Saturday, February 13, 2016

கடந்தகால உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்! வெளிவிகார அமைச்சர் மங்கள

கடந்த காலத்தின் துன்­பங்­களும் அவ­லங்­களும் மீண்டும் நாட்டில் நிகழ இட­ம­ளிக்­கப்­ப­டக்­கூ­டாது. அனைவரும் இணைந்து முன்னோக்கி பயணிக்கவேண்டும். அப்­படி முன்­னேறுவதற்கு கடந்த காலத்தில் இடம் பெற்ற உண்­மைகள் கண்டறி­யப்­பட வேண்டும் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரிவித்தார்.

நல்­லி­ணக்க பொறி­மு­றை­க­ளுக்­கான ஆலோ­ ச­னை­களைப் பதி­வ­தற்­கான இணை­யத் தள அங்­கு­ரார்ப்­பண நிகழ்வும், விசேடசெயலணியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் ஆரம்ப வைபவமும் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செய­லக கேட்போர் கூடத்தில் நடை­பெற்­ற­ போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நல்­லி­ணக்க பொறி­மு­றை­க­ளுக்­கான ஆலோ­ச­னை­களைப் பதி­வ­தற்­கான இணை­யத்­த­ளத்தை ஆரம்­பித்து வைக்க இங்கு வந்­தி­ருப்­பது எனக்கு மகிழ்ச்சி தரு­கி­றது.

தேசிய ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல் அடிப்­ப­டை­யி­லான ஆணை­யுடன் கடந்த வருடம் ஜன­வரி 8ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவு செய்­யப்­பட் டார்.

போர்­க்குற்றம் மற்றும் நீதி வழங்­கலை உறு­திப்ப­டுத்­துதல் தொடர்­பான ரோம் உடன்­பாட்டில் இலங்கை கையெ­ழுத்­தி­ட­வில்லை என்­பதால் அவ்­வா­றான விட­யங்கள் தொடர்­பாக நீதி கிடைப்­பதை உறு­தி­செய்­வதற்கு சுயா­தீ­ன­மான, தேசிய நீதி வழங்கல் பொறிமுறை போதுமான தாக இருக்கும்.

இதனை ஜனா­தி­ப­தி­யி­னு­டைய 100 நாள் வேலைத்­திட்ட விஞ்­ஞா­ப­னத்தின் 93 ஆவது சரத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கிர சிங்க ஆகி­யோரின் அர­சாங்கம் பொறுப்­பேற்­கப்­பட்­டபின் உண்­மையை அறிதல், பொறுப்புக் கூறல் போன்ற விட­யங்­களை ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்கி ஆரா­ய­வேண்டும் என்­பதால் இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெளி­யி­டு­வதை பிற்­போ­டும்­படி மனித உரிமை ஆணை­யா­ளரைக் கேட்டுக் கொண்டோம்.

இந்த முறை­மையை தொட­ரு­வ­தற்­கான மக்கள் ஆணை கடந்த செப்­ரெம்­பரில் மீண்டும் ஒரு­முறை கிடைத்த பின் வர­லாற்றில் முதல் தட­வை­யாக இரண்டு முக்­கிய அர­சியல் கட்­சி­களை இணைத்து அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய பின் நான் மீண்டும் ஜெனிவா சென்று நல்­லி­ணக்கம், சீர்­ப­டுத்தல் மற்றும் பொறுப்புக் கூறலின் அடிப்­ப­டை­யி­லான கட்­ட­மைப்பு தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையில் விளக்­கினேன்.

பின்னர் நான் அங்கு கூறி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்­கையும் ஐக்­கிய நாடுகள் சபையில் பிர­தி­நி­தித்­துவம் கொண்­டி­ருக்கும் நாடு­களும் ஒரு தீர்­மா­னத்தை கூட்­டாக முன்­மொ­ழிந்­தன. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கடந்த வரு­டத்தில் பல முறை நல்­லி­ணக்கம், பொறுப்புக் கூறல் தொடர்­பாக தாங்கள் கொண்­டி­ருக்கும் உறு­திப்­பாட்டையும் ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் தங்­க­ளுக்­குள்ள அசை­யாத உறு­திப்­பாட்­டையும் வலி­யு­றுத்தி கூறி­யி­ருக்­கி­றார்கள்.

