Tuesday, February 16, 2016

விசுவமடுவில் விபத்து. முன்பள்ளி ஆசிரியை பலி!

விசுவமடு 12 ம் கட்டைப் பகுதியில் இன்று நண்பகல் நடைபெற்ற விபத்தொன்றில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் இலக்கம் 222 ஆனந்தநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியையான செல்வி சிவபாலன் கஸ்தூரி என தெரியவருகின்றது.

மேலும் விபத்தில் காயமடைந்தவர் முன்பள்ளி ஆசிரியை செல்வி.உசாநந்தினி(36) என இனம் காணப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மேலதிக சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நண்பகல் சிவில்பாதுகாப்புப் பணியக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலுக்காக விசுவமடு சிவில்பாதுகாப்புப் பணியகத்திற்கு சென்று திரும்பும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வன்னியிலிருந்து விஜய ராகவி


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com