Wednesday, September 23, 2015

தமிழீழத்தில் ஆங்கிலத்தில் தூள் கிளப்பும் முதலமைச்சர்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது. அந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் காப்பாற்றுவோம் என தமிழ் மக்களின் வாக்கு பிச்சையை பெற்றுக்கொண்ட வடக்கின் முதலமைச்சர் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களைக்கொண்ட சபையிலே ஆங்கிலத்தில் தூள் கிளப்புவதை கீழ் உள்ள வீடியோவில் காண முடியும்.

ஐநா மனித உரிமைகள் ஆணயத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக சபையில் பேசிய முதலமைச்சர் விசேடமாக அரசு , துணை ஆயுதக்குழுக்கள் மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.



புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழில் சொன்னால் குந்தியிருக்கும் ஆசனத்திற்கு ஆப்பு இறுகிவிடும் என்ற காரணத்தினால் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கியிருக்கலாம்.

ஆனால் முதலமைச்சர் பேசிய ஆங்கிலம் சபையிலுள்ள எத்தனைபேருக்கு விளங்கியிருக்கும் என்பதுதான் கேள்வி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com