யுத்­தத்­தினால் ஏற்­பட்ட ரணங்­களை குணப்­ப­டுத்­தவும் சமா­தா­னத்­தையும் பாது­காப்­பையும் பெற்றுத் தரு­வ­தற்­கு­மான பொறுப்பு என்மேல் சுமத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த சந்­தர்ப்­பத்தின் உச்ச பயனைப் பெற்று ஜன­நா­யக பிர­ஜை­க­ளுக்­கான உரி­மை­களை அனை­வரும் ஒரே­வி­த­மாக அனு­ப­விக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2009 மே 19ம் திகதி யுத்தம் முடிந்த கையோடு அமை­தி­யான சுழ்­நி­லையை நாம் எல்­லோரும் அனு­ப­வித்தோம். ஆனால் நாம் பெற்ற அனு­ப­வங்­களை கொண்டு நாங்­களே செய்­ய­வேண்­டி­ய­தாக இருந்த பணி­களை நாம் செய்து முடிக்­க­வில்லை என்றே நான் நினைக்­கிறேன். அபி­வி­ருத்தி முக்­கி­ய­மென்­றாலும் மக்­களின் மனங்­க­ளையும் உள்­ளங்­க­ளையும் வெல்­லா­விட்டால் நாட்டை முன்­னேற்ற முடி­யாது.

இரு­வா­ரங்­க­ளுக்கு முன் சுதந்­தி­ர­தின விழாவில் ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேனா உரை­யாற்றும் பொழுது, ஜெனிவா தீர்­மா­னத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்றும் பொறுப்பு எங்­க­ளிடம் வந்­தி­ருக்­கி­றது. இந்த சந்­தர்ப்­பத்­தி­லி­ருந்து உச்ச பயனை பெற­வேண்­டி­யி­ருந்­தாலும் அதனை சர்­வ­தேச அழுத்­தத்­துக்­காக அல்­லாமல் எமது தேசத்தின் எமது மக்­களின் எமது படை­யி­னரின் கௌர­வத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அதனை செய்ய வேண்டும். அதன் மூலமே சர்­வ­தேச சமூ­கத்­துக்குள் இலங்­கைக்கு அதற்கு உரித்­தாக வேண்­டிய சக்­தி­வாய்ந்த ஜன­நா­யக ரீதி­யான ஸ்தானத்தை மீண்டும் ஸ்தாபிக்க முடியும் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

எங்­க­ளுக்கு பல விருப்பத் தெரி­வுகள் இருந்­தாலும் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் எவ்­வாறு அடை­யப்­பட வேண்­டு­மென்­பது அனைத்து பங்­கீட்­டா­ள­ரோடும் ஆரா­யப்­பட வேண்டும்.

இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை தீர்­மா­னத்தை கூட்­டாக முன்­மொ­ழிந்த பாரா­ளு­மன்ற விவா­தத்தின் போது த.வி.கூ. உள்­ளிட்ட அனைத்து கட்­சி­களும் நல்­லி­ணக்கம் தேவை­யென ஏற்றுக் கொண்­டுள்­ளன. நல்­லி­ணக்­கமும் பொறுப்பு கூற­லும்தான் எமது அணு­கு­மு­றை­யென பிர­தமர் ரணில் கூறி­யுள்ளார். கடந்த காலத்தை உண­ராது விடின் எமது நாட்­டையும் மக்­க­ளையும் அவர்­களின் பொரு­ளா­தார மற்றும் சமூ­க­ரீ­தி­யாக முன்­னேற்ற முடி­யாது.

இங்கு ஒரு தாயை சந்­தித்தேன். அவரின் கண­வரும் அவரை தொடர்ந்து மூத்த மகனும் புலி­க­ளுடன் இணைந்து சண்­டை­யிட்ட போது கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என அவர் அழுதார். இவ்­வா­றான பாதிப்­புக்கள் தெற்­கிலும் உண்டு. படை­வீ­ரர்­க­ளி­னதும் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­களின் தாய்­மாரும் இப்­படி அழு­கி­றார்கள்.

எமது அரசு பல விட­யங்­களை மேற்­கொண்­டுள்­ளது. இம்­முறை சுதந்­தி­ர­தின விழாவில் இரண்டு மொழி­க­ளிலும் தேசிய கீதம் பாடப்­பட்­டுள்­ளது. 3ஆயி­ரத்து 300 ஏக்கர் நிலம் மக்­க­ளிடம் விடுவிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 39 கைதிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். மற்­ற­வர்­களும் விரைவில் விடு­விக்­கப்­ப­டு­வார்கள். விசேட நீதி­மன்றம் இதற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ளது வடக்­கிலும் கிழக்­கிலும் குடிசார் நிர்­வாகம் மீள நிறு­வப்­பட்­டுள்­ளது.

