்தியபிரமானம் செய்து அதனால் கிடைக்கப்பெறும் சிறப்புரிமைகளையும் சொகுசு வாழ்கையையும் அனுபவித்து வருகின்றான்.

ஆகவே சிறிதரன் சத்தியப் பிரமானம் செய்யும் போது எந்த தினத்தை இலங்கையின் சுதந்திர தினமாக ஏற்றுக்கொண்டான் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com