Tuesday, January 5, 2016

தர்மபுரம் முன்பள்ளியை மூடினார் மாகாண கல்வி அமைச்சர். மாணவர்களின் கல்விக்கு நடந்தது என்ன? வி.வதனி

2016ஆம் ஆண்டு சனவரி மாதம் 04ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்தக் காலைப்பொழுதில் சிறகுகள் விரிக்கப்பட்ட பட்டாம் பூச்சிகளாய் எதிர்கால சின்னச் சின்னக் கனவுகளுடன் பெற்றோரின் கரம் பிடித்து பிஞ்சுக்கால்களை மண்ணில் பதித்து முன்பள்ளிக் கல்வியைத் தொடர்வதற்காக தர்மபுரத்தில் அமைந்துள்ள முன்பள்ளிக்கு வருகை தந்தபோது அந்தச் சின்னஞ்சிறுசுகளின் எதிர்காலக் கனவில் மதகுருவானவர் புயலாக வந்தார்.

அன்றையதினம் குறித்த முன்பள்ளிக்கு பெற்றோர்களுடன் மாணவர்கள் வருகை தந்தபோது யாரையும் உள்ளே செல்லவிடாது மதகுருவானவர் தடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல முன்பள்ளியைப் பூட்டி திறப்பினையும் எடுத்து விட்டார். முன்பள்ளி அமைந்துள்ள பகுதிக்கு புதிதாக வருகை தந்துள்ள மதகுருவானவர் அங்கே கல்விநடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களை கல்வி கற்பிப்பதாக இருந்தால் இராணுவத்துடன் தொடர்புடைய நீங்கள் அத்துறையில் இருந்து வெளியேறி எமது வேதனத்தில் கல்வி நடவடிக்கை தொடரலாம் எனவும் அப்படி இல்லாவிட்டால் , நீங்கள் இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பெற்றோர் அனைவரும் மதகுருவிற்கு எதிராகச் செயற்பட்டனர். அதுமட்டுமல்ல இம்முன்பள்ளி கட்டடம் வடமாகாண கல்வியமைச்சர் திரு.குருகுலராசா அவர்களுக்குச் சொந்தமானது. மதகுரு தொடர்பாக கல்வியமைச்சருக்கு கூறப்பட்டபோது அவரும் மதகுருவின் கருத்தையே தெரியப்படுத்தினார்.
கடந்த மூன்றுவருடங்களாக இதே ஆசிரியர்களால் கல்வி நடவடிக்கை நடைபெற்றபோது மௌனமாக இருந்த கல்வியமைச்சர் ஏன் இன்று மாணவர்களின் கல்விக்கு எதிரியாகஇருந்தார்.

முன் அறிவித்தலின்றி இவ்வாறு மதகுருவுடன் இணைந்து தமக்கு சொந்தமான இடம் என்பதற்காக நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டது சரிதானா? அத்திவாரத்தை உறுதியாகப் போடவேண்டிய நீங்கள் அடிப்படை கல்வி அறிவின்றி நடந்தது சரிதானா?

மனதையும் சமயத்தையும் போதிக்கும் உங்களுக்கு எவ்வாறு இரக்கமற்ற மனது வந்தது. இவற்றிற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com