8 புலம்­பெயர் அமைப்­புகள் மற்றும் 429 தனி­ந­பர்கள் மீதான தடைகள் நீக்­கப்­பட்­டுள்­ளன. சட்டம் நீதி­யி­னு­டைய ஆட்சி நிலை நிறுத்­தப்­பட்­டுள்­ளது

கறைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த ஆயு­தப்­ப­டை­களின் நற்­பெயர் தற்­போது சீர்­செய்­யப்­ப­டு­கி­றது.

கறை­பட்ட பெயரை சீர் செய்ய குற்­ற­மி­ழைத்­தோரை தண்­டிப்­ப­தொன்றும் புதிய எண்ணக் கரு அல்ல. 1970களின் மனம்பேரி சம்­ப­வத்­தையும் 1990 களின் கிரு­ஷாந்தி குமா­ர­சு­வாமி சம்­ப­வத்­தையும் இங்கே நினை­வு­கூ­ரு­கிறேன். ஆயு­தப்­ப­டை­களின் நற்­பெ­யரை களங்­கப்­ப­டுத்­திய ஒரு சில குழப்­ப­டி­கா­ரர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

நாங்கள் நல்­லி­ணக்க முயற்­சியை சர்­வ­தேச அழுத்தம் கார­ண­மாக மேற்­கொள்­ள­வில்லை. எமது நாட்டின் எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்டும். எமது குடி­மக்­களை சமத்­துவம் மேன்மை கௌரவம் கொண்­ட­வர்­க­ளாக ஆக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே அதனை மேற்­கொள்­கிறோம்.

கடந்த காலத்தின் துன்­பங்­களும் அவ­லங்­களும் மீண்டும் நிகழ இட­ம­ளிக்­கப்­ப­டக்­கூ­டாது. எல்­லோரும் இணைந்து முன்­னேற வேண்டும் அப்­படி முன்­னேற கடந்த கால உண்­மைகள் அறி­யப்­பட வேண்டும் தீவி­ர­வாதம் வடக்­கிலோ தெற்­கிலோ எழுப்ப அனு­ம­திக்க கூடாது.

எமது அர­சா­னது நீண்­ட­கால மற்றும் நிலை பேற்­றுத்­தன்மை அடிப்­ப­டையில் நல்­லி­ணக்கம் சமா­தானம் அபி­வி­ருத்தி என்பவற்றை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறுவ முயல்­கி­றது. இதன் மூலம் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய அபி­லா­சைகள் பூர்த்தி செய்­ய­மு­டியும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. கலா­நிதி மனோரி முத்து குமா­ர­சாமி தலை­மையில் மான்பு மிக்­க­வர்கள் 25 மாவட்­டங்­க­ளு­குக்கும் சென்றுநேருக்கு நேராக சந்­தித்து கருத்­து­க­கைள பெற்று பகுப்­பாய்பு செய்து ஒரு­அ­றிக்­கையை அரசுக்கு தருவார்கள். அதன் அடிப்படையில்அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

அரசாங்கத்தின் சார்பில் இந்த முயற்சியிலே அனைவரையும் பங்குபற்ற அழைக்கின்றேன். 1940 ஆம் ஆண்டுகளில் இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்தாக இருந்தது. கடந்த காலத்தில் இந்து சமுத்திரத்தின் கண்ணீர்துளியாக மாறிய இலங்கை மீண்டும் முத்தாகமாறவேண்டும்.

வங்குறோத்தாகிவிட்ட அரசியல் வாதிகள் வடக்கிலும் தெற்கிலும் மக்களின் உணர்ச்சிகளை தூண்ட முயற்சிக்கிறார்கள். எமது அரசாங்கம் நாட்டினை பல்லின, பல்மொழி, பல்மத, பல் கலாசாரமாக மாற்றவே முயற்சி செய்கிறது. எமது எதிர்காலத்தை வடிவமைத்து வரையறை செய்து உருவாக்கவே முயற்சிக்கிறோம் . கடந்த செப்ரெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைசபையில் “கனவுகான பயப்படாமலிப்போம் கலந்துரையாடலில் ஈடுபட பயப்படாமலிருப்போம்"என நான் கூறிய வசனங்களை கூறி முடிக்கிறேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com