Tuesday, January 12, 2016

அஸ்திரேலிய புலம்பெயர்வு வாய்ப்புகளால் 100,000 இலங்கையர்கள் பயனடைவு- அவுஸ்திரேலியா கேட்வே

அவுஸ்திரேலியா கேட்வே 2016 இல் பங்கேற்கும் விக்டோரியன் சட்டசபை சபாநாயகர் - டெல்மோ லங்குய்லர் எம்பி

சுகாதாரம் முதல் சொத்துவரை, வியாபாரத்துறையில் வெற்றி, கல்விக் கனவை நனவாக்குதல் என ஒவ்வொரு துறையிலும் உச்சத்தினைத் தொட்டு, சாதனை படைக்கும் வகையில் அவுஸ்திரேலியா இலங்கையர்களுக்கான இரண்டாவது தாய் வீடாக உள்ளது என்றார் அவுஸ்திரேலியாவின் முன்னணி குடிவரவு சட்டவல்லுனர் அவுஸ்திரேலியா கேட்வேயின் டொன் சுசந்த கடுகம்பல

'இந்த 100,000 பேரில் பெரும்பான்மையானோர் மெல்பேர்னில் வசிக்கின்றர். உலகில் மனிதர்கள் வாழத்தகு சிறந்த நகரங்களின் வரிசையில் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக 2015 ஆம் ஆண்டிலும் உயர் இடத்தினைப் பொற்றுள்ளது மெல்பேர்ண். உங்கள் குடும்பத்தவர்கள் நண்பர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியாவை உங்கள் இல்லமாக உணருங்கள்' என்று 2016 ஜனவரி 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய கேட்வேயின் பகிரங்க சந்திப்பு தினத்தில் உரையாற்றுகையில் கடுகம்பல மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள விக்டோரியன் சட்டசபை சபாநாயகர்- டெல்மோ லங்குய்லர் எம்பி இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் லங்குய்லருக்கு 2016 ஜனவரி 9 ஆம் திகதியன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் விசேட வரவேற்பு இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப்புறப் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுக்கிணங்க, 190,000 நிலையான குடிவரவு வெற்றிடங்கள் 2015- 2016 ஆம் ஆண்டில் கிடைக்கக் கூடியதாகவிருக்கும்.
' நிரந்த குடியேற்றத்துக்கான வெற்றிடங்கள் 2015 ஆம் ஆண்டில் உள்ளதைப் போலவே மாற்றமில்லாமல் காணப்படும். அவ்வகையான இடங்கள் 128,550 காணப்படுகின்றன. இதனுள் தொழில் தருனர் அனுசரணை, பொதுவான திறன் மற்றும் வியாபார பிரிவுசுகள் அடங்குகின்றன. 57,400 இடங்கள் குடும்ப குடிவரவுப் பிரிவுகளுக்கு காணப்படுகின்றன. இவற்றுக்கு நெருங்கிய குடும்ப உறவினர்களின் அனுசரணை எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தடன் 565 இடங்கள் விசேட தகைமைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அவுஸ்திரேலியவுடன் நெருங்கிய வர்த்தக காலாசார மற்றும் பிரத்தியேக தொடர்புகளை பேணுவோருக்கானது.' என 2015 ஆம் ஆண்டின் மே மாதம் 12 ஆம் திகதியன்றைய வரவு செலவுத் திட்டத்தின் ஓரங்கமாக குடிவரவு மற்றும் எல்லைப்புறப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்திருந்தார்.

இவ்வாறு அபிவருத்தி நடவடிக்கைகளின் மூலம் பயன்பெறும் முகமாக, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் குடிவரவு ஆலோசகர்களான – அவுஸ்திரேலிய கேட்வே, மெல்பேர்னை தளமாகக் கொண்ட பெயார்பீல்ட் சட்டத்தரணிகள், உத்வேகத்துடனான ஊக்குவிப்பு, முதலீடு, வர்த்தகம், மற்றும் குடிவரவு வாய்ப்புகளை இக்கண்டத்தில் முடுக்கிவிட்டுள்ளனர்.

மெல்பேர்னில் வதியும் மதிப்புமிக்க புலம்பெயர் இலங்கையரான டொன் சுசந்த கடுகம்பல, இலங்கையின் நன்மைக்காக, அவுஸ்திரேலியாவில் வாழும் சகல பின்னணிகளையும் கொண்ட புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையிலான உறவுகளைப் பலப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சுசந்த கடுகம்பல மெல்பர்ன் மொனார்ஷ் பல்கலைக்கழகத்தில் தனது எல்.எல்.பி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் அவர் தெற்கு அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்திலும் அதேபோன்று விக்டோரியா மாநிலத்திலும் மெல்பர்னிலும் பயிற்சியினை மேற்கொண்டார். 1998 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இரண்டாவது பழமையானதும் தெற்கு அவுஸ்திரேலியாவில் 1838 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பழமையானதுமான சட்ட நிறுவனமான நொக்ஸ் மற்றும் ஹாக்ரேவ் சட்டத்தரணிகள் அமைப்பில் குடிவரவு மற்றும் வர்த்தக சட்டப்பிரிவில் இணைந்துகொண்டார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்வோரின் அதிகரித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக ஃபெயார்.ஃபீல்ட் சட்டத்தரணிகள் 2005 ஆம் ஆண்டு இலங்கையில் அவுஸ்திரேலியா கேட்வே அலுவலகமொன்றை ஸ்தாபித்தனர். அது ஜெய்க் ஹில்டன் கோபுரத்தில் இயங்குகிறது. தொழில்திறனுடையவர்களும் வர்த்தகர்களும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கான நம்பகமான சேவைகளை திறமையான சட்டவல்லுனர்கள் மூலமாக உதவி வருகிறது.

