Wednesday, February 3, 2016

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைகின்றார் பொன்சேகா! விருப்பம் இல்லை என்கின்றார் ஹரேன் பெர்ணாண்டோ!

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சற்று முன்னர் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ள இவ்வொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை, தனிப்பட்ட வகையில் விரும்பவில்லை எனவும், தான் அதனை எதிர்ப்பதாகவும், அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் கட்சியின் கொள்கைக்கு தலை வணங்கி தான் இதற்கு இணக்கம் தெரிவிப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்

பொன்சேகா கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர் எனவும், அவரை தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது, மக்களின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் காலஞ்சென்ற அமைச்சர் குணரட்ணவின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு நுழையவுள்ள சரத் பொன்சேவுக்காக இராணுவத்திருக்கான நலன்பேணும் அமைச்சு என்று புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக அவர் நியமிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அமைச்சுக்களின் எண்ணிக்கையை குறைப்போம் என ஆட்சியை பிடித்த நல்லாட்சியில் இடம்பெறப்போகும் இவ்விடயம் மக்களில் பாரிய விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதில் சந்தேகம் இல்லை.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com