இலங்கையர்களுக்கு உதவுவதன் மூலமாக அவுஸ்திரேலியா கேட்வே அமைப்பு கொழும்பில் உள்ள பிரசித்திபெற்ற குடிவரவு ஆலோசனை முகவர் அமைப்பாக திகழ்வதற்கு திரு.கட்டுகம்பல வழிவகுத்தார். அவுஸ்திரேலியாவுடனான முதல்தர குடிவரவு நேச நாடு என்ற வகையில் இலங்கையில் இருந்து பல தொழில்வாண்மையாளர்களும் வர்த்தகர்களும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் போக்கினை நாம் கொண்டுள்ளோம். ஆகவே பொதுமக்களுக்கு சரியான தகவல்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது மிக முக்கியமானது. இது விடயத்தில் பல தவறான அபிப்பிராயங்கள் உள்ளமை பற்றியும் அறிவுறுத்த வேண்டும். குடிபெயர்வு விடயத்தில் பெரும்பாலான இலங்கையர்களுக்கு சரியான தகவலைப் பெற்றுக்கொள்வதில் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன என்றும் திரு.கடுகம்பல தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து பொறியிலாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் கணக்காளர்கள் போன்ற தொழில்வாண்மையாளர்களுக்கு குடிவரவு மற்றும் தொழில்வாய்ப்புகள் காத்துள்ளன. அவுஸ்திரேலிய பட்டப்படிப்பும் இலங்கை அரச பல்கலைக்கழக பட்டப்படிப்பும் சமமானவை என்பதால் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தொழிவாய்ப்பைப் பெறுவதற்கும் குடியேறுவதற்கும் போதுமான தகைமைகள் உள்ளன.

அவுஸ்திரேலியாவானது தரமான கல்வி மற்றும் சுகாதார முறைமைகளையும் கொண்டுள்ளதுடன் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஸ்திரத்தன்மையும் மிகுந்த ஒரு செல்வந்த நாடாகும். அதன் வலுவான பல்கலாசார தன்மையும் நேர வலயமும் ஆசியாவில் இருந்து அதுவும் விசேடமாக இலங்கையில் இருந்தும் குடியேறுவோரை கவரும் வகையில் அவுஸ்திரேலியாவை ஆகர்ஷித்துள்ளது. சிறந்த பொருளாதார செயற்பாடுகளைக் கொண்டிருந்ததால் உலக பொருளாதார மந்த நிலையில் இருந்து தவிர்த்துக்கொண்ட சில செல்வந்த நாடுகளுள் அவுஸ்ரேலியாவும் ஒன்றாக விளங்குகின்றது.

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைப் புலம்பெயர் சமூகம் அவுஸ்ரேலியாவின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பு செய்துள்ளமையை பல வருடங்களாக அவுஸ்ரேலிய மக்கள் அங்கீகரித்துள்ளதுடன் நன் மதிப்பும் வைத்துள்ளனர். திரு.கடுகம்பல சிறந்த சட்டத்தரணிகளுக்கான விருதை பல முறை பெற்றுள்ளவர் என்பது குறிப்படத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டிகளின் போது, இலங்கையின் கிரிக்கெட் அணிக்கு, அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் பாராளுமன்றத்தில் விசேட வரவேற்பு வழங்கப்பட்டது. அம்முறை உலகக் கிண்ணப்போட்டிகளில் 14 சர்வதேச கிரிக்கெட் அணிகள் பங்குபற்றியபோதும், அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வரவேற்பளிக்கப்படும் கௌரவம் இலங்கை அணிக்கு மாத்திரமே கிடைத்து.

'இது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுக்கு நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் இலங்கை புலம்பெயர்வாளர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்துக்கான சான்றாகவும் இது விளங்குகின்றது. இலங்கையின் அபிவிருத்தி. முதலீடு, கல்வி, மற்றும் பயிற்சிகள், நல்லிணக்கம், என்பனவற்றில் பங்களிப்பதன் மூலம் எதிர்கால இலங்கையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றக்கூடிய வகையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பங்காளியாக அவுஸ்திரேலியா காணப்படுகின்றது. இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் அவுஸ்திரேலியா நல்ல நண்பனாக உதவிக் கரம் நீட்டியிருக்கின்றது' என்றார் கடுகம்பல





Australia Gateway Pvt Ltd
Suite 602 Hilton Residencies (Jaic Hilton) 200, Union Place Colombo 2, Sri Lanka
Tel : +94 112 300627 / 0717347670 / 0777347670
Fax: +94 115 755811
Email: admin@australiagateway.com
Website: www.fairfieldlawyers.com


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com